என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சுபாஷினியிடம் விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.

    கவின் கடந்த 27-ந்தேதி பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் கொலை நடந்த இடத்தில் இருந்து அவர்களும் விசாரணையை தொடங்கினர்.

    இதனிடையே சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 5 நாட்கள் போராட்டத்திற்கு பின் நேற்று கவின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் சுபாஷினியிடம் விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இன்று அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரிடம் விசாரித்தால் தான் இந்த கொலைக்கான முக்கிய விபரங்கள் தெரியவரும் என்ற காரணத்தினால் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுபாஷினி விரும்பும் இடத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.

    இதனிடையே கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் சார்பில் முதல் கட்ட இழப்பீடுத் தொகையாக ரூ.6 லட்சம் ஆணையத் தலைவர் தமிழ்வாணன் வழங்கினார்

    • தனது அக்காள் சுபாஷினியுடனான காதலை கைவிடாததால் கவினை வெட்டிக்கொன்றதாக போலீசாரிடம் சுர்ஜித் தெரிவித்தார்.
    • கவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சரவணன் கைது செய்யப்பட்டார்.

    இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு குறித்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார் நவ்ரோஜிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று முதலே சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

    இதனிடையே கவினை காதலித்ததாகவும், அது தனது பெற்றோருக்கு தெரியாது எனவும் சுபாஷினி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் கவின் உடலை பெற்றுக்கொள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. என பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் கவின் பெற்றோரை சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.ம.மு.க. ஜான்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் கவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை அவரது உடலை பெற்றுக்கொள்ள கவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அவர்களிடம் கவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆவணங்கள் எழுதும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு விசாரணைகள் தொடங்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார்.

    கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

    இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சரவணன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் சரவணனை வரும் எட்டாம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அரசு சார்பில் இழப்பீடாக அதிகாரிகள் கொடுத்த ரூ.6 லட்சத்தையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இந்த கொலையில் சுர்ஜித்தின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி நேற்று 2-வது நாளாக உறவினர்கள், குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் கவினின் குடும்பத்தினரிடம் நேற்று அரசு சார்பில் இழப்பீடாக அதிகாரிகள் கொடுத்த ரூ.6 லட்சத்தையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். போலீஸ் தம்பதியை கைது செய்ய வேண்டும். அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதற்கிடையே கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, இன்று 3-வது நாளாக கவின்குமாரின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். 

    • சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர்.
    • சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவர்கள் சமீபத்தில் சாதி மோதலை உண்டாக்கும் வகையிலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அதன்பின்னர் ஜாமினில் வெளியே வந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    அவர்களை சிறிது காலம் வெளியூரில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது முக்கூடலில் பானி பூரி கடை நடத்தி வரும் பாப்பாக்குடி சமத்துவபுரம் இந்திரா காலனியை சேர்ந்த சக்திகுமார்(வயது 22) என்பவரிடம் பானிபூரி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.

    இதனிடையே அவர்கள் வீட்டுக்குள் செல்வதற்குள் போலீசார் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானிபூரி கடைக்காரரான சக்திகுமார் தான் தங்கள் வருகையை போலீசாருக்கு தெரிவித்துள்ளார் என்று 2 சிறுவர்களும் கருதி உள்ளனர். இதனால் நேற்று இரவு முக்கூடல் அருகே உள்ள ரஸ்தாவூருக்கு 2 சிறுவர்களும் மதுபோதையில் சென்று உள்ளனர்.

    சமீபகாலமாக ரஸ்தாவூரில் வசித்து வரும் சக்திகுமாரிடம் சென்று பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களை போலீசில் எப்படி மாட்டிவிடலாம் என்று கூறி சக்திகுமாரை காலில் வெட்டியுள்ளனர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வரவே அப்போது இரவு நேர ரோந்து போலீசார் அங்கு வந்து உள்ளனர்.

    தகவல் அறிந்து 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் 2 போலீசாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவே, அதில் ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்று துப்பாக்கியுடன் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு விரைந்து சென்றார்.

    அவர் 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆனாலும் அந்த சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர். இதனால் அசாதாரண சூழல் அங்கு நிலவியதால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அந்த சிறுவர்களை நோக்கி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சுட்டார். அதில் ஒரு சிறுவனுக்கு நெஞ்சு பகுதி வழியாக குண்டு துளைத்து சென்றது. மற்றொரு சிறுவன் துப்பாக்கி குண்டு படாமல் தப்பித்து விட்டான்.

    இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த கூடுதல் காவல் படையினர் அங்கு காயத்துடன் இருந்த சக்திகுமார், மார்பு பகுதியல் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன், காயம் அடைந்த காவலர் ரஞ்சித் உள்ளிட்டோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்பட 4 வழக்குகளும், தப்பி ஓடிய சிறுவன் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.

    இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் இருக்கும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பகுதியிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் சதீஸ்குமார், சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
    • சுர்ஜித்தை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், நேற்று அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

    தொடர்ந்து தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தெருவில் வைத்து அவரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

    தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சுர்ஜித்(24) என்பதும், அவரது தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ண குமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சுர்ஜித்தை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    எனது அக்காளும், கவினும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். அவர்கள் 2 பேரும் ஒன்றாக பழகி வந்தனர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காளுடன் அவர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை.

