என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharastra"

    • மகாராஷ்டிரா மட்டுமின்றி பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
    • மாநில அரசுகள் இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின், அம்லா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான சவிதா பாரத். இவர் பிரசவத்திற்காக கடந்த 19ஆம் தேதி மொகதா தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து ஜவஹர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சவிதாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நேற்று (நவ.24) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    தாய், சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் சவிதாவின் கிராமத்திற்கு 2 கி.மீ தொலைவிற்கு முன்னரே வாகனத்தை நிறுத்தி, அவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளார் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இதையடுத்து சவிதா, அவரது தாய், மாமியார் என மூவரும் தங்களது கிராமத்திற்கு நடந்தே சென்றுள்ளனர். ஆனால் இடையே சவிதாவால் நடக்க முடியவில்லை. இதனை அவ்வழியே சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அந்த தாய்க்கு ஏதாவது ஆனால், அந்த குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? அரசு பதில் சொல்லவேண்டும் என கேள்விகளை எழுப்பியிருந்தார். 

    இந்த வீடியோ வைரலான நிலையில் மொகதா தாலுகாவின் சுகாதார அலுவலர் டாக்டர் பௌசாஹேப் சத்தார், "ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சம்பவம் குறித்து அறிந்த உடன் அப்பெண்ணின் வீட்டிற்கு மருத்துவக்குழு சென்று பார்த்ததாகவும், தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும்" தெரிவித்தார். 

    புதிதாக குழந்தை பிரசவித்தவர்கள் இதுபோல இறக்கிவிடப்படுவது இது முதல்முறை அல்ல. அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலரும் இதுபோன்ற மனிதாபிமானம் அற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் மாநில அரசுகள் இதுபோன்ற செயல்பாடுகளில் மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருகிறது. 

    • இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
    • பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.

    சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.

    • நாங்கள் பிளவுபட்டோம், அதனால்தான் நாங்கள் கஷ்டப்பட்டோம்.
    • அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை.

    உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹஸ்டிங்ஸில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டார். நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஆதித்யநாத், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி- மகாராஷ்டிராவை "லவ் ஜிகாத் மற்றும் லேண்ட் ஜிஹாத் தளமாக" மாற்றுவதாக குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் பிரிந்ததால், இந்த நாடு பிளவுபட்டது, இந்துக்கள் பிரிந்ததால் கொல்லப்பட்டார்கள். அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிந்துவிடாதீர்கள். நாங்கள் பிளவுபட்டோம், அதனால்தான் நாங்கள் கஷ்டப்பட்டோம்."

    "அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. அது இறுதியாக 2019 இல் மோடியின் தலைமையில் தான் தீர்க்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் அமராவதியில் தவறு செய்யாதீர்கள், மீண்டும் பிரிந்தால், விநாயகப் பெருமானுக்கு பூஜை போடப்பட்டு, லவ், லேண்ட் ஜிகாத் என்ற பெயரில், இங்குள்ள நிலங்கள் கைப்பற்றப்படும்."

    "மகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள், ஏழைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றத் துணிந்தவர்களின் டிக்கெட்டை எமராஜா ரத்து செய்திடுவார்," என்று தெரிவித்தார்.

    மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று அமல்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தடையினால் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும், 3 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. #Maharastra #MaharastraPlasticban #Rs15kcroreloss

    மும்பை:

    சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பொருட்களுக்கு மகராஷ்டிராவில் நேற்று (சனிக்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டது. அதன்படி கடைக்காரர்களும், பொது மக்களும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட கரண்டி, தகடுகள், பாட்டில்கள் மற்றும் தெர்மோகோல் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    பாலின்தீன் பைகளை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் ஏராளமான குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். நாளை முதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்க உள்ளது. முதல் தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் இரண்டாவது தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    பிளாஸ்டிக் தடையால் பாத்திரத்தில் மீன் வாங்கி செல்லும் பெண்கள்

    இந்நிலையில், இந்த பிளாஸ்டிக் தடையினால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்படையும் என பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தடையினால் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும், அந்த தொழிலை நம்பியிருக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த சங்கத்தின் தேசிய பொது செயலாளர் நீமித் புனமியா தெரிவித்துள்ளார். 

    இதனால் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவதோடு, வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாது என பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக மும்பை வியாபாரிகள் பாலிதீன் தடைக்கு மேலும் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால் மராட்டிய மாநில அரசு அதை ஏற்க மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Maharastra #MaharastraPlasticban #Rs15kcroreloss
    ×