என் மலர்
இந்தியா
- ராகவ் சதா- நடிகை பரினீதி சோப்ரா கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
- இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பரினீதி சோப்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில் "இப்போ அவன் வந்துட்டான்! எங்களுடைய பையன்.
முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் நினைவில் கொள்ளவே முடியாது! கைகள் நிரம்பியுள்ளன, எங்களுடைய இதயங்கள் நிறைந்துள்ளன. முதலில் நாங்கள் ஒருவருக்கொருவதாக இருந்தோம். இப்போது எங்களுக்கு எல்லாம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
- கணவனை விட்டு கள்ளக்காதலுடன் சில காலம் தங்கியபோது கர்ப்பம்.
- வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தையாக கள்ளக்காதலன் விரும்பியதால் ஏற்பட்ட விபரீதம்.
கள்ளக்காதலில் கர்ப்பம்: கணவன், 2 குழந்தைகளுடன் வாழ விரும்பிய பெண்- கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு/ An Extramarital Affair Pregnancy Then Double Murder In Delhi
டெல்லியில் கள்ளக்காதலியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, கள்ளக்காதலன் விபரீத முடிவு எடுத்ததால் இருவருடைய உயிரும் பறிபோனது.
மத்திய டெல்லியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஷாலினி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக ஷாலினுகும் ஆஷு என்ற சைலேந்திரா (வயது 34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது, ஆஷு உள்ளூர் கிரிமினல் எனத் தெரிகிறது.
கள்ளக்காதலால் ஷாலினி கர்ப்பம் அடைந்துள்ளார். ஷாலினி வயிற்றில் உள்ள குழந்தைக்கு தான் தந்தையாக போகிறோம் என ஆஷு சந்தோசம் அடைந்துள்ளார். அந்த நிலையில்தான் ஷாலினியும், ஆகாஷும் சமரசம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
தன்னை விட்டு ஷாலினி பிரிந்து செல்ல முடிவு செய்ததால் கள்ளக்காதலி மற்றும் அவரது கணவனை தீர்த்துக்கட்ட ஆஷு முடிவு செய்துள்ளார்.
நேற்றிரவு ஷாலின் தனது கணவன் இ-ரிக்ஷாவில் தாயாரை பார்க்க சென்றுள்ளார். இ-ரிக்ஷாவில இருவரையும் பார்த்த ஆஷு கத்தியால், கணவனை குத்த முயன்றுள்ளார். அப்போது, ஷாலின் கணவர் சுதாரித்து தடுக்க முயன்றுள்ளார். இதனால அவர் மீது கத்தி குத்து விழுந்துள்ளது. இருந்தாலும் பெரிய காயமின்றி தப்பிவிட்டார்.
உடனே, ரிக்ஷாவில் இருந்து ஷாலியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். அப்போது ஆகாஷ் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆஷு அவரை வெறிக்கொண்டு தாக்க முயன்றுள்ளார். ஆனால், ஆகாஷ் நேர்த்திய தடுத்து கத்தியை அவரிடம் இருந்து பறித்துள்ளார். அத்துடன் ஆஷுவை சரமரியாக குத்தியுள்ளார். இதில் ஆஷுவும் படுகாயம் அடைந்துள்ளார்.
பின்னர் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஷாலினி மற்றும் அவரது கள்ளக்காதலன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகாஷ் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சமப்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது.
- அங்கு இடம் கிடைக்காததால் தனியாக போட்டியிட முடிவு.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக- ஜே.டியு.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத இருவருக்கும வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதில் அக்கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இம்ரான் பெயரும் இடம் பிடித்துள்ளது. இக்கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தூதுவிட்டது. ஆனால், தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்காததால் தனியாக போட்டியிட முடிவு செய்தது.
- பல்வேறு கல்வித் திட்டங்களுக்காக மத்திய அரசு 1466 கோடி ரூபாய் வழங்காமல் உள்ளது.
- இந்த நிதியை பெறுவதற்காக பிரதமர் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக மந்திரி தகவல்.
இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்று கேரளா. இயற்கை பேரிடர், மத்திய அரசு ஒதுக்கும் நிதி ஆகியவற்றில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக கேரள மாநில அரசு, மத்திய அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
SIR போன்றவற்றில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலையை கொண்டு வருகிறது. மத்திய அரசின் கல்வி திட்டங்களையும் ஏற்றதில்லை.
