என் மலர்
உத்தரப் பிரதேசம்
- ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பாஜக தலைவர்கள் அனைத்து தவறான செயல்களையும் செய்ய லைசன்ஸ் பெற்றுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கலிகா ஹவேலி உணவகத்தின் வெளியே பாஜக கோடி பொருத்திய ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பகிர்ந்து விமர்சித்துள்ளது.
அந்த பதிவில், "இது பாரபங்கியின் கலிகா ஹவேலி உணவகம். இந்த குடும்ப உணவகத்திற்கு முன்பு பா.ஜ.க கொடியுடன் கூடிய காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள். உத்தரபிரதேசத்தில், பாஜக தலைவர்கள் அனைத்து தவறான செயல்களையும் செய்ய லைசன்ஸ் பெற்றுள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாராலும் அவர்களை தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய, இந்த பாஜக காரர்களை துடைத்தெறிய வேண்டும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
பாஜக கொடி பொருத்தப்பட்ட கார் ரேபரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
- பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பைக்கில் பயணம் செய்தவாறே ரீல்ஸ் எடுத்த 2 இளைஞர்கள் மீது கார் மோதியதில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் முந்தாலா கிராமத்தைச் சேர்ந்த சமர் மற்றும் நோமன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அண்மை காலங்களில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
- 6 ஆவது மாடிக்கு சென்று 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
- படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் 6 ஆவது மாடியில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்கும் போது தவறி விழுந்த 16 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
11 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி 6 ஆவது மாடிக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது செல்போன் அவளது கையை விட்டு தவறி விழ, அதை பிடிக்க முயன்றபோது அவர் 6 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
ஆனால் களிமண் நிறைந்த பூந்தொட்டி மேல் அவள் விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். அவளது வலது காலில் எலும்பு முறிவும், தலையின் சிறிய அளவிலான காயமும் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயரமான இடங்களில் இருந்து செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது தவறி விழுந்து பலர் உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது.
- 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசால் ரூ.18,00 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கட்டுமானப் பணிகள் மீதமிருந்த நிலையில் கடந்த கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அவசர சைவசரமாக கோவிலின் மூல விக்ரகமான பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. இது மக்களவைத் தேர்தளுக்காக பாஜக நடத்திய நாடகமென எதிரிக்கட்சிகள் குற்றம்சாட்டின.
அனைத்தையும் மீறி ராமர் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்துகொண்டிருந்த நிலையில் சமீப காலமாக அங்கு நடந்துவரும் சம்பவங்கள் கோவிலை பொலிவிழக்கச் செய்வதாக அமைந்துள்ளது. கடந்த மாதங்களில் சிறிய மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாதபடி கோவிலின் மேற்கூரை ஒழுகும் புகைப்படங்கள் வைரலாகின.
கோவிலின் மூத்த அர்ச்சகரும் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கோவின் பிரதான பாதையாக அமைக்கப்பட்ட ராம பாதை மழையால் சேதமடைந்த வீடியோக்களும் இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.ஊழல் செய்யவே பாஜக ராமர் கோவிலை கட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் அடுத்த சர்ச்சையாக அயோத்தி கோவிலுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 விளக்குகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பராமரிப்பைத் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த மார்ச் 19ம் தேதி கணக்கெடுப்பின்போது அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில் அதன்பின் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட வண்ண விளக்குகளின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டினையும் வன்புணர்வு செய்துள்ளார்.
- இதைப் பக்கத்து வீட்டில் உள்ளவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்
உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை 50 வயது அரசு ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அருவருப்பூட்டும் வீடியோ வெளியான நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்சகர் [Bulandshahr] பகுதியில் நேற்று, வீடு ஒன்றில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து மாவட்ட ADO [விவசாயத் துறை] அதிகாரியாக உள்ள 50 வயதான கஜேந்திர சிங் என்பவர் மதுபோதையில் அத்துமீறி உள்ளே வந்து சிறுமியை தனது அந்தரங்க உறுப்பை தொடும்படி கட்டாயப்படுத்தி பின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர், அந்த வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டினையும் வன்புணர்வு செய்துள்ளார்.
இதைப் பக்கத்து வீட்டில் உள்ளவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிடவே, அது போலீசார் கவனத்துக்குச் சென்றுள்ளது. எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கிலும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கிலும் அரசு ஊழியரான கஜேந்திர சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமி வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்காமல் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரருக்கு கண்டங்கள் குவிந்து வருகிறது
- அவரது அடிவயிற்றில் உள்ள கூடுதலான சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது.
- முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உற்பத்தி செய்யும் ovary இருந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை சென்றுள்ளார்.
அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப் பை [uterus] என்று தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உருவாகும் ovary இருந்துள்ளது. ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
- ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி பின்னரும், அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் கடந்த வாரம் திங்கட்கிழமை பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் ஏற்பட்ட வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையில் அந்நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும்படி குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. அண்டை நாடான இந்தியா வங்கதேசத்தில் இருந்து தப்பியோடி வரும் நபர்களை ஊடுருவ விடாமல் தடுத்து வருகிறது.
இந்த நிலையில் வங்கதேச வன்முறை தொடர்பாக இந்தியா சர்வதேச அளவில் இந்த பிரச்சனையை எழுப்ப ணே்டும் என இந்தியா கூட்டணியின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எந்த சமூகமும் பாதிக்கப்படக் கூடாது. அது மெஜாரிட்டி சமூகம் அல்லது மைனாரிட்டி இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், எந்த மதப்பிரினரும் என இருந்தாலும் வங்காளதேசத்தில் வன்முறைக்கு பாதிக்கப்படக்கூடாது.
