என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 19-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ்பெற 22-ந்தேதி கடைசிநாள் ஆகும். ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க. வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் சீமான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    வேலூர் தேர்தல் ரத்தாவதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தீபலட்சுமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளார். இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுரேஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.


    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வேலூர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு முன்பாகவே முடிவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சந்தித்து பிரசாரத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்க உள்ளோம்.

    மத்திய அரசின் பட்ஜெட், தொலைதூர காலத்தை கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறந்த பட்ஜெட்டாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 37 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர். அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை திசை திருப்பி வென்றனர்.

    ஆனால் இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும், அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் சிந்தித்து நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது? தற்போது தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுகிறார்? என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்கள்.
    துரைமுருகன்

    மத்தியில் நடைபெறும் மோடி அரசுக்கும், மாநிலத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.

    இவ்வாறு துரைமுருகன் பேட்டிக்கு ஏ.சி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நின்றுபோனதற்கு நாங்கள் காரணமல்ல என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    எங்களால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நின்றுபோனது என்று கூறுவது சரியல்ல. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனையிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று வருமான வரித்துறையினர் எழுதி கொடுத்து சென்றனர். எங்களுக்கும், வருமான வரித்துறையினருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தற்காலிகமான ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, லஞ்ச லாவண்யம், அதிகமாக உள்ளது. இவற்றை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் எந்த தொழிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெரிய தொழில் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்று விட்டன.

    மத்திய பட்ஜெட் குறித்து நன்கு படித்த அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்பட அனைவரும் மத்திய பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு உதவுவது போன்றுதான் உள்ளது. பட்ஜெட்டை பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தி.மு.க. சார்பில் போட்டியிடும் எனது மகன் கதிர் ஆனந்த் வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மகேந்திரசிங் டோனியை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27-ந்தேதியுடன் அந்த மாநில சட்டசபை பதவி காலம் முடிகிறது.

    இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மராட்டியம், அரியானா மாநிலங்களில் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    அந்த இரு மாநிலத்தோடு ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலும் முன்னதாக நடத்தப்படுகிறது. 3 மாநிலத்திலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா உள்ளது.

    இந்த நிலையில் ஜார்க் கண்ட் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனியை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    டோனி தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பையை வென்று உள்ளது. 2007-ம் ஆண்டு 20 ஓவர் கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி கோப்பையையும் அவரது தலைமையிலான இந்திய அணி வென்றது. புகழ் பெற்ற அவரை ஜார்க்கண்ட் தேர்தலில் பயன்படுத் திக்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்.) ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமாளிக்க டோனி அவசியம் என்பதை பா.ஜனதா உணர்ந்துள்ளது. இதனால் அவரை கட்சியில் சேர்த்து டிக்கெட் கொடுக்க முடிவு செய்துள்ளது.

    ஒருவேளை அவர் பா.ஜனதாவில் சேர மறுத்து விட்டால் பிரசாரத்துக்கு பயன்படுத்தவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியோடு டோனி ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வுக்கு பிறகு அவரை தங்களது கட்சிக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.


    இதுதொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் டோனியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் பா.ஜனதாவில் இணைவார். பா.ஜனதாவில் சேருவது எப்போது என்பது குறித்த தேதியை டோனிதான் முடிவு செய்வார்.

    அவர் எங்கள் கட்சியில் சேராவிட்டாலும் எங்களுக்கு உதவியாக இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். ஆனால், பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்திருந்தது.

    இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக இன்று அறிவித்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

    இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலின்போது ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-8-2019 அன்று நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது.

    இதையொட்டி அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தன.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை முறையாக அரசிதழில் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அன்றைய தினமே வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 18-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    வேட்புமனுக்கள் 19-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான இறுதிநாள் 22-ந்தேதியாகும். அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    ஆகஸ்டு 5-ந்தேதி வாக்குப் பதிவும், 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. 11-ந்தேதி தேர்வு நடத்தை விதிகள் முடிவுக்கு வரும்.

    இந்த நிலையில் வேலூர் தொகுதியில் நடந்து வரும் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர் 102 பேர் உள்பட 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    தேர்தலில் வாக்களிக்க 690 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில் 133 வாக்குச்சாவடி பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 133 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்தல் பணியில் 3,200 மத்திய, மாநில அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 1,880 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வி.வி. பேட்டுகளும் பயன்படுத்தப்படும்.