    இதனிடையே எனது அக்காள் பாளையில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்ப்பதை அறிந்து கொண்டு அடிக்கடி சிகிச்சைக்காக யாரையாவது அழைத்துச்சென்று கவின் பேசி பழகி வந்தார். இதனை நான் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    இந்நிலையில் நேற்றும் அதேபோல் ஆஸ்பத்திரிக்கு அவர் செல்வதை அறிந்து கொண்ட நான், அவரை பின்தொடர்ந்து சென்றேன். பின்னர் அவரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் பேசுவதை நிறுத்தமுடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கமிஷன் சுரேஷ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் தாய்-தந்தை தான் காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் தூண்டுதலாக செயல்பட்டதாக சேர்க்கவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளனர். அதன்அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது.
    • மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 123 ½ அடியாக இருந்த நிலையில் இன்று 3 ½ அடி உயர்ந்து 127 அடியை எட்டியுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 142.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 346 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது. கடந்த 23-ந்தேதி அணையில் 115 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 127 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 23-ந்தேதி 122 அடியாக இருந்த நிலையில் இன்று 142.68 அடியை எட்டியுள்ளது.

    இதனால் கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் சுமார் 20 ½ அடி அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96 அடியை கடந்துள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 28 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 25 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • கேசவ சமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதனால் இந்த துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதன் படி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயக பேரி, மீனவன் குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான் குளம், வெங்கட்ரங்கபுரம், சிங் கிகுளம், தேவநல்லுர், காடு வெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவ சமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.
    • மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது?

    நெல்லை:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று வீட்டுக்கு வீடு சென்று சொல்லுங்கள் என தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார்.

    தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரூ.4800 கோடி திட்ட பணிகளை பிரதமர் தமிழகத்திற்கு வழங்க உள்ளார்.

    இதனை வீடு வீடாக சென்று தமிழக முதலமைச்சர் சொல்வாரா? ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் வாங்கிய சுமார் 14 லட்சம் மக்கள் இன்னும் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றும் விதமாக தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தையும் தொடங்கி மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வாங்கிய மனுக்கள் தூங்கியது போல இந்த மனுக்களும் தூங்கும்.

    தமிழகத்தில் சுகாதாரத்துறை மிக சிறப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினம்தோறும் தெரிவித்து வருகிறார். அப்படி என்றால் ஒவ்வொரு மருத்துவமனையும் சிறப்பாக இருப்பதாக தான் அர்த்தம். ஆனால் தமிழக முதலமைச்சர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருந்தால் ஏன் அவர் நேரடியாக அங்கே சென்று சிகிச்சை பெற்று இருக்கலாமே?. மக்களுக்கு ஒரு சிகிச்சை. தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிகிச்சையாக இருக்கிறது? பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் இருப்பதும், பிறந்த குழந்தைகளை கூட தரையில் படுக்க வைப்பதும் என்ற நிலையில் தான் தமிழகத்தில் சுகாதாரத்துறை நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் பெண்கள், பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. தற்போது காவல்துறை டி.எஸ்.பி.க்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையாக இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர் கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கானது நீடிக்கிறது.
    • 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 76.10 அடியாக உள்ளது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் சாரல் மழையால் அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அம்பை, ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 29 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று அந்த அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்த நிலையில் இன்று 3½ அடி உயர்ந்து 123.40 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 401 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 139.50 அடியை எட்டி உள்ளது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 95.62 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இன்று 3-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நாலுமுக்கு எஸ்டேட்டில் 2-வது நாளாக 7 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 66 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 58 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கானது நீடிக்கிறது.

    குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க நேற்று வரை தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் சீற்றம் குறையவில்லை. இதனால் இன்று 8-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர். அதே நேரம் புலியருவி மற்றும் சிற்றருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    அணைகளை பொறுத்தவரை 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் 2½ அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து 25 கனஅடிநீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் 2 அடி நீரே தேவைப்படுவதால் அணை இன்று மாலைக்குள் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 76.10 அடியாக உள்ளது. அணை நீர் இருப்பு இன்று 3 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையில் நேற்று 59.71 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 61.35 அடியாக உள்ளது. குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிகிறது. அதிகபட்சமாக குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 5 சென்டிமீட்டரும், அடவி நயினார் அணையில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
    • ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நகர் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறில் 4 மில்லிமீட்டரும், கன்னடியனில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 115.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1496 கனஅடி நீர்வரும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வெயில் தலைகாட்டவில்லை. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. களக்காடு சுற்றுவட்டாரத்தில் 1.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கார் பருவ சாகுபடி பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கடனா அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து இன்று 65 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 125 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 3 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 71 அடியாக இருந்த ராமநதி இன்று 2 அடி உயர்ந்து 73 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 129 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று காலை நிரம்பியது. அணை இந்த ஆண்டு 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    இந்த வருடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடவிநயினார் கோவில் அணையானது கார் சாகுபடி காலங்களில் 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்ததாலும், அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தினாலும் நீர்மட்டமானது வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக அணையானது 2-வது முறையாக நிரம்பி உள்ளது.

    தற்போது 100 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவை அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் அனுமன்நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ×