என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜீவ் கொலை பற்றிய சீமான் பேச்சு கண்டிக்கத்தக்கது- பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்19 Oct 2019 5:58 AM GMT (Updated: 19 Oct 2019 5:58 AM GMT)
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கண்டனத்துக்குரியது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் பா.ஜ.க. சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூய்மை இந்தியா, பெண்ணுரிமை, சமூக நீதி, மது ஒழிப்பு உள்ளிட்ட காந்தியடிகளின் கொள்கைகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இந்த பாதயாத்திரை கட்சி சார்பற்றது. அனைவரும் பங்கேற்கலாம்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கண்டனத்துக்குரியது. எனது மண்ணில், எனது நாட்டை சேர்ந்த ஒரு தலைவரை படுகொலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்லாது தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நபர்கள் என இரு தரப்பையும் தண்டிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.
குறிப்பாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக நிரூபணம் செய்யப்பட்ட வேட்பாளர் மற்றும் கட்சிகளை அடுத்த 6 ஆண்டுகளுக்கு தொடர்புடைய தொகுதிகளில் போட்டியிட தகுதியற்றதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் பா.ஜ.க. சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூய்மை இந்தியா, பெண்ணுரிமை, சமூக நீதி, மது ஒழிப்பு உள்ளிட்ட காந்தியடிகளின் கொள்கைகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இந்த பாதயாத்திரை கட்சி சார்பற்றது. அனைவரும் பங்கேற்கலாம்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்லாது தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நபர்கள் என இரு தரப்பையும் தண்டிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.
குறிப்பாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக நிரூபணம் செய்யப்பட்ட வேட்பாளர் மற்றும் கட்சிகளை அடுத்த 6 ஆண்டுகளுக்கு தொடர்புடைய தொகுதிகளில் போட்டியிட தகுதியற்றதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X