என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வரும்.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெ ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. இன்று வ.உ.சி.மார்க்கெ ட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது.

    இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    • ஈரோட்டில் கல்லூரி மாணவி தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரஞ்சிதா (19).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த ரஞ்சிதா மதியம் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பின்னர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 18 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 978 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 19 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 100-க்கு 95 சதவீத மக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்து விட்டனர். பொது இடங்களிலும் சமூக இடைவெளி கேள்வி க்குறியாகி உள்ளது.

    எனவே மீண்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு, சென்று தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பொதுமக்கள்.
    • இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாரிபர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி மற்றும் மகன் சரவணன் (35) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோடடார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார். இதையடுத்து அந்த வாலிபர் பஸ் நிலைய பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, மீண்டும் நடந்து சென்றார். தொடர்ந்து அவர் அங்கு இருந்த மொபட்டை திருடிக்கொண்டு வாய்க்கால் ரோட்டிற்கு சென்றார்.

    மேலும் அந்த வாலிபர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் இப்ராகிம் (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த 3 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

    சத்தம் கேட்டு இப்ராகிம் எழுந்து பார்த்தார். அப்போது அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை விரட்டினார்.

    தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றனர். அந்த வாலிபர் கரட்டூர் அருகே உள்ள எஸ்.பி.நகரில் கரும்பு காட்டிற்குள் புகுந்து கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் விடிய, விடிய கரும்பு காட்டை சுற்றி வளைத்து தேடினர். இதையடுத்து இன்று காலை அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை கோபி செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி மாவட்டம் சத்திரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாமுகமது (27) என தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கிய ராஜா முகமது மீது செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு என 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டி பாளையத்தில் இந்திய மருத்துவ சங்க கோபி கிளை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மராத்தான் போட்டி நடைபெற்றது.
    • இந்த மராத்தான் ஓட்டத்தில் 10 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    கோபி, ஜூன். 26-

    கோபிசெட்டி பாளையத்தில் இந்திய மருத்துவ சங்க கோபி கிளை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மராத்தான் போட்டி நடைபெற்றது.

    கரட்டடிபாளையத்தில் தொடங்கிய மராத்தான் போட்டியை கோபி டி.எஸ்.பி ஆறுமுகம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    கரட்டடிபாளையத்தில் தொடங்கி லக்கம்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி, கச்சேரிமேடு, பஸ் நிலையம், மேட்டுவலுவு, முருகன்புதூர், சாணார்பதி வழியாக பாரியூர் சென்று முருகன்புதூரில் உள்ள பி.கே.ஆர். மகளிர் கல்லூரி வரை நடைபெற்றது.

    இந்த மராத்தான் ஓட்டத்தில் 10 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    இந்த மராத்தான் போட்டியில் மாணவ மாணவிகளுக்கான பெண்கள் பிரிவில் 10 கிலோமீட்டர் தூரம் ஓடி கோபி கலை அறிவியில் கல்லூரியை சேர்ந்த திவ்யா முதல் இடமும், பி.கே.ஆர் கல்லூரியை சேர்ந்த மாணவி சவிதா 2-ம் இடமும், கோவை மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுஸ்ரீ என்ற மாணவி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    5 கிலோ மீட்டர் பிரிவில் நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தருணா முதல் இடமும், பவித்ரா 2-ம் இடமும், ரீனா என்ற மாணவி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    ஆண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் பிரிவில் கோபி கலை அறிவியியல் கல்லூரியை சேர்ந்த நிசாந்குமார் மற்றும் மாதவன் முதல் 2 இடங்களையும், நகலூர் ஸ்போர்ட் அகாடமியை சேர்ந்த மாணவர் சிவா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    அதேபோல 5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் கோபிகலை அறிவியல் கல்லூரி மாணவர் ஆகாஷ் முதல் இடமும், எடப்பாடி ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தேசிகன் 2-ம் இடத்தையும், ஈரோடு இந்திய அத்தலடிக் கிளப்பை சேர்ந்த கவுதம் 3-ம் இடத்ததையும் பிடித்தனர்.

