என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசியில் கோவிலில் கர்ப்ப கிரகத்துடன் சேர்ந்து ‘செல்பி’ எடுத்த வாலிபர்
Byமாலை மலர்16 May 2018 10:15 AM GMT (Updated: 16 May 2018 10:15 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி லிங்கேசுவரர் கோவிலுக்குள் சென்ற வாலிபர் ஒருவர், மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலையுடன் சேர்ந்து செல்பி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கேசுவரருடன் தான் இருப்பது போல் செல்போனில் செல்பி எடுத்தார்.
இதை பார்த்த மேலும் சில பக்தர்கள் தாங்களும் செல்பி எடுக்க முயன்றனர். கோவில் அர்ச்சகர்கள் செல்பி எடுத்த நபரை பிடித்து செயல் அலுவலர் அழகேசனிடம் அழைத்து சென்றனர். அவர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் மங்கலம் பகுதியை சேர்ந்த துரை (35) என்பது தெரிய வந்தது. அவரிடம் கோவிலுக்குள் மூலஸ்தான சுவாமியை படம் பிடிக்க கூடாது என்று செயல் அலுவலர் எச்சரித்து அனுப்பினார். இந்த சம்பவம் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கேசுவரருடன் தான் இருப்பது போல் செல்போனில் செல்பி எடுத்தார்.
இதை பார்த்த மேலும் சில பக்தர்கள் தாங்களும் செல்பி எடுக்க முயன்றனர். கோவில் அர்ச்சகர்கள் செல்பி எடுத்த நபரை பிடித்து செயல் அலுவலர் அழகேசனிடம் அழைத்து சென்றனர். அவர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் மங்கலம் பகுதியை சேர்ந்த துரை (35) என்பது தெரிய வந்தது. அவரிடம் கோவிலுக்குள் மூலஸ்தான சுவாமியை படம் பிடிக்க கூடாது என்று செயல் அலுவலர் எச்சரித்து அனுப்பினார். இந்த சம்பவம் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X