என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினி-கமல் இணைவது தனிப்பட்ட பிரச்சனை: திருமாவளவன்
Byமாலை மலர்22 Nov 2019 9:34 AM GMT (Updated: 22 Nov 2019 9:50 AM GMT)
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது நாட்டு மக்களின் பிரச்சனை அல்ல, அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
அவனியாபுரம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை தேர்தலில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார்.
2009-ல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பம் இப்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
கோத்தபய ராஜபக்சே பதவியேற்றவுடன் ராமேசுவரம் பகுதியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ஏறத்தாழ 3000 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட நிலையில் மீன் பிடிக்காமல் கரையேறி இருக்கிறார்கள்.
ராஜபக்சே குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழத்தில் உள்ள தமிழர்களுக்கும் பெரும் தீங்கு விளையும் என்பதற்கு இது ஒரு சான்று.
இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சோனியா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் அது அரசியல் நாகரீகம் இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்திராகாந்தி , ராஜீவ் காந்தி கொல்லப்பட்டனர். அரசியல் ரீதியாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்ற குடும்பத்தின் மீது நரேந்திர மோடி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சோனியா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றது நரேந்திர மோடி அரசியல் பகையைத் தான் வெளிப்படுத்துகிறது. பெருந்தன்மையை வெளிப்படுத்தவில்லை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது நாட்டு மக்களின் பிரச்சனை அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. அதிசயம் நடக்கும் என ரஜினி கூறி உள்ளார். அவர் இமயமலை சென்று திரும்பி இருக்கிறார் என நினைக்கிறேன். இமயமலையில் யாராவது அவரிடம் சொல்லி இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை தேர்தலில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார்.
2009-ல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பம் இப்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
கோத்தபய ராஜபக்சே பதவியேற்றவுடன் ராமேசுவரம் பகுதியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ஏறத்தாழ 3000 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட நிலையில் மீன் பிடிக்காமல் கரையேறி இருக்கிறார்கள்.
ராஜபக்சே குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழத்தில் உள்ள தமிழர்களுக்கும் பெரும் தீங்கு விளையும் என்பதற்கு இது ஒரு சான்று.
இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
புத்தர், திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் சனாதனத்தை எதிர்த்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிர்க்கிறது.
இந்திராகாந்தி , ராஜீவ் காந்தி கொல்லப்பட்டனர். அரசியல் ரீதியாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்ற குடும்பத்தின் மீது நரேந்திர மோடி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சோனியா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றது நரேந்திர மோடி அரசியல் பகையைத் தான் வெளிப்படுத்துகிறது. பெருந்தன்மையை வெளிப்படுத்தவில்லை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது நாட்டு மக்களின் பிரச்சனை அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. அதிசயம் நடக்கும் என ரஜினி கூறி உள்ளார். அவர் இமயமலை சென்று திரும்பி இருக்கிறார் என நினைக்கிறேன். இமயமலையில் யாராவது அவரிடம் சொல்லி இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X