என் மலர்
தேர்தல் செய்திகள்

ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய - மாநில அரசுகள் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்து உள்ள நிலையில் இவற்றுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை சொல்ல வில்லை. மத்திய அரசு பட்ஜெட் ஊக்கம் நம்பிக்கை தரும் பட்ஜெட்டாக இருந்திருந்தால் பங்கு சந்தையில் ஏற்றம் இருந்திருக்கும்.
மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் தினம் முதல் பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
உலக மையம் கொள்கை படி எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.
ஆனால் அமெரிக்கா நான் சொல்லும் நாடுகளுடன் தான் பொருளாதார வைத்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணைய் குறைந்த இடத்தில் வாங்கி வரும் ஒப்பந்தத்தை கைவிட்டு அமெரிக்கா நிர்பந்தத்தில் அதிக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் இடத்தில் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதன்மூலம் அயல்நாட்டு நேர் முதலீடு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்கிறது. கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவித்த பிறகு ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு சென்று உள்ளது. இதன் மூலம் பிரகடனம் செய்யாத வணிக போரை அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது. டிரம்புக்கு எதிராக வணிக போர் நடத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும்
விவசாயிகள் பாதிக்கும் திட்டத்தை பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றியதால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.
நீட் தேர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.
இவற்றிக்கு தீர்வு கிடைக்க இடதுசாரி அமைப்புகள் முன்னெடுத்து செல்லும்.
கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி புரிவோருக்கு இந்தியில் தேர்வு, தபால் துறையில் மத்திய அரசு ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவித்து உள்ளது தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.
இவர் அவர் கூறினார்.

சென்னை:
சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. அக்கட்சியினர் மத்தியில் சோர்வையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தவும், கட்சிப் பணிகளை விரிவு படுத்தவும் தே.மு.தி.க. தலைமை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சி தலைமை அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து மாவட்ட, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய கிளை நிர்வாகிகளை வரவழைத்து பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒருநாளைக்கு ஒரு மாவட்டம் என இதுவரை கன்னியாகுமரி, தேனி, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு முடிந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்... மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
வாணியம்பாடி:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி, திருப்பத்தூர் சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையை சேர்ந்த நகை கடை அதிபர் சீனிவாசன் என்பவர் காரில் வந்தார். காரை மடக்கி பறக்கும் படை சோதனையிட்டனர். அதில் 3 கிலோ 30 மில்லி கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தன. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.
நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமியிடம் நகைகளை ஒப்படைத்தனர். அவர் நகைகள் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் நகைகள் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாளாகும்.
19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யவரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.
மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 3 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள 3 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்களிடம் எதற்காக செல்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து அனுப்பினர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 11.40 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, பா.ம.க., தே.மு.தி.க., த.மாகா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர்.
வேட்பு மனுதாக்கல் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களை கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நாளை வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் 12-ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ செலுத்த வேண்டும்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.
மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதால் எஸ்.பி. தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.








