என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ திட்டம்?
Byமாலை மலர்13 July 2019 12:10 PM GMT (Updated: 13 July 2019 12:10 PM GMT)
மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா:
கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும் பகுதியினர் சமீபத்தில் ராஜினாமா செய்தும், பாஜகவில் இணைந்தும் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ள இந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது என மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த முகுல் ராய் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா நகரில் செய்தியாளர்களிடம் இந்த தகவலை இன்று தெரிவித்த முகுல் ராய், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் ரெயில்வே மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X