என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து- கணவருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்13 Sep 2019 2:57 PM GMT (Updated: 13 Sep 2019 2:57 PM GMT)
தூத்துக்குடியில் மது குடித்து விட்டு வந்த தகராறில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகர் காதர் மீரான்நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவசக்தி (28). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முத்துராமலிங்கத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதேபோல் நேற்றும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனை சிவசக்தி கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம் கத்தியால் மனைவியை குத்தினார். இதனால் படுகாயமடைந்த சிவசக்தி தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தெர்மல்நகர் போலீசார் தப்பியோடிய முத்துராமலிங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X