search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி மாயம்
    X

    கல்லூரி மாணவி மாயம்

    • ஈரோட்டில் கல்லூரி மாணவி தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரஞ்சிதா (19).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த ரஞ்சிதா மதியம் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பின்னர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×