என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்25 Dec 2018 5:45 PM GMT (Updated: 25 Dec 2018 5:45 PM GMT)
போடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:
போடி ஆர்.ஐ.ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் சிவபாலன்(வயது39). இவரது மனைவி கலைவாணி(31). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 15 பவுன்நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. 5 வயது குழந்தை உள்ளது.
சிவபாலன் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய சிவபாலன் கலைவாணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார். கலைவாணியின் நகைகளை பறித்துக்கொண்டு மேலும் ரூ.5 லட்சம் பணம் வாங்கி வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் எனக்கூறி அவரை தாய்வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைவாணி போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய சிவபாலன், அவரது சகோதரன் சிவராமகாசி, மற்றும் உறவினர்கள் ஜெயகீதா, ஜெயலட்சுமி, மாலா, பாஸ்கரன் ஆகிய 6 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
போடி ஆர்.ஐ.ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் சிவபாலன்(வயது39). இவரது மனைவி கலைவாணி(31). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 15 பவுன்நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. 5 வயது குழந்தை உள்ளது.
சிவபாலன் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய சிவபாலன் கலைவாணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார். கலைவாணியின் நகைகளை பறித்துக்கொண்டு மேலும் ரூ.5 லட்சம் பணம் வாங்கி வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் எனக்கூறி அவரை தாய்வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைவாணி போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய சிவபாலன், அவரது சகோதரன் சிவராமகாசி, மற்றும் உறவினர்கள் ஜெயகீதா, ஜெயலட்சுமி, மாலா, பாஸ்கரன் ஆகிய 6 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X