என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வேலூர் தொகுதி ஸ்டாலினுக்கு வெற்று கோட்டையாக போகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையை அடுத்த வாணியஞ்சாவடி மீன்வள உயிர் தொழில் நுட்ப நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு ஆணையை வழங்கிய பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- 

    வேலூர் தொகுதியை வெற்றிக் கோட்டையாக்குமாறு ஸ்டாலின் அறிக்கை விடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வேலூர் திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகத்தான் அமையும்.
    முக ஸ்டாலின்
    அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால், இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும். 

    அரசு வேலைக்காக இளைஞர்கள் காத்திருக்காமல் சுயதொழில் செய்ய முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மத்திய அரசுக்கு தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய - மாநில அரசுகள் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்து உள்ள நிலையில் இவற்றுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை சொல்ல வில்லை. மத்திய அரசு பட்ஜெட் ஊக்கம் நம்பிக்கை தரும் பட்ஜெட்டாக இருந்திருந்தால் பங்கு சந்தையில் ஏற்றம் இருந்திருக்கும்.

    மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் தினம் முதல் பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

    உலக மையம் கொள்கை படி எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.

    ஆனால் அமெரிக்கா நான் சொல்லும் நாடுகளுடன் தான் பொருளாதார வைத்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணைய் குறைந்த இடத்தில் வாங்கி வரும் ஒப்பந்தத்தை கைவிட்டு அமெரிக்கா நிர்பந்தத்தில் அதிக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் இடத்தில் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதன்மூலம் அயல்நாட்டு நேர் முதலீடு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்கிறது. கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவித்த பிறகு ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு சென்று உள்ளது. இதன் மூலம் பிரகடனம் செய்யாத வணிக போரை அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது. டிரம்புக்கு எதிராக வணிக போர் நடத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும்

    விவசாயிகள் பாதிக்கும் திட்டத்தை பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றியதால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.

    நீட் தேர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.

    இவற்றிக்கு தீர்வு கிடைக்க இடதுசாரி அமைப்புகள் முன்னெடுத்து செல்லும்.

    கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி புரிவோருக்கு இந்தியில் தேர்வு, தபால் துறையில் மத்திய அரசு ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவித்து உள்ளது தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.

    இவர் அவர் கூறினார்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கொல்கத்தா:

    கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும் பகுதியினர் சமீபத்தில் ராஜினாமா செய்தும், பாஜகவில் இணைந்தும் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.
    மம்தா பானர்ஜி
    பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ள இந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது என மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த முகுல் ராய் குறிப்பிட்டுள்ளார்.

    கொல்கத்தா நகரில் செய்தியாளர்களிடம் இந்த தகவலை இன்று தெரிவித்த முகுல் ராய், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் ரெயில்வே மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக தே.மு.தி.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. அக்கட்சியினர் மத்தியில் சோர்வையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தவும், கட்சிப் பணிகளை விரிவு படுத்தவும் தே.மு.தி.க. தலைமை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சி தலைமை அறிவுறுத்தியது.

    இதைத் தொடர்ந்து மாவட்ட, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய கிளை நிர்வாகிகளை வரவழைத்து பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஒருநாளைக்கு ஒரு மாவட்டம் என இதுவரை கன்னியாகுமரி, தேனி, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு முடிந்துள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்... மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

    வாணியம்பாடியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    வாணியம்பாடி:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி, திருப்பத்தூர் சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையை சேர்ந்த நகை கடை அதிபர் சீனிவாசன் என்பவர் காரில் வந்தார். காரை மடக்கி பறக்கும் படை சோதனையிட்டனர். அதில் 3 கிலோ 30 மில்லி கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தன. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

    நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமியிடம் நகைகளை ஒப்படைத்தனர். அவர் நகைகள் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் நகைகள் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாளாகும்.

    19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும்.

    வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.


    வேட்பு மனுத்தாக்கல் செய்யவரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.

    மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

    வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 3 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள 3 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்களிடம் எதற்காக செல்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து அனுப்பினர்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 11.40 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, பா.ம.க., தே.மு.தி.க., த.மாகா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர்.

