என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக உள்ளன. அண்மையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் இறந்ததின் காரணமாக அத்தொகுதியும் காலியாக உள்ளது. மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    உச்சநீதிமன்றத்தில், நியாயமான கால அவகாசத்தில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்களவைக்கான பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் நிலையில், பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்குள்ளாக 4 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல்களையும் நடத்துவதே சாலப் பொருத்தமானது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #CPI #Mutharasan #TNByPoll
    பீகார் மாநிலத்தில் 4 கட்டங்களாக நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டரிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் இன்று தொகுதி உடன்பாடு முடிவானது. #Biharmahagathbandhan #mahagathbandhanseatsharing
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ், ராஷ்டரிய லோக் சமதா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, விக்காஷீல் இன்ஸான் ஆகிய கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.

    இந்த அறிவிப்பின்படி, ராஷ்டரிய ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் சமதா 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்சசா 3 தொகுதிகளிலும், விக்காஷீல் இன்ஸான் 3 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றன. ஆரா தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து எங்கள் கூட்டணியில் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் சசாராம் தொகுதியில் நிற்கிறார்.

    காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட்னா சாகிப் தொகுதியில் பாஜகவில் இடமளிக்காமல் ஒதுக்கப்பட்ட நடிகர் சத்ருகன் சின்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லோல்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் நிறுவன தலைவர் சரத் யாதவ் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராக மாதேபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். #Biharmahagathbandhan #mahagathbandhanseatsharing
    மே 19-ந்தேதிக்குள் 3 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது என்று தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். #DMK #RSBharathi #TNBypoll
    சென்னை:

    காலியாக இருக்கும் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

    இதுபற்றி இந்த வழக்கை தொடர்ந்த தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோட்டில் தேர்தல் கமி‌ஷன் கூறி உள்ளது. நாங்கள் ஏப்ரல் 19-ந் தேதிக்குள் ஒரு தேதியில் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டதால்தான் அப்படி முடியாது என்று கூறிவிட்டனர்.

    ஆனால் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் கமி‌ஷன் நினைத்தால் ஒரு தேதியை முடிவு செய்து அறிவிக்க முடியும். எனவே மே 19-ந்தேதிக்குள் 3 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #RSBharathi #TNBypoll
    எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடனை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #SarithaNair
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார்.

    கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கமி‌ஷனும் அமைக்கப்பட்டது.

    சோலார் பேனல் மோசடி வழக்கில் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.

    இந்த வழக்கில் கைதான சரிதாநாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

    கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சரிதாநாயர் தெரிவித்த பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஹிபி ஈடன் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர்.

    ஹிபி ஈடன் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர், எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கு சரிதாநாயர் எதிர்ப்பு தெரிவித்தார். பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை வேட்பாளராக அறிவித்ததை ஏற்க முடியாது என்று கூறிய சரிதாநாயர், எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி ஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

    எர்ணாகுளம் தொகுதியை போட்டியிட தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி சரிதாநாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குற்றம் சாட்டப்பட்ட பலரும் தேர்தலில் போட்டியிடுவது சகஜமாகி விட்டது. அரசியலில் இருப்பவர்கள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பிரசாரமும் செய்கிறார்கள். எந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டாலும் அவர்கள் இதுபற்றி கவலைப்படுவதில்லை. வாக்காளர்களும், பொதுமக்களும் இதை கண்டு கொள்வதில்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியும் என்றால் நானும் தேர்தலில் நிற்க முடியும். இதனை பொதுமக்களுக்கு புரிய வைக்கவே நான், தேர்தலில் நிற்கிறேன்.

    தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எவரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதை வாக்காளர்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நான் தேர்தலில் நிற்பதன் மூலம் இதுபற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எர்ணாகுளம் தொகுதியில் சரிதாநாயர் களம் இறங்க இருப்பது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.   #LokSabhaElections2019 #SarithaNair

    திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருச்சியில் ஏப்ரல் 10ந்தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். #LokSabhaElections2019 #RahulGandhi
    திருச்சி:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த 18-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இன்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.

    இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கோவையில் வருகிற 8-ந்தேதி நடைபெறும் மாபெரும் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஏற்கனவே அவர் மதுரை, திருப்பூர், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார்.

    4-வது முறையாக அவர் தமிழகம் வருவதால் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தமிழகத்திற்கு வரவழைத்து பிரசாரம் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி 8-ந்தேதி தமிழகம் வருவதால் அவர் வந்து சென்ற பிறகு ராகுலை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.

    அநேகமாக வருகிற 10-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ந் தேதி அவர் வேறு ஒரு மாநிலத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் 9-ந் தேதியே ராகுலை தமிழகத்துக்கு அழைத்து வரவும் ஆலோசனை நடந்து வருகிறது.

    எனவே ராகுலின் சுற்றுப்பயண திட்டத்தை பொறுத்து அவர் 9 அல்லது 10-ந்தேதிகளில் தமிழகம் வருவார் என்பது உறுதியாகி உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தி.மு.க. கூட்டணியில் புதுவை உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

    எனவே புதுவை மற்றும் தமிழகத்துக்கு வசதியாக ஏதாவது ஒரு நகரத்தில் ராகுல் பிரசாரத்துக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி திருச்சியை தேர்வு செய்துள்ளனர். திருச்சியில் அவர் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவார்.



    விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய தொகுதிகளும் அருகில் இருப்பதால் திருச்சியை வசதியான இடமாக கருதி ராகுல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    ராகுல்காந்தி திருச்சியில் பிரசாரம் செய்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    மேலும் பிரச்சார கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியையும் தொடங்கியுள்ளனர். திருச்சி பொன்மலை ஜி.கார்னர், தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #RahulGandhi



    கோவை மதுக்கரையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    கோவை:

    கிணத்துக்கடவு சட்டமன்றத்தொகுதி பறக்கும்படை அதிகாரி மற்றும் போலீசார் மதுக்கரை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

    அதனை கொண்டு வந்த சென்னை அமைந்தகரையை சேர்ந்த பகாத் (வயது 34) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது சேலத்தில் பேக்கரி வைக்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி அதனை மதுக்கரை தாசில்தார் சரண்யாவிடம் ஒப்படைத்தார்.

    இதேபோன்று அதே பகுதியில் குழந்தைசாமி தலைமையிலான பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காட்டில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த ஷெரோன் (32) என்பவரிடம் ரூ.98 ஆயிரம் இருந்தது.

    இதுகுறித்து கேட்டபோது கோவையில் ஜவுளி வாங்க பணம் கொண்டு வந்ததாக கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தாசில்தாரிடம் ஒப்படைத்ததார். #LSpolls

    சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் லாரி டிரைவர்களிடம் ரூ. 1.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    சேலம்:

    சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது.

    இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது விஜயவாடாவுக்கு செல்வதாகவும், டீசல் மற்றும் செலவுகளுக்கு அந்த பணத்தை வைத்ததுள்ளாகவும் கூறினர்.

    ஆனால் அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை எ ன்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதே போல அந்த வழியாக செல்வம் என்பவர் ஓட்டி வந்த லாரியையும் நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது லாரியில் இருந்த ரூ.57 ஆயிரம் சிக்கியது. அது குறித்து செல்வத்திடம் கேட்ட போது வடமாநிலத்திற்கு செல்வதாகவும், செலவுக்காக இந்த பணத்தை வைத்துள்ளதாகவும் கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அப்போது செலவுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கு எப்படி ஆவணம் காட்ட முடியும் என்று புலம்பியபடியே செல்வம் அங்கிருந்து சென்றார்.

    2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #LokSabhaElections2019
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 39 பாராளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    அவரது கட்சியின் பலத்தை தெரிந்துகொள்ள மற்ற அரசியல் கட்சிகளும் ஆர்வமாக இருந்தனர். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான கடந்த மார்ச் 26-ந்தேதி பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. திடீர் என்று வேட்பாளர் மாற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் களம் காண முடியாமல் போனது.

