என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறையில் இன்று உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.15 லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்29 March 2019 7:31 AM GMT (Updated: 29 March 2019 7:31 AM GMT)
மணப்பாறை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls
மணப்பாறை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மீன் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அதனை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பணம் மணப்பாறை தாலுகா அலுவ லகத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSpolls
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X