search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேதி தொகுதி"

    • அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது.
    • அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர்.

    அமேதி:

    உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து பா.ஜனதாவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். அதுவரை காங்கிரஸ் கோட்டையாக இருந்த அமேதி பா.ஜ.க. தொகுதியாக மாறியது.

    இந்த தடவை அமேதி தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாரா? என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவர் இதை சூசகமாக தெரிவித்தார். நேற்று மீண்டும் 2-வது முறையாக ராபர்ட் வதேரா தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.

    செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'அமேதி தொகுதி மக்கள் என்னை மிகவும் விரும்புகிறார்கள். அங்கு வந்து போட்டியிடும்படி தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன' என்று கூறினார்.


    ராபர்ட் வதேரா மேலும் கூறுகையில், 'நாடு முழுவதிலும் இருந்து என்னை காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். என்னை தீவிர அரசியலில் ஈடுபடும்படி வலியுறுத்துகிறார்கள். அதுபற்றி நானும் ஆலோசித்து கொண்டு இருக்கிறேன்.

    அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது. அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர். இந்த தடவை அவர்கள் அதை சரி செய்ய வேண்டும்.

    அமேதி தொகுதியில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து நான் தேர்தலுக்கு வருவதாக சொல்லவில்லை. அரசியலில் ஈடுபடவே விரும்புகிறேன். அமேதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    அமேதியில் ராகுல் போட்டியிட்டால் அவருக்காக நான் பிரசாரம் செய்வேன். ஒருவேளை அரசியலுக்கு வராவிட்டாலும் கூட மக்களுக்காக நான் தொடர்ந்து சேவை செய்வேன்' என்றார்.

    • அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார்.
    • வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்’ என்று கூறினார்.

    அமேதி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.

    அங்கு மீண்டும் போட்டியிட தைரியம் உண்டா? என ராகுல் காந்திக்கு ஸ்மிரிதி இரானி சவால் விட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார். ராம் லல்லாவின் அழைப்பை அவரும் அவரது குடும்பமும் நிராகரித்தது. இதனால் அமேதி மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்' என்று கூறினார்.

    அமேதியில் ராகுல் காந்தியின் யாத்திரையை வெறிச்சோடிய தெருக்கள்தான் வரவேற்றதாக கூறிய ஸ்மிரிதி இரானி, இதனால் சுல்தான்பூர் மற்றும் பிரதாப்கரில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை வரவழைத்து வந்திருப்பதாகவும் கிண்டல் செய்தார்.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது.

    குறிப்பாக இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக நீண்ட காலம் இருந்த அமேதி தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்வானார். ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதிஇரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் போட்டியிடுவார் என உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் கூறியிருந்தார். அதே நேரம் ஸ்மிருதிஇரானியும் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அமேதி தொகுதி மக்களுக்கு ஸ்மிருதிஇரானியும், ராகுல்காந்தியும் போட்டி போட்டு தீபாவளி பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். ஸ்மிருதிஇரானி அமேதி தொகுதி மக்களுக்கு செல்போன்கள், சுவர் கடிகாரங்கள், சேலைகள் வழங்கியுள்ளார்.

    இதேபோல ராகுல் காந்தி தனது பங்கிற்கு அமேதி தொகுதி மக்களுக்காக பேண்ட், சட்டைகள் மற்றும் இனிப்புகள் என பரிசுகளை வழங்கியுள்ளார்.

    ஸ்மிருதிஇரானி தரப்பில் தீபாவளி பரிசு வழங்கியதை உறுதிபடுத்திய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கோவிந்த்சவுகான் கூறுகையில், ஸ்மிருதி இரானியின் பரிசுகள் சமூகத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசுகள் தேவைப்படுபவர்களை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார்.

    இதேபோல பா.ஜனதா கட்சியின் அமேதி தொகுதி முன்னாள் தலைவர் தயா சங்கர் யாதவ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஸ்மிருதிக்கு வாக்களித்து பரிசுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    அமேதி தொகுதிக்கு எதுவுமே செய்யாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி இந்தமுறை வயநாட்டுக்கு ஓட்டம்பிடிப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிஜ்னோர் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை விடுதலை செய்துவிட்டு இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்காக காங்கிரஸ் அரசு அசிமானந்தாவை சிறைக்கு அனுப்பியது என்று குற்றம்சாட்டினார்.



    இந்த மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி தற்போது கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு ஒட்டம் பிடித்திருக்கிறார் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
    ×