search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் கைவிட்டது ஏன்? - அமேதி தோல்வியை ஆராய குழு அமைத்த ராகுல்காந்தி
    X

    மக்கள் கைவிட்டது ஏன்? - அமேதி தோல்வியை ஆராய குழு அமைத்த ராகுல்காந்தி

    அமேதி தொகுதியில் தோல்வியடைந்தது தொடர்பாக ஆராய 2 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

    அமேதி தொகுதியில் 3 தடவை தொடர்ச்சியாக வென்று எம்.பி.யாக தேர்வான ராகுல் இந்த தடவை வயநாடு தொகுதிக்கு தாவியது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி போட்டியிட்டார். இந்த தடவை அவரது பிரசாரம் மிக தீவிரமாக இருந்தது. எனவே ராகுல் தோல்வி அடைந்து விடுமோ என்று கருதி வயநாடுக்கு சென்று விட்டதாக விமர்சனம் எழுந்தது.

    அதை உறுதிப்படுத்துவது போல அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார். அவரை ஸ்மிதிரி ராணி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.வயநாடு தொகுதியில் மட்டுமே அவ ரால் வெற்றி பெற முடிந்தது.



    அமேதி தொகுதியானது காங்கிரசின் கோட்டையாக திகழும் தொகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக நேரு குடும்பத்தினருக்கு இந்த தொகுதி மிகவும் கை கொடுப்பதாக இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை மக்கள் ராகுலை கைவிட்டது ஏன் என்பது புரியாமல் காங்கிரசார் தவித்து வருகிறார்கள்.

    ராகுலுக்கும் அமேதி மக்கள் தனக்கு வெற்றியை தராதது ஏன் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு விடை காண்பதற்காக அவர் 2 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜூபைர்கான், ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா இருவரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் அமேதி தொகுதிக்கு செல்ல இருக்கிறார்கள். ராகுல் மீது அதிருப்தி ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது பற்றி அவர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்.

    அந்த ஆய்வை அவர்கள் அறிக்கையாக தயாரித்து ராகுல்காந்தியிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ராகுல் தன்னை மாற்றிக் கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×