    வேட்பு மனுதாக்கல் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களை கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். 

    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இதுதொடர்பாக, கோவா சட்டசபையில் 20-3-2019 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

    கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். 

    இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் பட்னேக்கரை சந்தித்தினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக சபாநாயகரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர்.

    இதையடுத்து, அவர்கள் 10 பேரும் பாஜகவில் இணைந்து விட்டதாக முதல் மந்திரி பிரமோத் சாவந்த்  இன்றிரவு தெரிவித்துள்ளார். 

    சட்டசபையில் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு கட்சியை சேர்ந்த மொத்த எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு அக்கட்சியில் இருந்து விலகினால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    அமேதி தொகுதி மக்களுடனான தனது உறவு எப்போதும் நிலைத்திருக்கும். தேவைப்படும் போதெல்லாம் உங்களது பிரச்சனைகளுக்காக நான் முன்நிற்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று அமேதி தொகுதிக்கு வந்தார். அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். 

    அக்கூட்டத்தில் பேசிய ராகுல் கூறியதாவது:

    அமேதி தொகுதியில் நான் தோல்வியடைந்தாலும் எனக்கும் இந்த தொகுதிக்கும் இடையே மிகவும் நெருக்கமான பிணைப்பு உள்ளது. அந்த பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. 
    மக்கள் பாசமழையில் ராகுல்
    நேரம் கிடைக்கும் போதேல்லாம் நானும் எனது சகோதரி பிரியங்கா காந்தியும் இந்த தொகுதி மக்களை சந்திக்க நிச்சயம் இங்கு வருவோம். அமேதி தொகுதி மக்களின் நலனை பாதுகாக்க எத்தகைய சூழ்நிலையிலும் துணை நிற்பேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    கர்நாடகா மாநிலத்தில் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் அங்கு அரசியல் சூறாவளி எழுந்துள்ள நிலையில் இன்று மேலும் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் பதவி விலகிய 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகரை அறிவுறுத்தக்கோரி கர்நாடக மாநில கவர்னரிடம் எடியூரப்பா இன்று மனு அளித்தார். 

    மேலும், சபாநாயகர் ரமேஷ் குமாரை இன்று மாலை சந்தித்த எடியூரப்பா  14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு வலியுறுத்தினார். இந்த ராஜினாமா விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுத்துவிட முடியாது. உரிய நடைமுறைகளை பின்பற்றி வரும் 17-ம் தேதிக்குள் எனது முடிவை அறிவிப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் பதிலளித்தார்.
    சபாநாயகர் ரமேஷ் குமார்
    இந்நிலையில், அங்குள்ள அரசியல் நிலவரத்தை மிகவும் மோசமாக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏ.க்களான எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் இன்று சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

    இதனால், குமாரசாமியின் ஆட்சிக்கு அங்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஏ.சி. சண்முகம்- கதிர்ஆனந்த்


    இதனால் இந்த இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நாளை வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் 12-ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ செலுத்த வேண்டும்.

    வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.

    மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதால் எஸ்.பி. தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக தீர்மானித்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.

    இந்நிலையில், அம்மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது மந்திரி பதவிகளை இன்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.

    இதனால், 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமியால் முதல் மந்திரியாக நீடிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

    இந்நிலையில், ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா இன்றிரவு அறிவித்துள்ளார்.
    குமாரசாமி
    காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்குள் இருந்த பூசல்கள் மோதலாக வெடித்து விட்டதால் பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி இனியும் முதல் மந்திரி பதவியில் நீடிக்க கூடாது. 

    எனவே, நமது மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு, குமாரசாமி உடனடியாக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
    கர்நாடகா மாநிலத்தில் மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் தனது மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ.நாகேஷ் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார்.

    அவரை தொடர்ந்து  21 காங்கிரஸ் மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக சித்தராமையா தெரிவித்தார். பின்னர், காங்கிரஸ் மந்திரிகளை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் ஆளும்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 மந்திரிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
     சுயேட்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் ராஜினாமா
    இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கர் என்பவரும் தனது மந்திரி பதவியை இன்று மாலை ராஜினாமா செய்துள்ளார். மந்திரி பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்திப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரும் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.
    ×