search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலிவலம் அருகே வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
    X

    ஆலிவலம் அருகே வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது

    ஆலிவலம் அருகே வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ஆலிவலம் காவல் சரகம் செட்டியமூலை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் துர்கா (வயது 35). இவர் தனது எல்லைக்குட்பட்ட குளங்களில் நீர் நிலைகளை ஆராய நேற்று சென்றார். அப்போது அதே பகுதி எல்லையம்மன் கோவில் குளத்தில் ஆய்வு செய்துவிட்டு குளத்தை புகைப்படம் எடுக்க முயன்றார்.

    அப்போது குளத்தில் அதே ஊரை சேர்ந்த வீரமணி என்பவர் குளித்துக்கொண்டிருந்ததை கண்ட துர்கா அவரை கரையேறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி துர்க்காவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆலிவலம் போலீசில் துர்கா அரசு பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் கொடுத்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தார்.

    Next Story
    ×