search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை
    X
    கனமழை

    கனமழை: 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு- சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

    கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    சென்னை;

    கனமழை காரணமாக ராமநாதபுரம், தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆத்தூர் தாலுக்காவை சேர்ந்த ஆடலுர், பன்றிமலை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×