என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இயற்கை எரிவாயு திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது யார்? சட்டசபையில் அதிமுக-திமுக காரசார விவாதம்
Byமாலை மலர்3 July 2019 7:13 AM GMT (Updated: 3 July 2019 7:13 AM GMT)
தமிழகத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக சட்டசபையில் இன்று அதிமுக, திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
சென்னை:
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும், மத்திய அரசு அனுமதித்தாலும் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்றும் கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கேட்டும் தற்போது வரை அரசு வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொடுத்த அனுமதி, அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த விஷயத்தில் திமுக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாகவும், அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக ஆட்சியின்போது அனுமதி தரவில்லை என்றும், ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாகவும் கூறினார்.
திமுக ஆட்சியில் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதிமுக மீண்டும் மீண்டும் பொய் பிரசாரம் செய்வதாகவும் டிஆர்பி ராஜா பேசினார்.
இந்த காரசார விவாதம் காரணமாக சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும், மத்திய அரசு அனுமதித்தாலும் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்றும் கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கேட்டும் தற்போது வரை அரசு வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொடுத்த அனுமதி, அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த விஷயத்தில் திமுக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாகவும், அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக ஆட்சியின்போது அனுமதி தரவில்லை என்றும், ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாகவும் கூறினார்.
திமுக ஆட்சியில் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதிமுக மீண்டும் மீண்டும் பொய் பிரசாரம் செய்வதாகவும் டிஆர்பி ராஜா பேசினார்.
இந்த காரசார விவாதம் காரணமாக சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X