என் மலர்
செய்திகள்

தீபலட்சுமி
வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி - சீமான் அறிவிப்பு
வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை:
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 19-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ்பெற 22-ந்தேதி கடைசிநாள் ஆகும். ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தி.மு.க. வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் சீமான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல் ரத்தாவதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தீபலட்சுமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளார். இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுரேஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 19-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ்பெற 22-ந்தேதி கடைசிநாள் ஆகும். ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தி.மு.க. வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் சீமான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல் ரத்தாவதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தீபலட்சுமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளார். இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுரேஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
Next Story