     

    வேலூர் தொகுதி

    தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தவும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் 18 பறக்கும்படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படும்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 11-ந்தேதி வரை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மனு நீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், அரசு விழாக்கள் நடைபெறாது. மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற அலுவலகங்களும் தேர்தல் விதிமுறைக்காக பூட்டி சீல் வைக்கப்படும்.

    ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் டெபாசிட் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தலை அமைதியாக நடத்திட பொது மக்கள், அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அ.ம.மு.க. சார்பில் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த முறையும் மீண்டும் அவர்களே களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

    ஏற்கனவே பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாகத்தான் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே மீண்டும் பணப்பட்டுவாடா நடந்து விடக்கூடாது என்பதற்காக வேலூர் தொகுதியில் இந்த முறை பறக்கும் படை சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதைதடுக்கவும், இதற்காக வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணித்து தடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இதற்காக வேலூர் மாவட்டத்தை ஒட்டிய தமிழகஆந்திர எல்லைகளில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, பொன்னை, சேர்க்காடு, ஆர்.கே.பேட்டை, குடியாத்தம் தன கொண்டப்பல்லி, பேரணாம்பட்டு பத்தலப்பல்லி, பச்சூர் உட்பட 13 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன், பறக்கும் படை குழுக்களும் வாகன தணிக்கையை தொடங்கியுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததால் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
     
    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவோர், வேட்பு மனுக்களை ஜூலை 11-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஜூலை 19-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 22ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

    இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

    இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
    புலி பதுங்குவது பாயத்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறினாலும் அது பூனையாக அல்லவா உள்ளது என்று தமிழிசை கூறியுள்ளார்.

    கே.கே.நகர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு என்பது நல்ல திட்டம். இந்த திட்டத்தை 2012 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் தொடங்கி வைத்தது. இன்று அந்த கூட்டணியில் உள்ள வைகோ உள்ளிட்டோர் எதிர்க்கிறார்கள். வைகோ போன்றவர்கள் எதிர்த்தாலே அந்த திட்டம் நல்ல திட்டம் தான்.

    மத்திய அரசு செயல்படுத்தும் எல்லாவற்றையும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் முறியடிப்போம். எதிர் விமர்சனங்களால் தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை இயக்கமாகவே நடைமுறைப்படுத்த வேண்டும். தண்ணீர் பிரச்சினை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து கிரண்பேடி கருத்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து.

    குடிநீர் பிரச்சனை குறித்து பேச தி.மு.க.விற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்த போது எந்த தொலைநோக்கு திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய தி.மு.க. ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து வரக் கூடாது என கூறுவதன் மூலம் மாவட்டங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றி வருகிறார். அவர் புலி அல்ல, பூனையாகத்தான் தெரிகிறார். புலி பதுங்குவது பாயத் தான் என்று மு.க.ஸ்டாலின் கூறினாலும் அது பூனையாக அல்லவா உள்ளது. தி.மு.க. வில் ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே எம்.பி., எம்.எல். ஏ. பதவிகளை அனுபவிக்கிறார்கள். ஸ்டாலின் தன் மீதே ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்.


    கூட்டணி என்பது தேர்தலுக்கானது. தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி பேசுவோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு செயல் பாடு இருக்கிறது. எங்கள் கட்சியின் செயல்பாடு படி நாங்கள் செயல்படுகிறோம். தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்கக்கூடாது. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சினை இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற நடைமுறை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது உள்ள தேர்தல் முறையில் விகிதாசாரம் கொண்டு வரப்பட்ட வேண்டும்.

    புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கும் காலக்கெடு வேண்டும். ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு என்பது ஏற்படையுதல்ல உணவு தட்டுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. அதற்கு ஆதரவாக தான் காவிரி ஆணையம், மத்திய அரசு செயல்படுகிறது.

