search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன் ராதாகிருஷ்ணன்"

    • கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
    • மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    குளச்சல்:

    கடந்த 19-ந் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்த குளச்சலை சேர்ந்த 73 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஒரு கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்டு 5 நாட்களாகியும் மீனவர்கள் விடுவிக்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்து உள்ளனர். அவர்களை நேற்று இரவு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மீனவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நள்ளிரவு 2 மணிவரை அங்கிருந்தவாறு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ.நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை.
    • கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள்.

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிம வளங்கள் கிடைப்பதில்லை.

    கனிமவள டாரஸ் லாரிகள் மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும். எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

     கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை. இதனால் 3 ஆண்டு காலத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நான்கு வழிசாலை அமைக்கும் பணிக்காக 1046 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 350 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு மாநிலத்தின் கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள். அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொறுத்தவரை நாங்கள் எதையும் மறைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார்.
    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதி மார்ஷல் நேசமணி, தாணுலிங்கம் நாடார், பெருந்தலைவர் காமராஜர், குமரி ஆனந்தன் என பெருந்தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.

    கன்னியாகுமரி தொகுதியில் 1951 முதல் 1998 வரை காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தொகுதி வெற்றிபெற்று இருந்தது. 1996-ம் ஆண்டு பாரதிய ஜனதாகட்சி முதல் முறையாக கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டார்.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டென்னிஸ் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த தேர்தலிலும் பொன் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.


    அப்போது அமைந்த பாரதிய ஜனதா ஆட்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை மந்திரியாகவும், நகர்புற வளர்ச்சித்துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.

    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய இணை மந்திரியாக பொறுப்பேற்றார். தொழிற்சாலைகள் மற்றும் பொதுப் பணித்துறை நிறுவனங்கள் துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும், நிதித்துறை மற்றும் துறைமுக துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    அப்போது குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். மார்த்தாண்டத்தில் மேம்பாலம், பார்வதிபுரத்தில் மேம்பாலம், சுசீந்திரம் பாலம் போன்ற உன்னத திட்டங்களை செயல்படுத்தினார். குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டங்களை செயல்படுத்த பொன்.ராதாகிருஷ்ணன் முக்கிய பங்கு வைத்தார்.

    தற்போது மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து குமரி மாவட்டத்திற்கு பொன். ராதாகிருஷ்ணன் பெற்று தந்தார்.

    2019 நடந்த தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2021-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவில்லை. தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பாரதிய ஜனதா கட்சி குமரி மாவட்டத்தில் செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.


    பிரதமர் மோடியின் வருகை குமரி மாவட்ட மக்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதையடுத்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது கட்சியின் வெற்றிக்காக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டனர். நாகர்கோவிலில் உள்ள தேர்தல் அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பலரும் திரண்டு உள்ளனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதாகவும் கூறி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் களம் இறக்கபட்டுள்ளார். அவர் ஏற்கனவே சட்டமன்ற தொகுதி வாரியாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்பது குறித்து கட்சி தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள விஜய் வசந்த் மீண்டும் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

    தன்னுடைய தந்தை வசந்தகுமார் வழியில் விஜய வசந்த் மக்கள் பணி ஆற்றி வருகிறார். எனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மீண்டும் அவருக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 7,76,127 ஆண் வாக்காளர்கள், 7, 78,734 பெண் வாக்காளர்கள், 135 மூனறாம் பாலினத்தினர் என மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் இளம் வாக்காளர்களும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதனால் இந்த தொகுதியில் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி தொகு தியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.கவும் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்றே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. கன்னியாகுமரியில் மீண்டும் தாமரை மலருமா? அல்லது காங்கிரஸ் கைப்பற்றுமா? இல்லையென்றால் இரட்டை இலை தளிர்விடுமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்துவிடும்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன.
    • அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.

    குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை மந்திரி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன் ராதா கிருஷ்ணனை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து 2022-ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது.


