என் மலர்
செய்திகள்

கோவை மதுக்கரையில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல்
கோவை:
கிணத்துக்கடவு சட்டமன்றத்தொகுதி பறக்கும்படை அதிகாரி மற்றும் போலீசார் மதுக்கரை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.
அதனை கொண்டு வந்த சென்னை அமைந்தகரையை சேர்ந்த பகாத் (வயது 34) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது சேலத்தில் பேக்கரி வைக்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி அதனை மதுக்கரை தாசில்தார் சரண்யாவிடம் ஒப்படைத்தார்.
இதேபோன்று அதே பகுதியில் குழந்தைசாமி தலைமையிலான பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காட்டில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த ஷெரோன் (32) என்பவரிடம் ரூ.98 ஆயிரம் இருந்தது.
இதுகுறித்து கேட்டபோது கோவையில் ஜவுளி வாங்க பணம் கொண்டு வந்ததாக கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தாசில்தாரிடம் ஒப்படைத்ததார். #LSpolls