    வேட்பு மனு பரிசீலனையின்போது காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் மனு முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது.

    2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்காக இதுவரை செய்த பணிகள் அத்தனையும் வீணாகியதால் அந்த பகுதிகளின் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்திலும் உள்ளனர். #MakkalNeedhiMaiam #LokSabhaElections2019
    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை தென்சென்னை தொகுதியில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பிரசாரத்தை தொடங்கி 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை (சனி) திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    31-ந்தேதி (ஞாயிறு) பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியிலும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
    #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    மணப்பாறை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    மணப்பாறை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மீன் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அதனை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த பணம் மணப்பாறை தாலுகா அலுவ லகத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

    மோடியை டாடி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். #ministerrajendrabalaji

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அழகர்சாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-

    எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டும் தான் சீட் கிடைக்கும். அம்மா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஜனநாயக கூட்டணி. தி.மு.க. ரவுடி கட்சி. ராதாரவியை சமயம் பார்த்து ஸ்டாலின் பழிவாங்கி விட்டார்.

     


    ஜெயலலிதா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தி.மு.க.வில் 3-வது தலை முறையாக ஸ்டாலின் மகன் வந்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும். அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. டி.டிவி. தினகரனுக்கு கண்டிப்பாக பொதுச் சின்னம் கிடைக்காது. தேர்தல் கமி‌ஷனில் ஒரு மாதத்திற்கு முன்பே பதிந்திருக்க வேண்டும். சட்டத்தை யாராலும் வளைக்க முடியாது.

    ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டது தி.மு.க. ஆட்சி. தடையை நீக்கியது அ.தி.மு.க. ஆட்சி. மோடியை டாடி எனக் கூறுவதில் என்ன தவறு? இந்திராவை அவர்கள் அன்னை எனக் கூறவில்லையா? நாங்களும் இந்திராவை அன்னை என்றுதானே கூறுகிறோம். மோடியை தந்தை (டாடி) என கூறுவதில் தவறில்லை. எங்கள் கூட்டணி மதச்சார் பற்ற கூட்டணி.

    இதற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

    ஜார்ஜ் பெர்னான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. 40-க்கு 40 பாராளுமன்ற தொகுதியிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார். #ministerrajendrabalaji

    மத்தியில் தற்போது இருக்கும் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம் வந்து விட்டது என சிவகங்கை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

    இந்த சிவகங்கை தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படவில்லை, தகுதி  அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆளுங்கட்சியின் துணையோடு பாஜக சார்பில் நிற்கும் எச். ராஜாவை பற்றி நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலே இது போன்ற கடைந்தெடுத்தவரை பார்த்ததில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுவது. பொய்களையே பேசுவது இது தான் ராஜாவின் பணி.  மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எச். ராஜா பாராளுமன்றத்திற்கு போனால் சிவகங்கை தொகுதிக்கே அவமானம். அவர் மோசமான அரசியல்வாதி.



    இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கக்கூடிய கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறுகிறேன். பெரியார், அறிஞர் அண்ணா, மற்றும் திராவிட இயக்கத்தினை மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிற ராஜாவை விடுத்து, நீங்கள் அனைவரும் கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    பிரதமர் மோடியின் இந்த ஆட்சியில்,  பாஜக கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காத சலுகைகளே இல்லை. எனவே பாரதீய  ஜனதா என அழைக்காமல் கார்ப்பரேட் ஜனதா என்றே கூறுங்கள். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களின் பேரில் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார். யாருக்கேனும்  போட்டுள்ளாரா? அப்படி போட்டிருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

    பிரதமர் மோடி வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார். ஆனால் செயல் ஒன்றும் இருக்காது. பாஜகவிற்கு எதிராக யாரும் பேசினால் தேச துரோகி என கூறுகிறார்களே ,இது முறையா? 5 ஆண்டுகளுக்கு முன் மதச்சார்பற்ற இந்தியா உருவாகும் என கூறினார்களே, அப்படி செய்தார்களா? நாற்காலி தான் இவர்களது நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019

     
    ×