    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இதில் விஜய்வசந்த் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய்வசந்த் களம் இறக்கப்படுகிறார். வேட்பாளருக்கான முறையான அறிவிப்பு இன்னும் வராமல் இருந்தாலும் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


    பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறக்கப்படுகிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டார். இது பாரதிய ஜனதாவினருக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. ஆகிய இருவரும் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். தி.மு.க.வும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டது. அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளராக உள்ள பசிலியான் நசரேத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் பிரிவு உட்பட அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி தேர்தலில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கிவிட்டார். வெற்றிக்கனியை பறிப்பதற்கு காங்கிரஸ், பாரதி ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் முட்டி மோதுகின்றன.

    நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் நான்கு முனைபோட்டி நிலவுகிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

    • மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
    • தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

    கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முறையாக பயன்படுத்தினால் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும்.

    மேலும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட மக்களிடம் நேரடியாகக் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன்.
    • கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள்.

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகள் காவிரி நீரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் நீரை கூட முழுமையாக தடுக்க புதிய அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநிலம் சென்று, அணை கட்ட முயற்சி எடுக்கும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கை குலுக்கி கொண்டு, சோனியா காந்தி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதுவெந்துபோன விவசாயி இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல இருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்கட்சி கூட்டணிக்காக சென்றாக கருதவில்லை. விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன். இது தமிழகத்துக்கான கேடு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கு சென்று இருக்கலாம். ஆனால் 8 கோடி மக்களின் முதலமைச்சராக சென்று கைகுலுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மேகதாதுவில் அணைகட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணியில் கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. அதனால் தான் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து இருக்கிறோம். கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள். யார் தண்ணீர் தரவில்லை என்றாலும் தவறுதான்.

    ஊழல்வாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தும். அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது செய்த தவறுக்காக தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
    • அரசு பள்ளி மூடப்படுகிறது என்று சொன்னால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை அடுத்துள்ள துலுக்கன்பட்டி கிராமத்தில் பாஜ.க. தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

    விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் 16,000 பள்ளிகள் இருந்த நிலையில் அதை 32 ஆயிரம் பள்ளிகளாக மாற்றியவர் காமராஜர். 100-க்கு 7 பேர் படித்த நிலையில் அதை 37 பேராக மாற்றியவர் காமராஜர். ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மூடப்படுகிறது என்று சொன்னால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது. ஏழை மக்களின் எதிர்காலமும் மூடப்படுகிறது.

    பொதுவாக எல்லா விஷயங்களுக்கும் சாதகங்கள் , பாதகங்கள் என்பது குறித்த வாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பொது சிவில் சட்டம் பற்றிய மசோதாவே வெளியாகாத முன்பு தவறு என்பது கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

    தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது.

    தி.மு.க. மக்களுக்கு நன்மையான ஏதாவது ஒரு திட்டத்தை ஒன்றை வேண்டுமென்று கூறியுள்ளதா?எல்லாமே வேண்டாம் என தான் கூறி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என கூறினார்கள். சாதாரணமாக குடிசையில் வாழக்கூடியவர்களின் குழந்தைகள், மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் வாங்குகின்றனர். கற்பனை செய்து தான் பார்க்க முடியுமா? நீட் தேர்வு வராவிட்டால், ஏழை மாணவர்களுக்கு சீட் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

    காங்கிரஸ் கட்சித் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக முதலமைச்சரை உடனடியாக அழைத்துக் கொண்டு, பெங்களூருக்கு சென்று மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்கிற நிலைப்பாட்டையும் சொல்லி, கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டாது என்பதையும் உறுதிப்படுத்தி வர வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்

    • தமிழகத்தில் ஒன்றிண்டு முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறப்பாக செயல்படுவதாக அவர் சர்வே எடுத்து வைத்திருக்கிறார்.
    • அமித் ஷா தமிழக பா.ஜனதா நிலவரம் இன்னும் சரியில்லை என்பதை அமைப்பு ரீதியாக நிர்வாகிகளிடம் சுட்டி காட்டி இருக்கிறார்.

    பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தேர்தல் வியூகம் வகுப்பதில் கில்லாடி என்பது தெரிந்ததே. பொதுவாக அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியினுடைய செயல்பாடுகள், முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அப்பாற்பட்டு ரகசியமாகவும் சேகரித்து விரல் நுனியில் வைத்திருப்பவர்.

    மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது கட்சியை பற்றி ஆஹா... ஓஹோ... என்று அந்த மாநில நிர்வாகிகள் எடுத்துச் சொல்வதை கேட்டு விட்டு... கடைசியில் அவர் ஒவ்வொன்றாக கேட்கும் போது வெல வெலத்து போவார்கள். அப்படித்தான் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அமித் ஷா தமிழக பா.ஜனதா நிலவரம் இன்னும் சரியில்லை என்பதை அமைப்பு ரீதியாக நிர்வாகிகளிடம் சுட்டி காட்டி இருக்கிறார். முக்கியமாக அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது சிலர் ரகசியங்களை அறிந்து கொள்ளவும், நிர்வாகிகளின் நாடி பிடித்து பார்ப்பார். அந்த வகையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மூத்த தலைவரான எச்.ராஜா ஆகிய 4 பேரையும் அழைத்து சிறிது நேரம் தனியாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

    அப்போது ஜாலியாகவும் சில நிகழ்ச்சிகளை அவர்களுக்குள் பகிர்ந்து இருக்கிறார். அந்த தருணத்தில் ஜாலியாக கேட்பது போல் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வருகிற தேர்தலில் உங்கள் தொகுதியில் உங்களை தவிர போட்டியிட தகுதியானவர்கள் என்றால் யாரை கை காட்டுவீர்கள் என்று கேட்கவும் பொன்.ராதாகிருஷ்ணனும் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையாமல் ஒரு நிர்வாகியின் பெயரை தெரிவித்து இருக்கிறார். அதை கேட்டதும் அமித் ஷாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லையாம். தமிழகத்தில் ஒன்றிண்டு முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறப்பாக செயல்படுவதாக அவர் சர்வே எடுத்து வைத்திருக்கிறார். அதில் ஒருவரைதான் பொன் ராதாகிருஷ்ணனும் கை காட்டி இருக்கிறார். அதை கேட்டதும் ஆச்சரியப்பட்டு அமித் ஷாவே பாராட்டி இருக்கிறார்.

    • செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
    • செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும், தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பை செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர். யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் அது பொருந்தும்.

    தான் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. துணை போகக்கூடாது.

    செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது. அவருக்கு துணை நின்றால் தி.மு.க. அரசாங்கம் ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள் ஆவார்கள்.

    இது 2015-ல் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க.வினர், அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்கள், அதே மனிதர் தி.மு.க.விற்கு வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதா? தமிழக அரசு அவருக்கு ஆதரவு கொடுக்க கூடாது. அப்படி ஆதரவு கொடுத்தால் அது ஊழலுக்கு துணை போகும் செயல்.

    இதுவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை:

    ராகுல் பேட்டி குறித்து பா.ஜனதா முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    மோடியின் கண்களில் பயத்தை பார்த்ததாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார். காமாலை கண்களுக்கு பார்த்ததெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். தன்னுடைய எதிர்காலம் பாழாகி போகும் என்ற அச்சத்தின் வெளிப்பாடு தான் இது.

