என் மலர்
ஈரோடு
- கனரக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
- அரசின் இந்த நடவடிக்கைக்கு கிராம மக்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி.
இந்த ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளையம் கிராமத்தில் செட்டி தோட்டம் என்ற பகுதியில் இருந்து புதுக்கரைப்புதூர் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான இணைப்பு சாலை ஒன்று உள்ளது.
இந்த சாலையானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோபி, கவுந்தப்பாடி ஊர்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் மைசூரில் இருந்து ஈரோட்டிற்கு குதிரைகளில் கடிதங்களை எடுத்து செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டதால் குதிரைச்சாலை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
காலப்போக்கில் இந்த சாலையின் பயன்பாடு குறைந்து விவசாய நிலங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலையின் அகலமும் குறைந்து விட்டது.
இதனால் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், பொம்மநாயக்கன்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகத்தரசு, பாண்டியாறு மோயாறு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் அப்பகுதி மக்களிடம் சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதில் வருவாய்துறை ஆவணங்களின் அடிப்படையில் எல்லைகள் அளவீடு செய்து கற்கள் நடுவது என்றும், அதன் பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டன.
30 அடி முதல் 60 அடி அகலம் கொண்டதாக சாலை உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் ரூ.60 லட்சம் செலவில் நபார்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கிராம மக்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
- ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,
விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது.
- அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கெஜஹட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி மக பொங்கல் திருவிழா வரும் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் அதிக அளவில் பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வருவதால் வனப்பகுதியில் சூழல் மிகுந்த பாதிப்புள்ளாகிறது. எனவே இந்த விழா தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய ஒழுங்கு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கடந்த 2.1.2024 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது. வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது.
பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகையான நிபந்தனைகள் குறிப்பிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பாக அரசு துறையினர், கோவில் நிர்வாகித்தினர் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில், கோபி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வனத்துறை, வருவாய் துறை, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு கருத்துகளும் கேட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அப்போது திருவிழாவின்போது நெகிழிப் பொருட்கள், கண்ணடி பொருட்கள், தீ மூட்டக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் போதைப் பொருட்கள், வெடிப்பொருட்கள், சத்தம் எழுப்பக்கூடிய கருவிகள், வளர்ப்பு பிராணிகள் போன்றவற்றை கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்படி திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பின்படி திருவிழாவை சிறப்பாக நடத்தவும், வனப்பகுதியை மாசு இன்றி தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 221 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.
- தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.19 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 287 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
- அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.19 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 287 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.
- பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஈரோடு:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு புதிய மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.
இது குறித்து போலீசார் என்னதான் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினாலும் ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி வி.பி.எண்.+ 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் கால், மெசஞ்சர் கால், ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும்.
தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த செல்போனில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறும் உடன் இருக்கக்கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்.
பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இது போன்ற மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் கிரைம் போலீசாரின் இணையதள முகவரி www.CyberCrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஈரோடு:
உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு களாக மாற்றியதைக் கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைப்படி நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தமும், காளை மாடு சிலை அருகில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி, எம்.எல்.எப், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில் மறியலுக்காக திரண்டு நின்றனர்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்லிங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தொ.மு.ச. கவுன்சில் பேரவை மாவட்ட செயலாளர் கோபால், தலைவர் தங்கமுத்து, ஏ.ஐ.டி.யுசி. சின்னுசாமி, எச்.எம்.எஸ். சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். டி.எஸ்.பி. சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அழைத்து சென்றனர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், 50 பெண்கள் என 250-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
- 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மகளிர் திட்டத்தில் சிறு தானிய உணவு பொருட்கள் விற்பனையகத்தை வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம். 1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்து விட்டோம்.
ஏற்கனவே போடப்பட்டு உடைந்த பைப்புகள் சரி செய்யப்பட்டது. 6 மோட்டார் இயங்குவதற்கான போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
2016-ம் ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29-ந் தேதி இறுதி நாள். மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வாடகை கட்டிடங்களில் 10 ஆயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததை இடித்து தற்போது வீடுகள் கட்ட உள்ளோம். அந்த இடங்களில் தேவையான வீடுகள் குறித்து கணக்கெடுத்து கட்ட உள்ளோம்.
இதேபோல் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். மேலும் உடுமலைப்பேட்டையில் 110 தனித்தனி வீடுகள் கட்டி விற்காமல் இடிந்துள்ளது. திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 6 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 363 மனுக்கள் ஏற்று அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் கொடுத்தால் அதன் மீது பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து மாதம் கணக்கில் அறிவுறுத்தப்பட்டு அதிகமாக கால அவகாசம் வழங்கிய பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி 14 மட்டும் தான் நடக்கவில்லை என்று பட்டியலிட்டு உள்ளார். அப்படி என்றால் மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டதை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார் என்று தானே அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது.
- உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை வழியாக தான் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.
சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது. மேலும் அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது. இதனை அடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட அக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஈரோடு ஆர்.கே.வி ரோடு, கிருஷ்ணா தியேட்டரில் இருந்து மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, கச்சேரி ரோடு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
அப்போது ஆர்.கே.வி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பில் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.
- ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
- கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.
சென்னிமலை:
ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.
மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.
இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.
- நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார்.
- கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட செல்லும் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் இருந்தால் உடனடியாக அங்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.
அதன்படி நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெருந்துறை பெரியவீரசங்கிலி ஊராட்சிக்கு சென்றார். கைக்கோளபாளையத்தில் உள்ள பெரியவீரசங்கிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகளை பார்த்ததும் உற்சாகம் அடைந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழக்கம்போல அவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் 10-ம் வகுப்பு அறைக்கு கலெக்டர் சென்றபோது, மாணவ-மாணவிகள் படித்துக்கொண்டு இருந்தனர். அங்கு ஒரு புத்தகத்தை வாங்கிய அவர், அவர்கள் படித்துக்கொண்டு இருந்த அறிவியல் பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்டார். மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பதில் அளித்தனர்.
அப்போது நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார். மேலும் சிறிது நேரம் பாடம் நடத்தினார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை மாணவ-மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பாட்டில் எடுத்து அதை மேஜையில் உருட்டி செய்முறை விளக்கமும் அளித்தார். கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.






