என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக ஸ்டாலின் நிழலுடன் யுத்தம் செய்கிறார்- பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்24 Sep 2018 10:02 AM GMT (Updated: 24 Sep 2018 1:41 PM GMT)
சிறந்த வீரரான மு.க.ஸ்டாலின் தற்போது நிழலுடன் யுத்தம் செய்வதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #MKStalin #DMK
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரூ.28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் அமைக்க ஏற்பாடு செய்தது. ஆனால் இதனை சிலர் வேண்டுமென்றே தடுத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியா முழுவதும் 10 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் செலவில் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஏழை மக்களுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கூறிவருகிறார். மகன் மீதான பாசம் காரணமாக அவர் அவ்வாறு கூறிவருகிறார். மத்திய அரசின் தலையீடு காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது தவறு.
சட்டத்தை பார்க்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களை கவனிக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் என்ன கூறுகிறார் என்பதை கேட்க வேண்டும். இதை எல்லாம் செய்யும்முன்பு பாரதிய ஜனதாவை குறைசொல்வது சரியல்ல.
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தீர்ப்பாயம் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. அங்கு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக ஒரு தரப்பு மக்கள் கூறியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆலை மூடப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நெல்லை மாவட்டம் தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகாபுஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய வேண்டும். இது பற்றி மாநில அரசிடம் பேசப்படும்.
பாரதிய ஜனதாவுடன் ஒருபோதும் தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சிறந்த வீரரான அவர் தற்போது நிழலுடன் யுத்தம் செய்கிறார். கடந்த 1962-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும். கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் தர்மராஜ், உண்ணாமலை கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #MKStalin #DMK
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரூ.28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் அமைக்க ஏற்பாடு செய்தது. ஆனால் இதனை சிலர் வேண்டுமென்றே தடுத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியா முழுவதும் 10 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் செலவில் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஏழை மக்களுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கூறிவருகிறார். மகன் மீதான பாசம் காரணமாக அவர் அவ்வாறு கூறிவருகிறார். மத்திய அரசின் தலையீடு காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது தவறு.
சட்டத்தை பார்க்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களை கவனிக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் என்ன கூறுகிறார் என்பதை கேட்க வேண்டும். இதை எல்லாம் செய்யும்முன்பு பாரதிய ஜனதாவை குறைசொல்வது சரியல்ல.
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தீர்ப்பாயம் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. அங்கு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக ஒரு தரப்பு மக்கள் கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகாபுஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய வேண்டும். இது பற்றி மாநில அரசிடம் பேசப்படும்.
பாரதிய ஜனதாவுடன் ஒருபோதும் தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சிறந்த வீரரான அவர் தற்போது நிழலுடன் யுத்தம் செய்கிறார். கடந்த 1962-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும். கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் தர்மராஜ், உண்ணாமலை கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #MKStalin #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X