என் மலர்
செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தவிர அனைத்து அமைப்பையும் மூடி விடுங்கள்- ராகுல்காந்தி ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ். தவிர அனைத்து அமைப்பையும் மூடி விடுங்கள் என்று தன்னார்வலர்கள் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi
புதுடெல்லி:
மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இடது சாரிகள் மாநாட்டை தொடர்ந்து மராத்தா சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் மோதிக்கொண்டனர்.
மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ‘‘ராஜிவ் பாணியில் மோடி கொலை செய்யப்படுவார் என்று எழுதப்பட்டிருந்த கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தை எழுதிய ஐதராபாத்தைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவை புனே போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் வட மாநிலங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை குறி வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தன்னார்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘இந்தியா என்பது ஒரே ஒரு தன்னாவ தொண்டு நிறுவனம் மட்டுமே இருக்கும் இடம். அதுதான் ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது.
மற்றவைகளை எல்லாம் மூடி விடுங்கள். தன்னார்வலர்கள் அனைவரையும் ஜெயிலில் தள்ளுங்கள், குறை கூறுபவர்களை சுட்டுத் தள்ளுங்கள், புதிய இந்தியாவுக்கு வரவேற்பு’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். #Congress #RahulGandhi
மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இடது சாரிகள் மாநாட்டை தொடர்ந்து மராத்தா சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் மோதிக்கொண்டனர்.
மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ‘‘ராஜிவ் பாணியில் மோடி கொலை செய்யப்படுவார் என்று எழுதப்பட்டிருந்த கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தை எழுதிய ஐதராபாத்தைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவை புனே போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் வட மாநிலங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை குறி வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தன்னார்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘இந்தியா என்பது ஒரே ஒரு தன்னாவ தொண்டு நிறுவனம் மட்டுமே இருக்கும் இடம். அதுதான் ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது.
மற்றவைகளை எல்லாம் மூடி விடுங்கள். தன்னார்வலர்கள் அனைவரையும் ஜெயிலில் தள்ளுங்கள், குறை கூறுபவர்களை சுட்டுத் தள்ளுங்கள், புதிய இந்தியாவுக்கு வரவேற்பு’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். #Congress #RahulGandhi
Next Story