என் மலர்
நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்தரராஜன்"
- ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல.
- உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
சென்னை:
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் வேறு இந்து மதம் வேறு.. தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்ற பொருள்பட வேற்றுமையை விதைத்து கொண்டிருக்கிறார்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ்.. தமிழையும் இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படி தொடர்ந்து பிரித்து ஆளும் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஏன் முருகன் திருவிழாக்களுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக முருகனையும் இந்து மதத்தையும் பிரிக்கும் இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பா.ஜ.க. தமிழகத்தை இந்துத்துவ பரிசோதனை களமாக மாற்றுகிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்! உண்மை என்ன என்றால் இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக்களமாக வேதனைக்களமாக தி.மு.க. மாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் தி.மு.க. பெறப்போகும் தோல்விக்கு பின்பு அவர்கள் சந்திக்கும் காலம் வேதனை காலமாக இருக்கும் என்பது உறுதி.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
- எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
புதுச்சேரி:
தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் மற்றும் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. உதயநிதி பிறந்த நாளில் செலுத்துகின்ற கவனம் மற்ற குழந்தைகளை பாதுகாப்பதில் இல்லை. எனவே வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு போன்றவர்கள் கூட மிகவும் தவறாக பேசுகிறார்கள். நடுநிலையாக இருக்க வேண்டிய அவர் கவர்னரை பற்றி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்து வேறுபாடு இருந்தால் கருத்தை சொல்லுங்கள், அதற்கு வார்த்தைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது.
தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்திருப்பதை அரசியல் நகர்வாகத்தான் நான் பார்க்கின்றேன். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றார்.
செங்கோட்டையன் அனுபவமான அரசியல்வாதி, அவர் இணைந்தது தமிழக வெற்றி கழகத்துக்கு பலம் சேர்க்கும். மற்றப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி பலம் பொருந்தியதாகத்தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். செங்கோட்டையன் அவராகவே ஒரு முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுக்கும் பா.ஜ.க. தான் காரணம் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படியானால் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பா.ஜ.க. தான் காரணமா? தமிழகத்தில் எது நடந்தாலும் பா.ஜ.க. தான் காரணமா?
பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் மிரண்டு போய் உள்ளனர்.
பா.ஜ.க.-அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். அதில் பிரச்சனை வந்தால் அதற்கு பா.ஜ.க. பொறுப்பல்ல. இன்னும் பலர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம். எதிர்கட்சியின் வாக்குகள் சிதறக்கூடாது. சிதறாமல் ஒரு வியூகம் அமைக்க வேண்டும். சில சலசலப்புகளினால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது. குறையவும் குறையாது.
செங்கோட்டையன், விஜய், டி.டி.வி.தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என யாராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்த கடமை தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி தி.மு.க.வை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அந்த வியூகத்துக்குள் எல்லோரும் வர வேண்டும்.
புதுவையில் 15 ஆண்டுகாலம் இடைக்கால பட்ஜெட் தான் போடப்பட்டது. முழுநேர பட்ஜெட் நாம் வந்த பிறகுதான் போடப்பட்டது. அது இரட்டை இஞ்சின் அரசாங்கத்தால் தான் நடந்தது. ஆகவே இரட்டை இஞ்சின் இன்னும் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
- பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டு தொடக்கம் இதனை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். அதன் அடிப்படை யில் நாடு முழுவதும் 'வந்தே மாதரம்' பாடல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற் காக 7 நாட்கள் நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற உள்ளது.
வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அதன் வீரர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சி குறைவான பதிப்புகளை வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பதிப்புகளை தேடி தேடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார். தமிழ்நாடு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை எதிர் கொள்ள போகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு கால மாகிய பிறகும் பெண்கள் பகல், இரவு நேரத்தில் தனிமையில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் மாணவி யினை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத் காரம் செய்து ஆடையின்றி தூக்கி வீசப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.
