என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம்- ஜி.கே.மணி
Byமாலை மலர்14 Aug 2018 10:38 AM GMT (Updated: 14 Aug 2018 10:38 AM GMT)
அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #PMK #AnbumaniRamadoss #GKMani
மதுரை:
மதுரையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
வருகிற செப்டம்பர் மாதம் 1,2-ந் தேதிகளில் ‘வைகையை காப்போம், விழிப்புணர்வு கொள்வோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த பிரசாரம் வைகை அணையில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது 40 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு அணையை பராமரிக்காததும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் தான் காரணம்.
வைகை நதியை பராமரித்து பாதுகாத்தால் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கின்ற அணையையும் பராமரிக்கவில்லை. இதனால் தான் மழை காலங்களில் 40 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கிறது.
மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து கூட்டணி அமைப்போம். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம்.
ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா என்பதை தற்போது கூற முடியாது. விரைவில் இது தொடர்பாக ராமதாஸ் முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss #GKMani
மதுரையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
வருகிற செப்டம்பர் மாதம் 1,2-ந் தேதிகளில் ‘வைகையை காப்போம், விழிப்புணர்வு கொள்வோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த பிரசாரம் வைகை அணையில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது 40 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு அணையை பராமரிக்காததும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் தான் காரணம்.
வைகை நதியை பராமரித்து பாதுகாத்தால் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கின்ற அணையையும் பராமரிக்கவில்லை. இதனால் தான் மழை காலங்களில் 40 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கிறது.
கொள்கை சார்ந்த கூட்டணி என்பது தற்போது தமிழகத்தில் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் ராமதாஸ் முடிவு எடுப்பார்.
ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா என்பதை தற்போது கூற முடியாது. விரைவில் இது தொடர்பாக ராமதாஸ் முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss #GKMani
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X