search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 more people"

    • திருமங்கலம் அருகே வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் ரெயில் நிலையத்தில் பதுங்கியிருந்தபோது சிக்கினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் பாரதிராஜா (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

    2 மாதத்திற்கு முன்பு புதுப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், சந்தனபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் பாரதிராஜாவை கைது செய்ய முயன்றபோது அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

    பின்னர் ஜாமீன் பெற்று கடந்த 10-ந் தேதி பாரதிராஜா சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு புதுப்பட்டியில் உள்ள டீக்கடையில் நண்பர் சரவணகுமாருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாரதிராஜாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

    உடனிருந்த சரவணக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பாரதிராஜாவை கொலை செய்தது சந்தனபாண்டியும், அவரது நண்பர்களும் என தெரியவந்தது. இதையடுத்து சந்தனபாண்டி, ராம கிருஷ்ணன், கோகுல்,பரத் பாக்கியராஜ் விக்கி ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

    மற்ற 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போலீசார் கைது செய்தனர். 5 பேரையும் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு 5 பேரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 18 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 978 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 19 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 100-க்கு 95 சதவீத மக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்து விட்டனர். பொது இடங்களிலும் சமூக இடைவெளி கேள்வி க்குறியாகி உள்ளது.

    எனவே மீண்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு, சென்று தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    ×