இதற்கு பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தி.மு.க. கட்சியைச் சார்ந்தவர்களும் அதன் கூட்டணியை சார்ந்த வர்களும் இதற்கு குரல் கொடுக்கவில்லை. இது போன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மகாராஷ் டிரா மாநிலத்தின் நடை பெற்றிருந்தால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பவர்களும் போதை ஆசாமியும் தான் சுதந்திரமாக சுற்றித் தெரிகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக இல்லை. போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை கையாளு வதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. நிர்பையா நிதியை கூட சரியாகப் பயன்படுத்த வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.
- தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.
தமிழகத்தில் தி.மு.க.வும், பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களும் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
* பீகார் மக்களை தி.மு.க.வினர் கீழ்த்தரமாக நடத்துவதாக பிரதமர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?
* பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.
* பீகாரிகள் அறிவில்லாதவர்கள் என கே.என்.நேரு சொன்னார். டேபிள் துடைக்க, பாத்ரூம் கழுவத்தான் சரியானவர்கள் என தயாநிதி கூறினார்.
* தி.மு.க. மீது வைக்கப்படும் விமர்சனம் தி.மு.க. மீது மட்டும் தான், தமிழர்கள் மீது இல்லை என்பதை முதல்வருக்கு சொல்லிக்கொள்கிறேன்.
* தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.
* தமிழக முதல்வரின் வேற்றுமை அரசியல் எடுபடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.
- திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.
சென்னை:
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் மிதமான மழைக்கே பல தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அசாதாரண மழை என்றால் பரவாயில்லை. சாதாரண மழைக்கு சென்னை தாங்குவதாக தெரியவில்லை. இயற்கையான மழைக்கு கூட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் கண்காணித்தார் என்று விளம்பர போட்டோக்கள் வருகின்றன.
சாலையை சரி செய்து விட்டு கட்டுப்பாட்டு அறையில் பார்த்தால் தான் நல்ல சாலை தெரியும். சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.
சென்னை மட்டுமல்ல டெல்டாவிலும் இதே கதை தான். ஒரே நாளில் 20 லட்சம் டன் நெற்பயிர்கள் வீணாகி இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று சொல்லும் முதலமைச்சரே இந்தியாவிற்கே வழிகாட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் வலியைத் தான் கூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.
இவ்வாறு அதில் கூறினார்.
- நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்...
- இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல... நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரசோடு தான் நீங்கள் போராட வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி.. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாரபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள்.
நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்... நீட்டை எதிர்த்து போராடுவேன் கையெழுத்து போடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல்.
உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறைவணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா..?..
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள்.
வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக நீங்களே போராடுங்கள்.
கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி.. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்.
இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...
பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள்.. திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள்.
ஒரு விமான சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறைக்கு எதிராக போராடுங்கள். ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக போராடுங்கள். இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
- பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.
கோவை:
முன்னாள் கவர்னரும், பா.ஜ.க முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் துணை ஜனாதிபதியாக, ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை.
தி.மு.க தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது. முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான்.
தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நோ ரீ என்ட்ரி தி.மு.க.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஒரு பதற்றம் தெரிந்தது.
பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.
உங்கள் அமைச்சரவையில் உள்ள ஊழலை முதலில் பாருங்கள். செந்தில்பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்க போகிறார் என்று பார்ப்போம்.
2026 தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று பலமாக ஆட்சி அமைப்போம். தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினார்களா. ஒன்றும் இல்லை.
இதுவரை தி.மு.க. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுத்து வந்தார்கள். இப்போது விருதையும் அவர்களே பெற்றுக் கொள்கிறார்கள். வாக்கு திருட்டு என காங்கிரஸ் கட்சி சொல்வதே ஒரு நகைச்சுவை தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
- மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.
சென்னை:
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பா.ஜ.க.வினரும், அவரது தீவிர ஆதரவாளர்களும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். மோடி பிரதமரான 2-வது ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் அன்று ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார். மாலை 6 மணி வரை அவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.
இதற்கிடையே ஏழுமலையின் கடைக்கு இன்று காலை பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன், ஏ.என்.எஸ். பிரசாத், மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பா.ஜ.க.தா நிர்வாகிகள் சென்றனர். அவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்து டீ குடித்தனர்.
மேலும் தமிழிசை சவுந்தரராஜன், டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
- விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது.
- விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள்.
சென்னை:
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்தில் திருச்சியில் திரண்ட கூட்டம் பற்றி பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
திருச்சியில் பெரிய அளவில் கூட்டம் திரண்டு இருப்பது உண்மைதான். நடிகருக்காக கூட்டம் கூடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
ஆனால் இவ்வளவு கூட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை. காவல் துறை 23 கட்டளை 43 கட்டளை என்று பிறப்பித்து விட்டு அரசியல் கட்சி தலைவர்களை போல் இருக்கக்கூடாது.
எவ்வளவு கூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து எவ்வளவு கூட்டம் வந்தாலும் கூட்டத்தை நெறி முறைப்படுத்த வேண்டும். திரண்டு இருப்பது இளைய தலைமுறை. அவர்கள் மனம் நோகாதபடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கூட்டத்தை காவல் துறையினர் ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆளும் கட்சிக்கு கொடுக்கும் பாதுகாப்பை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும்.
விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். நடக்கப் போவது மாநில தேர்தல். ஆட்சி மாற்றம் தேவை. எனவே தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும். அதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் தொண்டு.
விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள். அதிக நாட்கள் அவர் மக்களை சந்திக்க வேண்டும். திரளும் கூட்டம் ஒட்டு மொத்தமாக ஓட்டாகி விடுமா என்பது தெரியாது. ஆனால் இவ்வாறு திரளும் கூட்டத்தை சமூகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதில் விஜய் அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
- மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
- தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம்.
தூத்துக்குடி:
நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இவர் பேசுகிறார். மாநாட்டிற்கு பிளாக்கில் சாப்பாட்டிற்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். புதிய வரவு நம்மை ஒன்றும் செய்யாது. பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக வந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை தண்ணீரில் வளரப்போகுது, மலர போகுது, தாமரை இலையில் ஏன் ஒட்ட வேண்டும்? அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளரப்போகுது. தம்பி விஜய் இதனை பார்ப்பார்.
தமிழக முதலமைச்சர் அப்பா என்று கூப்பிட சொல்கின்றார். இவர் அங்கிள் என்ற குறிப்பிடுகிறார். விஜய்க்கு எழுதிக் கொடுத்தவர் அவ்வாறு எழுதி கொடுத்துவிட்டார் போல, நானே பயந்து விட்டேன்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பொருந்தாதது என்ற விஜய் கூறுகிறார். அவருக்கு என்ன அரசியல் தெரியும்? அரசியல் ஞானம் இருக்கின்றதா? கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுகிறார். இதிலிருந்து அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
பாரத பிரதமர் என்ன செய்தார் என்று கேட்கின்றார். சினிமா வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். நடிகர் விஜய் தனி விமானத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த அளவிற்கு விமான நிலையம் முன்னேற்றி இருக்கின்றது. நாடு முன்னேறி இருக்கின்றது. தூத்துக்குடி விமான நிலையத்தை எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் விஜய்யால் ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடிந்ததா? ஒரு கொடியை ஒழுங்காக நட முடிந்ததா?. எனவே இவர் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. அ.தி.மு.க. பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
இருமொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. அனைவரும் அதில் தான் படித்துக் கொண்டு வந்தோம். நாடு விரிவடையும்போது, தேசம் விரிவுபடும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும்போது 3 மொழி தேவைப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு 3 மொழிகளில் டுவீட் செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தனியார் பள்ளியில் 2 மொழி தான் சொல்லிக் கொடுக்கின்றீர்களா? என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். தி.மு.க. கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் 3மொழி உள்ளது. 3 மொழி படித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ந்து இருக்கிறது. அதில் அனைவரின் பங்கு இருக்கிறது.
தி.மு.க. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழை பற்றி பேசும் தகுதி உங்களுக்கு உள்ளதா? தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
- டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
- தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.
கடந்த 5-ந்தேதி, கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை, அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
- தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்
- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்
இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று சேகர்பாபு உள்ளிட்ட அமைசர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இரவில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக தூமைப்பனியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
முன்னதாக நேற்று மாலை தடையை மீறி போராட்டம் நடைபெறும் ரிப்பன் மாளிகை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்திக்க விடாமல் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






