என் மலர்
இந்தியா
- பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
- உலகின் பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்றார் ஜே.பி.நட்டா.
அமராவதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் 14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.
இந்தியாவில் 20 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியும் நடக்கிறது.
எங்களிடம் 240 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 170க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 11 ஆண்டுகளில் செயல்திறன் கொண்ட, பொறுப்புணர்வுள்ள அரசு அமைந்துள்ளது.
மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
ஜிஎஸ்டியை 2 அடுக்காக சீர்த்திருத்தம் செய்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார் என தெரிவித்தார்.
- தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்
- தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு மோசடி செய்ததாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி உறுதிமொழி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த விவகாரத்தில் ராகுல் மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 2010-2012 கால கட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறை கூறுவதற்கு பதிலாக உரிய விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை குறித்து விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.
அவர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை தேவை. தேர்தல் ஆணையத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் நான் கேட்கும்போதெல்லாம், அது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.
மேலும் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்திய விதத்திற்காக தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய அவர், தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது. இது அதற்கு சேதத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
- எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன்.
- எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக.
இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த வேளாண் நல சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை.
எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். அவர்கள் மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார்.
அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை மற்றும் மின் உற்பத்தி மையமும் இருக்கிறது.
நாக்பூரில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக" என்று தெரிவித்துள்ளார்.
- கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
- வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் பள்ளியில் போதைபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேதா என்ற பள்ளியில் பள்ளி நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில், மேல் தலத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் Alprazolam என்ற போதைப்பொருள் தயாரிப்பு கடந்த 6 மாதங்களாக நடந்து வந்துள்ளது.
கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.
இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ Alprazolam, ரூ.21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பாக்கான கச்சா பொருட்கள், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெய பிரகாஷ் மற்றும் அவரின் 2 சகாக்கள் கைது செய்யப்பட்டனர்.
- தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தை இன்று மாலை 4.41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்த்தினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
- ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
அகிலேஷ் யாதவ் மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்பியுமான டிம்பிள் யாதவ் உட்பட 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
இன்று விமானம் லக்னோவிலிருந்து டெல்லிக்கு திட்டமிட்டபடி புறப்படுவதற்காக ஓடுபாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.
உடனடியாக விமானிகள், பயணத்தை ரத்து செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் முனையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். செப்டம்பர் 6 ஆம் தேதி, கொச்சியிலிருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறால் கொச்சிக்கு திரும்பியது.
- மற்ற மொழியும் இந்தியும் இணைந்து செழிப்படையும் என்பதற்கு குஜராத்தி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது
- தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை உயர்த்தினர்.
இந்தி மற்ற இந்திய மொழிகளின் எதிரி அல்ல நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இந்தி திவாஸ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, இந்தி மற்ற இந்திய மொழிகளில் எதிரி கிடையாது என்று நான் எப்போதும் கூறுவேன்.
இந்தி மற்ற மொழிகளில் உற்ற நண்பன், அவற்றுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இருக்க இல்லை. இந்தி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.
குஜராத்தை எடுத்துக்கொண்டால் இங்கு மாநில மொழி குஜராத்தி. ஆனால் தொடக்கம் முதல் தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், கேஎம் முன்ஷி ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை ஊக்குவித்தனர். இந்தி மற்றும் குஜராத்தி இணைந்திருக்கும் குஜராத், இரு மொழிகளின் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இந்தி வெறும் பேச்சு மொழி அல்ல. அது அறிவியல், தொழில்நுட்பம், நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய மொழிகளில் செய்யப்படும்போது, பொதுமக்களுடனான தொடர்பு தானாகவே வளரும்" என்றார்." என்று தெரிவித்தார்.
- அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.
இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.
- 1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
- ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.
பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.
இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,
1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
பாஜக இரட்டை எஞ்சின் அரசு அசாமின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் உறுதி பூண்டு உள்ளது.
அசாமின் 13 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. வளர்ச்சி பாரதம் கனவை நனவாக்குவதில் வடகிழக்கு பெரும் பங்கு வகிக்கிறது.