    பொது பிரிவில் 10 கிலோ மீட்டர் பிரிவில் ஈரோடு பகுதியை சேர்ந்த ரகுபதி, யசரப்த் ஆகியோர் முதல் 2 இடங்களையும், தவசியப்பன் 3-ம் இடத்தையும் பிடித்தனர்,

    5 கிலோ மீட்டர் பிரிவில் ஈரோடு பகுதிகளை சேர்ந்த சீனிவாசன், சசிகுமார், கார்த்தி உள்ளிட்டவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
    • இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற மலை கோவிலாக விளங்கும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து முருகப்பெ ருமானை வழிபட்டு செல்கி ன்றனர். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்து கொள்ளும் கடை ஒரு வருடத்திற்கு நடத்த தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் ஏலம் நடந்தது.

    இதில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.

    இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • ஆசனூர் அடுத்த அரே பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது.
    • சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூருக்கு ஒரு போலீஸ் வாகனம் சென்றது. அந்த வாகனத்தை யானைகள் துரத்தியது. டிரைவர் வாகனத்தை வேகமாக பின்னோக்கி இயக்கி தப்பித்தார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த தேசிய நெடு ஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூர் அடுத்த அரே பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது. இதை கண்டு வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை பின் நோக்கி இயக்கினர்.

    அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூருக்கு ஒரு போலீஸ் வாகனம் சென்றது. அந்த வாகனத்தை யானைகள் துரத்தியது. டிரைவர் வாகனத்தை வேகமாக பின்னோக்கி இயக்கி தப்பித்தார்.

    தொடர்ந்து அந்த பகுதியில் வந்த மற்றொரு காரை யானைகள் வழி மறித்து தும்பிக்கையால் அடித்து நொறுக்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் இருந்தவர் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினார்.

    இதை யடுத்து வாகன ஓட்டிகள் சத்தம் போட்டனர். ஆனால் அங்கேயே உலாவிய யானை கள் சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து வாகன ஓட்டிகளிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ஆசனூர் வழியாக கரும்பு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அதிக பாரம் இருந்ததால் டிரைவர் அந்த லாரியில் இருந்து கரும்புகளை ரோட்டோ ரம் வீசி விட்டு சென்றார்.

    இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் ரோட்டோரம் இருந்த கரும்புகளை சாப்பிட்டது. கரும்புகள் தீர்ந்து விட்டதால் யானைகள் அங்கேயே உலாவி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை யானை கள் வழி மறித்து அட்ட காசம் செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வழியாக கரும்பு கள் ஏறறி வரும் லாரி டிரைவர்கள் கரும்புகளை ரோட்டோரம் வீசி விட்டு செல்கிறார்கள். இதை சாப்பிடுவதற்காக யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்து வருகிறது.

    எனவே லாரி டிரைவர்கள் கரும்புகளை ரோட்டோரம் வீச வேண்டாம். மீறி கரும்புகளை வீசுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பழங்களை பழுக்க வைத்து சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.

    விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இதன்படி ஈரோடு ஜெகன்– 94455 12170, மொடக்குறிச்சி மேகலா–96266 62333, கொடுமுடி தியாகராஜன்– 80721 02951, பவானி மல்லிகா– 95437 89894, அம்மாபேட்டை குணவதி – 97507 51385, அந்தியூர் மரகதமணி– 94427 55132, பெருந்துறை குருசரஸ்வதி – 97906 11101, சென்னிமலை சிந்திரா– 97870 45557, கோபி சசிகலா – 93621 19780, டி.என்.பாளையம் கார்த்திக்குமார் – 98427 28398, நம்பியூர் சாந்தி – 94867 94383, சத்தியமங்கலம் பிரியா – 90959 50500, பவானிசாகர் பிருந்தா – 96005 69830, தாளவாடி சாந்தி – 94867 94383 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது.
    • இதில் பி.டி ரகப் பருத்தி குவின்டால் குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. ஆனால் இந்த வாரம் பருத்தி வரத்து அதிகமானதால் நேற்று (வெள்ளிக்கிழமை) வரை பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த ஏலத்திற்கு தருமபுரி,சேலம், கொளத்தூர், கொங்கணாபுர ம், மேட்டூர், பெருந்துறை,அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 ஆயிரத்து 899 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி ரகப் பருத்தி குவின்டால் குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானது.

    இதில் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, கொங்கணா புரம், பெருந்துறை, அந்தியூர் ஆகிய பகுதிகளை சேர்நத வியாபாரிகள் பலர் வந்து போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.54 அடியாக இருந்தது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 906 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு 800 கன அடியும், குடிநீர் தேவைக்காக 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 905 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×