என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது: கனிமொழி
Byமாலை மலர்29 Jan 2020 2:21 AM GMT (Updated: 29 Jan 2020 2:21 AM GMT)
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
உடன்குடி :
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது“ என்று கனிமொழி எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் உடன்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் பலமுறை வலியுறுத்தி பேசி உள்ளோம். இதுதொடர்பாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட முன்பு பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வளர்ந்த நாடுகளில் 2 அல்லது 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் ஒரு இடத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இது பல சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இங்கு கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பது அவசியமானது. இது இப்பகுதி வளர்ச்சி அடையவும் உதவும். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரும். இதனை அரசு மூர்க்கத்தனமாக, கட்டாயமாக திணிப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையே பலரும் எதிர்த்து வரும் நிலையில், 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது“ என்று கனிமொழி எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் உடன்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் பலமுறை வலியுறுத்தி பேசி உள்ளோம். இதுதொடர்பாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட முன்பு பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வளர்ந்த நாடுகளில் 2 அல்லது 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் ஒரு இடத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இது பல சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இங்கு கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பது அவசியமானது. இது இப்பகுதி வளர்ச்சி அடையவும் உதவும். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரும். இதனை அரசு மூர்க்கத்தனமாக, கட்டாயமாக திணிப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையே பலரும் எதிர்த்து வரும் நிலையில், 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X