search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை வைகை ஆற்றில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
    X

    மதுரை வைகை ஆற்றில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

    வைகை ஆற்றில் வாலிபர் கொலையில் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் வேல்ராஜ் (வயது 23). இவர் தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடையில் டீக்கடை நடத்தி வந்தார்.

    சித்திரை திருவிழாவுக்காக மதுரைக்கு வந்திருந்த வேல்ராஜ் கடந்த 9-ந் தேதி ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன், கணபதி (18), அமர்நாத் (20), பாலமுருகன் என்ற கட்டையன் (19). பிரபாகரன் (21) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×