search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    க. அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ், ஜெயக்குமார்
    X
    க. அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ், ஜெயக்குமார்

    பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி

    பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓபன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    சென்னை:

    தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன் நள்ளிரவு 1.10 மணி அளவில் மரணம் அடைந்தார். 

    அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். ஆஸ்பத்திரிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.

    இதையடுத்து, க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு  உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    Next Story
    ×