    ஒரு காலத்தில் சட்டத்துக்கு மேலாக, தான் நடக்க முடியும் என்று தன்னுடைய பாட்டி இந்திரா இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மேலாகவும், சட்டத்துக்கு மேலாகவும் நிற்க முடியும் என்ற அகம்பாவத்தின் படி நடந்து காட்டினார். அவர் விட்டு சென்ற எச்சம், சொச்சத்தின்படி ராகுல் நடக்க நினைக்கிறார். அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

    பாராளுமன்றத்தின் உள்ளே ஒன்று வெளியே ஒன்று என இரண்டு விஷயங்கள் உள்ளன. பாராளுமன்றத்துக்குள் பா.ஜனதா ஒரு கேள்வி கேட்கிறது. அதற்கு பதில் சொல்ல தயாரில்லை. குழப்பத்தை உருவாக்குகிறார்கள். பாராளுமன்றத்துக்குள் ராகுல் தனக்கு தனி சலுகை எதிர்பார்த்தால் விதிகள் அனுமதிக்காது.

    பாராளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதை யார் தடுப்பார்கள். காங்கிரஸ் காழ்ப்புணர்ச்சி, பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சியை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும்.
    • அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளை கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

    நாகர்கோவில்:

    பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும். அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளான மேலாடை தவிர்த்தல், தலையில் தலைப்பாகை அணிதல், நெற்றியில் திருநாமம் இடல் போன்ற கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாகவேண்டும்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ், சாமிதோப்பு தலைமை பதிக்குள் அழைத்து சென்றுள்ளார்.

    உடன் சென்ற அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேலாடையின்றி, தலைப்பாகை அணிந்து சென்றுள்ளனர். ஆனால் அய்யாவை அவமதிக்கும் வகையில், அவர் வகுத்து வைத்த விதிமுறைகளை வேண்டுமென்றே மீறும் வகையில் உதயநிதி ஸ்டாலினும், மகேசும் செயல்பட்டுள்ளனர். உதயநிதிஸ்டாலின், மகேஷ் ஆகியோர் தாங்கள் செய்த தவறுக்கு அய்யாவை வணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

    மேலும், அவர்களை பதியின் சார்பில் உள்ளே அழைத்து சென்ற முதன்மை குரு பால ஜனாதிபதி தாம் வகிக்கும் பொறுப்பை துறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மதிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அளவிற்கு நான் இல்லை. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி என்றும், எப்போதும் அப்படியே திகழ்வதற்கான வாய்ப்பு வரும் என நம்புகிறேன்.

    தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக ஏன் இதை சொல்லி இருக்கிறார் என தெரியவில்லை. நாங்களும் அவர்களோடு சமரசம் செய்யமாட்டோம். தமிழக மக்களும் தி.மு.க.விடம் சமரசம் செய்ய தயாராக இல்லை. தமிழக மக்களுக்காக தி.மு.க.வை எதிர்த்து போராடுவதற்கு பா.ஜ.க. எப்போதும் தயாராக உள்ளது.

    அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் போலீசார் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இதேபோல் எல்லா விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளார்களா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

    கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து அப்போது மத்திய மந்திரியாக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என் மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது.

    தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது சரியானது அல்ல. ஆனால் அமைச்சர் மீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால், அன்று நானும் மந்திரியாக இருந்தபோதுதான் என் மீது செருப்பு வீசப்பட்டது. அப்போது அதனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒரு ஆவேசத்தில் மக்கள் இருக்கும்போது அதனை பெரிய மனதோடு விலகிச்செல்ல வேண்டும். மந்திரி மீது மட்டுமல்ல, சாதாரண மனிதன் யார் மீதும் செருப்பு வீசக்கூடாது.

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காபட்டணம் துறைமுகத்தில் இதுவரை 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த துறைமுகத்தில் நிரம்பி இருக்கக்கூடிய மணலை எடுக்க வேண்டும். அதன் பணிகளை தமிழக அரசு விரைவாக முடிக்க வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. எல்லையை கண்காணிப்பதில் எந்த அளவிற்கு மற்றவர்கள் தயாராக இருக்கிறார்களோ, அதேபோல இந்திய எல்லையை பாதுகாப்பதில் நம்முடைய நாடும் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட தலைவர் கதிரவன், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், ஆத்மா கார்த்திக், மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    ×