என் மலர்
இந்தியா
- ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
- பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது நான்தான் என 52-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை 2 முறையும், ராணுவ தளபதியை 2 முறையும் டிரம்ப் சந்தித்த பிறகும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.
ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக விவகாரங்களைப் பேசும் மோடி, இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்?
பீகாரில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க. ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றும், நிதிஷ்குமார் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
- இதுகுறித்து சித்தராமையா விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்த சித்தராமையா, ஆர்எஸ்எஸ்க்கு மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் யாரும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த தடை குறித்து ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என். ராஜன்னா இதை விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைதானங்களிலும் சாலைகளிலும் தொழுகை நடத்துவதற்கு முஸ்லிம்கள் அரசிடம் அனுமதி பெறுவார்களா ? அல்லது முதலில் அனுமதி பெறச் சொன்னால் அவர்கள் கேட்பார்களா?, அமல்படுத்தக்கூடிய விதிகளை மட்டுமே அமல்படுத்த வேண்டும்.
இந்த விதி எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பார்போம்" என்று தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பதவியில் இருந்து ராஜன்னா நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
- நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
என்டிஏ கூட்டணி ஏற்கனேவே 3 வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி(ஜேஎம்எம்) கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி பீகாரில் ஜேஎம்எம் ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி ஆகிய ஆகிய ஆறு இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.
பீகாரில் சில இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஜே.எம்.எம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட கட்சி முடிவு செய்தது.
நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றிருக்கும் சூழலில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
- போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
- அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.
பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
- வீட்டில் தனியாக இருந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு.
- கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து நீக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு.
கேரள மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் செயின் பறித்த சம்பவத்தில் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கூத்துபரம்பா நகராட்சி 4ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பி.பி. ராஜேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.
சம்பவத்தன்று ஜானகி என்ற 77 வயது மூதாட்டில் வீட்டில் தனியாக இருந்த நிலையில், சமைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஹெல்மேட் அணி ராஜேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மூதாட்டி சமையலில் மும்மூரமாக இருந்த நிலையில், செயினை பறித்துள்ளார். இதனால் பாட்டி சத்தம் போட அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடிவந்தனர். இருந்தபோதிலும், ராஜேஷ் அவர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியபோது, ராஜேஷ் என கண்டுபிடித்து கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுதத உள்ளனர். இதனையறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதிர்ச்சி அடைந்தது. அத்துடன் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
- ரவீன் மற்றும் யோகானந்தா என்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
- மொத்தம் சுமார் 55 கிராம் தங்க நகைகளுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டு, அரிவாளால் அவரது இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்தக் சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
காவல்துறை தகவல்படி, உஷா மற்றும் வரலட்சுமி என்ற இரண்டு பெண்கள் செப்டம்பர் 13 அன்று விநாயகர் சதுர்த்தி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பிரவீன் மற்றும் யோகானந்தா என்ற இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளைப் பறிக்க முயன்றனர்.
பயந்துபோன உஷா தனது சங்கிலியைக் கொடுத்த நிலையில், வரலட்சுமி எதிர்த்தபோது, யோகானந்தா அரிவாளால் அவரைத் தாக்கி அவரது கையின் இரண்டு விரல்களைத் துண்டித்தார்.
மொத்தம் சுமார் 55 கிராம் தங்க நகைகளுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
போலீசார் அவரை பல வாரங்களாக தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 74 கிராம் திருட்டு தங்க நகைகள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களுக்கு ஏற்கனவே கொலை வழக்கு உட்பட சில குற்றப் பின்னணிகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- மேற்கு வங்கத்தில் SIR பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டம்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி SIR-ஐ கடுமையாக விமர்சித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சரும், மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவருமான சுகந்தா மஜும்தார் "மேற்கு வங்கத்தில் SIR பணியின்போது மத்திய படைகள் குவிக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மம்தா கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். ஸ்ரீராம்பூர் மக்களவை தொகுதி திரிணாமுல் கட்சி எம்.பி. கல்யாண் சிங், "மந்திரியான சுகந்தா மஜும்தாரிடம், CISF தோட்டாக்கள் அவர்களை தாக்கும் எனச் சொல்லுங்கள். உங்களுக்கு தையரிம் இருந்தால் ஸ்ரீராம்பூருக்கு வாரங்கள். வந்த பின்னர் எப்படி வீடு திரும்புவீரக்ள் பார்ப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுகந்தா மஜும்தார் சவாலை ஏற்று, பாஜக தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிளில் பேரணி சென்றார். பின்னர் தொண்டர்களிடம் பேசும்போது "பாஜக வன்முறை அரசியலை நம்புவதில்லை. ஆனால், கல்யாண் பானர்ஜி அரசியல் விளையாட்டு விளையாட விரும்பினா், நான் நம்முடைய தொண்டர்களை அதே விளையாட்டை விளையாட கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
- ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
- விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதாபத்தில் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கி இருந்து மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
ரஹமான் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இவரது அட்டூழியம் தினமும் நீடித்தது.
இதனால் 3 மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ரஹமான் மாணவிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் 5 போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சஞ்சல்குடா ஜெயிலில் அடைத்தனர்.
ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் விடுதிக்கு சென்று அங்கு தங்கி உள்ள மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது காவலாளி மிரட்டி பலாத்காரம் செய்ததாக சில மாணவிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதை கேட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
காவலாளி ரஹமான் மேலும் சில மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஏற்கனவே விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி நிர்வாகிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.
அதிக அளவில் பாலியல் புகார்கள் வந்ததால் போலீசார் ரஹ்மானை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாஜக அல்லாத அரசு இருந்தால் மாநில அந்தஸ்து கிடையாது என்றால் பாஜக அதை சொல்ல வேண்டும்.
- பாஜக உடன் மற்றவர்கள் கூட்டணி அமைத்ததால் மாநிலம் சீரழிந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை விரைவுப்படுத்தும் நோக்கத்தில் பாஜக-வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரித்து இரண்டையும் யூனியன் பிரதேசமாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு உறுதி அளித்தபோதிலும், வழங்காமல் இழுத்தடிக்கிறது.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மாநில அந்தஸ்துக்காக பாஜக உடன் கூட்டணி வைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அளித்த வாக்குறுதிகளிலும் ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வருவதைப் பொறுத்து மாநில அந்தஸ்து சார்ந்துள்ளது என்று ஒருபோதும் கூறவில்லை.
ஒருவேளை ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசு இருந்தால், மீண்டும் மாநில அந்தஸ்து இல்லை என்றால், பாஜக நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசாங்கம் இருக்கும் வரை, உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று அவர்கள் எங்களிடம் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முடிவு செய்வோம்.
தேசிய மாநாடு கட்சி, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. 2015ஆம் ஆண்டு பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சியமைத்ததில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் இன்னும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த கூட்டணியில் ஜம்மு-காஷ்மீர் எப்படி சீரழிந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்கள் செய்த தவறை மீண்டும் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
- வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு மேலுள்ள தளங்களுக்கும் பரவியது.
- அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை
டெல்லியில் மாநிலங்களவை எம்.பி.களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு மேலுள்ள தளங்களுக்கும் பரவியது. உடனே உள்ளிருந்த மக்கள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவரிக்கப்பட்டது.
மதியம் 1:20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தன.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதுவரை மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெற்றி இந்தியாவின் பழக்கமாகிவிட்டது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.
- பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல. இந்தியாவின் மூலோபாய நம்பிக்கை என்பதை நிரூபித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சரோஜினி நகரில் பிரம்மோஸ் விண்வெளி யூனிட்டில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரிக்கப்பட்ட முதற்கட்ட ஏவுகணைகளை தொழிற்சாலையில் இருந்து வெளியேறுவதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
இந்தியாவின் எழுச்சி வலிமை சின்னமாக பிரம்மோஸ் திகழ்கிறது. வெற்றி இந்தியாவின் பழக்கமாகிவிட்டது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.
பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல. இந்தியாவின் மூலோபாய நம்பிக்கை என்பதை நிரூபித்துள்ளது. ராணுவத்தில் இருந்து கடற்படை, விமானப்படை என நம்முடைய பாதுகாப்புப் படைக்கு இது முக்கிய தூணாகியுள்ளது.
பிரம்மோஸின் வளையத்திற்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குல பகுதியும் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது நடந்தது வெறும் டிரைலர்தான். இந்தியாவால் பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்றால், நேரம் வந்தால்.., மேற்கொண்டு நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் எல்லோரும் அறிவாளிகள். புரிந்து கொள்வீர்கள். இதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
- அமெரிக்கா விதித்த 50சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.
- நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017இல் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை ஜிஎஸ்டி கொண்டிருந்தது. 8 ஆண்டுகளாக இவ்வரி மாற்றம் இன்று வசூலுக்கப்பட்டு வந்த நிலையில் இந்நிலையில் அண்மையில் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்பட்டது.
கடந்த மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. மேலும் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இன்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.
அதில் பேசிய நிர்மலா சீதாராமன், "நவராத்திரி முதல் நாள் அமலான இந்தச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையின் பலன்கள் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளன.
செப்டம்பரின் கடைசி ஒன்பது நாட்களில் மட்டும் பயணிகள் வாகன விற்பனை 3.72 லட்சம் அலகுகளாகவும், இருசக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் அலகுகளாகவும் உயர்ந்துள்ளது. டிவி விற்பனை 30-35% ஆகவும், ஏ.சி. விற்பனை இருமடங்காகவும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிச் சுமையை சமாளிக்க இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக என்ற கேள்விக்கு நிர்மா சீதாராமன் பதிலளித்தார்.
அதாவது, இந்த சீர்த்திருத்தம் குறித்து கடந்த ஒன்றை வருடங்களாக திட்டமிடப்பட்டது என்றும் எனவே வர்த்தக போருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
செய்தியாளர்களிடம் அஸ்விணி வைஷ்ணவ் பேசுகையில், "ஜி.எஸ்.டி. குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
பியூஷ் கோயல் பேசுகையில், "ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் உள்நாட்டு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
8 நாட்களில் 1.65 லட்சம் மாருதி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. மகேந்திரா கார் விற்பனை 50% அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா கார்கள் விற்பனையாகியுள்ளன" என்று தெரிவித்தார்.