காங்கிரஸ் அசாமை பல தசாப்தங்களாக ஆட்சி செய்தது. ஆனால் பிரம்மபுத்திரா நதியின் மீது 3 பாலங்களை மட்டுமே கட்டியது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் 6 பாலங்களைக் கட்டினோம்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நமது ராணுவம் மிக பலத்துடன் எதிர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
காங்கிரஸ் நமது ஆயுதப்படைகளை அவமதித்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு நிலைப் பாட்டில் காங்கிரஸ் செயல் பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.
நாட்டின் மக்கள் தொகையை மாற்ற சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஊடுருவல்காரர்கள் உங்கள் நிலத்தை அபகரிக்க பாஜக அனுமதிக்காது. மக்கள் தொகையை மாற்றும் சதியை தடுப்போம்" என்று மோடி பேசினார்.
இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைத்தார்.
அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.
- பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
- அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.
இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக அசாம் வந்துள்ளேன். காமாக்யா அன்னையின் ஆசிர்வாதத்தால் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பாரத ரத்னா விருது பெற்ற இந்த நாட்டின் மகத்தான புதல்வரும், அசாமின் பெருமையுமான பூபன் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்ததில் நான் வேதனை அடைகிறேன். நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு மோடி பாரத ரத்னாவை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் என்னை தொடர்ந்து அவமானப் படுத்தி வருகிறார். நீங்கள் என்னை எவ்வளவுதான் திட்டினாலும் தாங்கி கொள்வேன்.
நான் சிவ பெருமானின் பக்தன். நான் அவதூறுகளின் விஷத்தையும் அருந்தி அதை அகற்றி விடுவேன். ஆனால் வேறு யாரையாவது அவமானப்படுத்தினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது சரியா, தவறா என்று மக்களாகிய நீங்களே கூறுங்கள்" என்று பேசினார்.
இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைக்கிறார்.
அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.
- இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா அனுமதித்ததற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஒவைசி கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து பேசிய ஒவைசி, "அசாம் முதல்வர், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் அவர்கள் அனைவருக்கும் எனது கேள்வி என்னவென்றால், பஹல்காமில் நமது 26 குடிமக்களின் மதத்தைக் கேட்டு அவர்களைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியை விளையாட மறுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா?
26 உயிர்களை விட பணம் மதிப்புமிக்கதா? நேற்றும் அந்த 26 குடிமக்களுடன் நாங்கள் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் நிற்போம்" என்று தெரிவித்தார்.
- திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு உறங்குகின்றனர்.
திருப்பதி மலைகள் மற்றும் பீமிலி சிவப்பு மணல் திட்டுகளின் இயற்கை பாரம்பரியம் உட்பட நாட்டில் உள்ள 7 இடங்கள் உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்காக யுனெஸ்கோவால் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
திருப்பதியில் ஏழுமலையான் வசித்த 7 மலைகளான சப்தகிரிகள் விஷ்ணு பகவான் ஓய்வெடுத்த ஆதிசேஷனின் 7 பாதங்கள், அந்த 7 மலைகள், சேஷாத்ரி, நிலாத்ரி, கருடாத்ரி அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி ஆகியவை புனிதமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு அடியிலும் புனிதம் தெளிவாகத் தெரியும். திருப்பதி மலைகளில் உள்ள ஒவ்வொரு மலைக்கும் சொந்த வரலாறு உள்ளது.
ஆன்மீகத்தையும் இயற்கை அழகையும் இணைக்கும் திருப்பதி மலைகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு புகலிடமாகும். அவை அரிய தாவர மற்றும் விலங்கு இனங்களின் தாயகமாகும். இங்குள்ள காலநிலை பன்முகத்தன்மை கொண்டது.
திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன.
திருப்பதி கோவிலில் இருந்து கிருஷ்ணதேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு உறங்குகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் ஜில்லென்று குளிர்ந்த காற்று வீசுகிறது. வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 82, 149 பேர் தரிசனம் செய்தனர். 36,578 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






