search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்- முத்தரசன் பேட்டி

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற நடைமுறை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது உள்ள தேர்தல் முறையில் விகிதாசாரம் கொண்டு வரப்பட்ட வேண்டும்.

    புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கும் காலக்கெடு வேண்டும். ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு என்பது ஏற்படையுதல்ல உணவு தட்டுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. அதற்கு ஆதரவாக தான் காவிரி ஆணையம், மத்திய அரசு செயல்படுகிறது.

    தமிழகத்தில் பொதுவாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. 6500 ரூபாயிலிருந்து 9500ரூபாய் தற்போது ஒரு லாரி தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை வரபோவது என தமிழக அரசு முன்கூட்டியே தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

    தமிழக முழுவதும் உள்ள ஏரி, குளத்தை முறையாக தூர் வாரி இருந்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது. இனி வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

    சேலம், சென்னை 8 வழிச்சாலை தடையை மீறி மத்திய அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தை கைவிட்டு பழைய வழி தடத்தையே பின்பற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கப்பட்டு வருவது மிகவும் அபாயகரமான ஒன்று அதனை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    தி.மு.க. சார்பில் நீண்ட காலமாக பணி செய்து வரும் சண்முகம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் ஆகிய இருவரையும் நாடாளுமன்ற மேல் அவைக்கு செல்ல இருப்பதால் வாழ்த்துகள். உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாததால் உள்ளாட்சி நிர்வாகம் செயலற்று கிடக்கிறது.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரதாதற்கு தி.மு.க. காரணம் தெரிவிக்கும்.


    தமிழகத்தில் ஆவணக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சட்ட ரீதியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார்.

    Next Story
    ×