search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை: வனத்துறையினர் விசாரணை
    X

    வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானையை காணலாம்.

    வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை: வனத்துறையினர் விசாரணை

    • வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.
    • மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதனால் வன விலங்குகள் கிராமத்துக்குள் நுழையும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் காப்பு காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அங்கிருந்து ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.

    பின்னர் வனத்துறை சார்பில் மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    அப்போது குடல் புழு நோயால் ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு யானை இறந்தது தெரிய வந்தது. பின்னர் இறந்த யானையை அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக விட்டு சென்று விட்டனர்.

    Next Story
    ×