என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது- ஐகோர்ட்
Byமாலை மலர்11 April 2019 7:00 AM GMT (Updated: 11 April 2019 7:00 AM GMT)
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது. #SPVelumani #MKStalin #HighCourt
சென்னை:
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு என்பவர் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்
அதேபோல, உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும், உள்ளாட்சி துறையில் முறைகேட்டில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே பேசியதற்காக மு.க.ஸ்டாலின் ரூ 100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி மு க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அமைச்சர் வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். #SPVelumani #MKStalin #HighCourt
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு என்பவர் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அமைச்சர் வேலுமணி காப்பாற்றுவதாக தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அதேபோல, உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும், உள்ளாட்சி துறையில் முறைகேட்டில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே பேசியதற்காக மு.க.ஸ்டாலின் ரூ 100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி மு க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அமைச்சர் வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். #SPVelumani #MKStalin #HighCourt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X