என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணகுடி, களக்காடு பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
- பணகுடி, கோட்டைகருங்குளம், களக்காடு துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- திருவெம்பலாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை மின்விநியோகம் இருக்காது.
வள்ளியூர்:
பணகுடி, கோட்டைகருங்குளம் மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம்.
களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலை புதூர், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன் குளம், கோவிலம்மாள் புரம், வடுகச்சி மதில், கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.