    தமிழகத்தில் பொதுவாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. 6500 ரூபாயிலிருந்து 9500ரூபாய் தற்போது ஒரு லாரி தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை வரபோவது என தமிழக அரசு முன்கூட்டியே தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

    தமிழக முழுவதும் உள்ள ஏரி, குளத்தை முறையாக தூர் வாரி இருந்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது. இனி வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

    சேலம், சென்னை 8 வழிச்சாலை தடையை மீறி மத்திய அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தை கைவிட்டு பழைய வழி தடத்தையே பின்பற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கப்பட்டு வருவது மிகவும் அபாயகரமான ஒன்று அதனை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    தி.மு.க. சார்பில் நீண்ட காலமாக பணி செய்து வரும் சண்முகம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் ஆகிய இருவரையும் நாடாளுமன்ற மேல் அவைக்கு செல்ல இருப்பதால் வாழ்த்துகள். உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாததால் உள்ளாட்சி நிர்வாகம் செயலற்று கிடக்கிறது.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரதாதற்கு தி.மு.க. காரணம் தெரிவிக்கும்.


    தமிழகத்தில் ஆவணக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சட்ட ரீதியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார்.

    கராத்தே தியாகராஜன் கட்சி விதிமுறைகளை மீறி சில கருத்துக்களை தெரிவித்ததால் வெளியேற்றப்பட்டார். அவர் வருத்தம் தெரிவித்தால் மீண்டும் உறுப்பினராக சேர வாய்ப்பு உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதும், மற்றொரு கட்சி தோற்பதும் சகஜமானது. ஆனால் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்த காங்கிரஸ், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் ஓட்டுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பது தான் காங்கிரசின் விருப்பம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ராகுல் காந்தி பதவியில் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு என்று கூறி இந்தியாவை பிளவுப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளதை ஏற்கமாட்டோம்.

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஆனால் பற்றாக்குறை இல்லை என்று தமிழக அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது. பொய் தகவல்களை தொடர்ந்து கூறி கொண்டிருக்காமல் அதற்கு தீர்வு காண அமைச்சர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. இந்த கூட்டணி உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர் பார்ப்பு.


    கராத்தே தியாகராஜன் கட்சி விதிமுறைகளை மீறி சில கருத்துக்களை தெரிவித்ததால் வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து மீண்டும் உறுப்பினராக சேர வாய்ப்பு உள்ளது. எனவே இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. ஆட்சி கவிழாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    விழுப்புரம்:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், விரைவில் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என்று கூறி வருகிறார். எந்த சூழ்நிலையிலும், எப்போதும் இந்த ஆட்சி கவிழாது. எதிர்க்கட்சி தலைவர் என்றால் தனது தகுதியை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். முதல்-அமைச்சரை ஸ்டாலின் ஒருமையில் பேசி வருகிறார். இது நியாயமா?

    அ.தி.மு.க.வினரை கைது செய்வோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கூட்டுறவு வங்கியில் நகைக் கடன், மகளிர் சுய உதவிகுழுக்களுக்கான கடன் என ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கூறியுள்ளார். மேலும் சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் யார் கைது ஆவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    திண்டிவனம் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டில் கொள்ளிடம்- திண்டிவனம் கூட்டு குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். அந்த திட்டப் பணிகள் செயல்வடிவம் பெற்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒரே குடும்பத்தில் 3 பேர் போட்டியிட்டதால் மக்கள் தண்டித்துவிட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 இடங்களை கைப்பற்றியது.

    ஆளும் ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வென்றார்.

    பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா தும்கூர் தொகுதியிலும், அவரது பேரன்களான நிகில் மாண்டியா தொகுதியிலும் பிரஜ்வால் ரேவண்ணா ஹசன் தொகுதியிலும் போட்டியிட்டனர்.

    இதில் தேவேகவுடா, நிகில் தோல்வி அடைந்தனர். பிரஜ்வால் ரேவண்ணா மட்டும் வெற்றிபெற்றார். கர்நாடக மாநில ஆளும் கூட்டணி கட்சிகளான ஜனதாதளம், காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை சந்தித்தது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இந்தநிலையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தேர்தலில் போட்டியிட்டதால் தோல்வி ஏற்பட்டது என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சி பாதயாத்திரை குறித்து நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-

    நான் எப்போதுமே குடும்ப அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானதை பார்த்தேன்.

    அதற்காகத்தான் மக்கள் எங்களை தேர்தலில் தண்டித்து விட்டனர். எனது பேரன் நிகில் குமாரசாமி தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததை நான் எதிர் பார்க்கவில்லை. அவர் திரைப்படங்களில் நடித்து இருந்தார். இதனால் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×