என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட் புகைப்பவர்"

    • சிகரெட்டுகளுக்கு 1,000 குச்சிகளுக்கு ரூ.200-735 வரை இருந்த கலால் வரி ரூ.2,700–11,000 ஆக உயரும்
    • புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% வரை நான்கு மடங்கு அதிகரிக்கும்

    மத்திய அரசின் கலால் சட்டத்திருத்தத்தால், ஒரு சிகரெட் விலை ரூ.18-ல் இருந்து ரூ.72ஆகவும், புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% ஆகவும் உயர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

    மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது சட்டமாக மாறும்பட்சத்தில் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைகளின் விலைகள் உயரும். நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகப்படுத்திய இந்த மசோதா, சிகரெட் மற்றும் சுருட்டுகள் முதல் ஹூக்கா மற்றும் மெல்லும் புகையிலை வரை பல்வேறு புகையிலை பொருட்களின் மீதான கலால் வரிகளை திருத்துகிறது. அதாவது இந்தப் பொருட்கள் மீதான கலால் மற்றும் வீத வரியை உயர்த்துகிறது.

    இந்தத் திருத்தத்தின் கீழ், சிகரெட்டுகளுக்கு 1,000 குச்சிகளுக்கு ரூ.200-735 வரை இருந்த கலால் வரி ரூ.2,700–11,000 ஆக உயரும், இது வகை மற்றும் நீளத்தைப் பொறுத்து இருக்கும். மெல்லும் புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% வரை நான்கு மடங்கு அதிகரிக்கும், ஹூக்கா புகையிலை 25% முதல் 40% வரை உயரும்.

    மேலும் புகைபிடிக்க பயன்படுத்தும் குழாய்கள் மற்றும் புகையிலைக் கூறுகளின் கலவைகளுக்கான வரி ஐந்து மடங்கு அதிகரிக்கும், அதாவது 60% முதல் 300% வரை அதிகரிக்கும். இன்று ரூ.18 விலையில் உள்ள ஒரு சிகரெட்டின் விலை விரைவில் ரூ.72 ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களில் தெர்மல் கேமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இ.சிகரெட் பிடிக்கவும் அனுமதி இல்லை. இருந்தும் சிலர் மறைவாக புகை பிடிக்கின்றனர்.

    அதை தடுக்க தடை செய்யப்பட்ட இடங்களில் தெர்மல் கேமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது. அதி தொழில் நுட்பம் வாய்ந்த 300 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் ரோட்டில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.

    உலகில் முதன் முறையாக கடந்த 1970-ம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தான் புகையிலைக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் மூலம் அங்கு புகை பிடிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்தது. #tamilnews

    ×