என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்காடு - ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
Byமாலை மலர்4 Aug 2019 6:17 AM GMT (Updated: 4 Aug 2019 6:50 AM GMT)
கேரளாவின் பாலக்காட்டில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர்.
அங்கிருந்த போலீசார் ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டியிடம், லட்டு ஒன்றைக் கொடுத்தனர். வாகன ஓட்டிகளும் திகைப்புடன் இனிப்பை வாங்கினர். அதைத்தொடர்ந்து பேசிய போலீசார், இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அன்பாக எச்சரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து போலீசாரின் இந்த நூதன முறை விழிப்புணர்வு பிரசாரம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X