இந்த நிலையில் பிரதமர் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக, கேரள மாநில பொது கல்வித்துறை மந்திரி வி. சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தகுதியானவர். இதனால் கேரளா இதில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய தேவையில்லை. கேரள அரசின் பல்வேறு கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு 1466 கோடி ரூபாய் வழங்காமல் இருக்கிறது. கேரள மாநில குழந்தைகள் இந்த நிதியை பெற தகுதியானவர்கள்.
நிலுவையில் உள்ள நிதியை பெறுவதற்காக மட்டுமே இந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. நிதியை பெற்றால் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியும். 7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சுமூகமாக சம்பளம் வழங்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
எழுச்சி இந்தியாவுக்கான பிரதமர் பள்ளிக் கூடங்கள் {PM Schools for Rising India (PM SHRI)} திட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாகும்.
இந்தியா முழுவதும் உள்ள 14,500 பள்ளிகளை இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளார்.
- கட்சியில் சீட் தருவாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.
- சீட் மறுக்கப்பட்டதால், விரக்தியில் சட்டையை கிழித்து அழுது புரண்டுள்ளார்.
பீகார் தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பணம் வாங்கிக் கொண்டு அநீதி செய்வதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி மதன் ஷா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் இன்று காலை லல்லு பிரசாத் யாதவ் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். தரையில் புரண்டு இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? என சட்டையை கிழித்துக் கொண்டு அழுது புலம்பினார்.
பிறகு அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட சீட் தருவதாக கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறி இருந்தார். நானும் எனது தொகுதியில் பணிகளை தொடங்கி விட்டேன். ஆனால் திடீரென ரூ.2.7 கோடி ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். என குழந்தைகளின் திருமணத்தை நிறுத்தி வைத்து விட்டு பணத்தை தயார் செய்தேன். தற்போது சீட் தராமல் எல்லாம் முடிந்து விட்டது. குறைந்த பட்சமாக எனது பணத்தையாவது திருப்பி தர வேண்டும்
இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இவர் மதுபான் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். அதில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது சீட் மறுக்கப்பட்டுள்ளது.
- 'சாவர்க்கரும், தாங்கேவும் தான் என்னை தோற்கடித்தார்கள்' என்று அம்பேத்கரே தன் புத்தகத்தில் எழுதினார்.
- அறிவியலைப் படித்தபோதிலும் , மூட நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவராக நீங்கள் இருக்கக் கூடாது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியபோது, "ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் குறித்து மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். பாபாசாகேப் அம்பேத்கரையும், அவர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையும் வரலாற்று ரீதியாக எதிர்த்தவர்களுடன் நீங்கள் ஒருபோதும் சேரக் கூடாது.
சரியானவர்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். சமூக மாற்றத்திற்காக நிற்பவர்களுடன் நில்லுங்கள். சமூக மாற்றத்தை எதிர்ப்பவர்களுடனோ அல்லது சனாதனிகள் உடனோ சேராதீர்கள்.
ஒரு சனாதனி, இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய செயல், சனாதனிகளும் பழமைவாதிகளும் இன்னும் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
தலித்துகள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டும். அப்போதுதான் சமூகம் மாற்றத்தின் பாதையில் செல்கிறது என்று நம்மால் சொல்ல முடியும்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் அம்பேத்கரின் அரசியலமைப்பை எதிர்த்தனர்; இன்றும் எதிர்த்து வருகின்றனர். எனவே, நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சமூகத்தைப் புரிந்து கொள்ள அம்பேத்கர் அறிவைப் பெற்றார், அதை சமூகத்தை மாற்றுவதற்காக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார்.
அம்பேத்கரைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது என்று அவர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், 'சாவர்க்கரும், தாங்கேவும் தான் என்னை தோற்கடித்தார்கள்' என்று அம்பேத்கரே தன் புத்தகத்தில் எழுதினார்.
சங்க பரிவாரின் பொய்களை அம்பலப்படுத்த இதுபோன்ற உண்மைகளைச் சமூகத்தின் முன் வைக்க வேண்டும்.
அதனால் பகுத்தறிவும், அறிவியல் சிந்தனையும் வளரும் என்று நம்புகிறேன். அறிவியலைப் படித்தபோதிலும் , மூட நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவராக நீங்கள் இருக்கக் கூடாது." என்று தெரிவித்தார்.
- பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார்.
- அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாலக்காடு:
உடல் சோர்வு, தூக்க கலக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஒருவருக்கு கொட்டாவி வருவது இயல்புதான். ஆனால் அந்த கொட்டாவியே ஒருவருக்கு, தான் அனுபவிக்கும் கஷ்டத்தை வாயால் சொல்ல முடியாத அளவுக்கு திறந்த வாயை மூடமுடியாத திடீர் சோகத்தை தந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட அவரால் வாயால் பேசி சொல்ல முடியவில்லை. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாலக்காடு ரெயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி பேசிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து அதேரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்து தனது ஊருக்கு திரும்பினார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில்,
'வாலிபருக்கு கொட்டாவி விடும்போது வாய் மீண்டும் மூட முடியாமல் போன நிலைக்கு ''டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் எனப்படுவது ஆகும். அதாவது தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்று பெயர். கீழ்தாடை எலும்பின் பந்துபூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடும் நிலையே இது. இதனால் கொட்டாவி விடும்போது வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும். இதன்காரணமாக வலி, பேசவும், வாய் மூடவும் சிரமம் ஏற்படும். அதிகமாக கொட்டாவி விட்டாலும், விபத்துகள் அல்லது சில நோய்களாலும் இது ஏற்படலாம். டாக்டரிடம் சிகிச்சை பெற்றால் மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற முடியும். ஆனால் சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்' என்றார்.
- வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
- ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த பேரணியை நடத்தியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரி மாணவர் குழுக்கள் நேற்று வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியைத் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத் தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தியது.
- அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள்.
- 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசை ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்றொடர்.
நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) எடுத்த நடவடிக்கையும் இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது.
நவம்பர் மாதம் பாகிஸ்தானுடனான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட போதும் இந்திய அணி துபாயில் பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடியிருந்தது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணி மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ஆபிகானிஸ்தானிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அரசும் விளையாட்டை விட நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் அப்பாவிகளின் இரத்தத்தை குடித்து வளர்ந்து வருகிறது. அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள். பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்ய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு சிறப்பானது. பிசிசிஐ மற்றும் இந்திய அரசு விளையாட்டுகளை விட நாட்டை முன்னுரிமைப்படுத்துவது குறித்து அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்.
மற்றொரு பதிவில், பிரியங்கா சதுர்வேதி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒற்றுமையாக இலங்கை அணியும் தொடரிலிருந்து விலகும் என்று நம்புகிறேன். 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. பிசிசிஐ போலல்லாமல், மற்ற ஆசிய நாட்டு கிரிக்கட் வாரியங்கள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்கும் என்று நம்புகிறேன்.
எனது கருத்துக்கள் அரசியலைப் பற்றியது அல்ல, இழந்த உயிர்களைப் பற்றியது. 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசாங்கத்தையும் பிசிசிஐயையும் ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர். ஆனால் அரசியலை விலக்கி வைப்பது பற்றியது அல்ல, பயங்கரவாதத்தை விலக்கி வைப்பது பற்றியது" என்று சுட்டிக்காட்டினார்.
- சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை
- ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தெலுங்கானாவில் மகன் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். BC சமூகத்தை சேர்ந்த இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணி என்ற பட்டியலின (ST) பெண்ணை காதலித்து மணந்தார்.
சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை. மகன் மற்றும் மருமகள் மீது அவர் வஞ்சத்துடன் இருந்து வந்துள்ளார்.
தற்போது ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சட்டையாவின் சாதிவெறி ரத்த வெறியாக மாறியுள்ளது. நேற்று(சனிக்கிழமை) கர்ப்பிணி மருமகளை அவர் இரக்கமின்றி கோடரியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சட்டையாவை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது
- நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வழக்கறிஞர் ஒருவருக்கும் குரூப்-ஏ இந்திய ரயில்வே அதிகாரியாக பணியாற்றும் பெண்ணுக்கும் கடந்த 2010 இல் நடந்த திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.
தனது மனைவி தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனைவி அதை மறுத்தார்.
இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம், கணவரின் வாதங்களுடன் உடன்பட்டு விவாகரத்து வழங்கியது. இருப்பினும், நிரந்தர ஜீவனாம்சம் கோரிய மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி ரூ. 50 லட்சம் கோரியதும் தெரியவந்த நிலையில் இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், "உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே பராமரிப்பு கோர வேண்டும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளர் (மனைவி) நிதி ரீதியாக நிலையானவர்.
அவர்கள் குறுகிய காலம் தான் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
- ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
- பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது நான்தான் என 52-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை 2 முறையும், ராணுவ தளபதியை 2 முறையும் டிரம்ப் சந்தித்த பிறகும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.
ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக விவகாரங்களைப் பேசும் மோடி, இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்?
பீகாரில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க. ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றும், நிதிஷ்குமார் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.