மனித உரிமை பாதுகாப்பு என்ற வகையில் இந்தியா இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் வலுவாக எழுப்ப வேண்டும். நமது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு இது முக்கியமான பிரச்சனை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
காலத்தின் சோதனைக்கேற்ப சரியோ தவறோ, பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் வன்முறைப் புரட்சிகள், ராணுவப் புரட்சிகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்தேறியுள்ளன என்பதற்கு உலக வரலாறு சாட்சி.
ஒரு விஷயம் என்னவென்றால், மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது சொந்த அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் எந்த சக்தியும் நாட்டை உள்நாட்டிலும் வெளியிலும் பலவீனப்படுத்துகிறது என்பதை வரலாறு கற்பிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
- புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
- ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொராதாபாத் கோட்டத்தின் கீழ் வரும் பில்பூர் நிலையத்திற்கு அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர்.
இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பயணிகள் சிலர் பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
பயணிகள் அவசரகால நிறுத்தத்திற்கான சங்கிலியை இழுத்துவிட்டு குதித்ததால், ரெயில் மெதுவாக செல்லும்போது பயணிகள் பீதியில் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அங்கு வசித்து வந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர்.
வங்காள தேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற நிலையில் நாட்டில் உள்ள நிலையின்மையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து இன்று தலைநகர் டாக்காவில் பெரிய அளவிலான பேரணி நடந்து வருகிறது. அந்நாட்டின் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனிசுக்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தியிலும் பிரதமர் மோடி அதையே வலியுறுத்தியுள்ளார். மேலும் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கும் மக்கள் நுழைய வாய்ப்புள்ளதால் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நிலைமை இப்படியாக இருக்க இதைச் சாதகமாகப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்து ரக்ஷா தல் என்ற தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காசியாபாத் நகரில் உள்ள கவி நகரின் குல்தார் ரயில் நிலையத்தின் அருகே வசித்து வந்த இஸ்லாமியர்களை வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களது குடியிருப்பைச் சூறையாடி கபளீகரம் செய்துள்ளனர். தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த குடிசைப் பகுதியில் சுமார் 100 - 150 குடும்பங்கள் இருக்கிறது. இரவு 7.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து அவர்களின் உடைகளையும், உடைமைகளையும் தீவைத்து எரித்துள்ளனர். islamiyargalaiலத்திகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர். இதே வாரத்தில் அப்பகுதியில் அந்த அமைப்பினர் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது.
தாக்குதல் குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், 'திடீரென்று 30க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து இஸ்லாமிய குடும்பத்தினரை தேடி தாக்குதல் நடத்தினர். அந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. நாங்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியும், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடிப்பதுடன் நிற்காமல் உடைமைகளுக்கு தீயும் வைத்தனர். எல்லாமே சேதமடைந்த பிறகுதான் காவல்துறையினர் வந்தனர்' என்று தெரிவித்தனர்.
தற்போது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவ்வமைப்பின் தலைவர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். பலர் தலைமறைவாகியுள்ளனர். இந்து ரக்ஷா தல் தலைவர் பிங்கி சவுத்ரி இந்த தாக்குதலுக்கு தாங்கள் முழுமையாக பொறுப்பேற்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
- ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வைரலானது.
- "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உருளை கிழங்கை லஞ்சமாக கேட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ராம் கிரிபால் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒரு வழக்கை முடித்து வைப்பதற்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த ஆடியோவில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் ஒரு விவசாயியிடம் 5 கிலோ "உருளைக்கிழங்கு" கேட்கிறார். அதற்கு விவசாயி என்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு தான் கொடுக்க முடியும் என்று பதில் சொல்கிறார். கடைசியாக 3 கிலோ உருளை கிழங்கு கொடுப்பதாக இருவரும் டீல் பேசியுள்ளனர்.
விசாரணையில், "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
ஆடியோ வைரலானதை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராம் கிரிபால் சிங் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த கன்னோஜ் எஸ்பி அமித் குமார் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்
- எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது.
- கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்கள் அமைக்கப்பட்டது
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட அந்த 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாகக் கடந்த ஜூலை மாதம் அனிதா என்ற பெண் ஒன்பதாவதாகக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக இயங்கி வந்த போலீசார் ஒருவழியாக குல்தீப் என்ற அந்த கொலையாளியைப் பிடித்துள்ளனர்.

எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது. இதனால் கொலையாளியின் அடுத்த நகர்வு குறித்து அறிய முடியாத போலீஸ் படையினர் , அப்பகுதிகளில் விவசாயிகள் போலவும், ஊர்க்காரர்கள் போலவும் மாறுவேடத்தில் உலவினர்.
உள்ளூர்வாசிகள் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கொலையாளியின் பென்சில் ஓவியத்தை உருவாக்கி அதை வைத்துத் தேடுதலைத் துரிதப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து ஆபரேஷன் தலாஷ் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் தான் நவாபன்ஞ் மாவட்டத்தில் உள்ள கங்காவர் என்ற பகுதியில் வைத்து குல்தீப் என்ற அந்த சீரியல் கொலையாளியை மடக்கிப் பிடித்துள்ளனர். குல்தீப்பிடம் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. தான் 6 பெண்களைக் கொலைசெய்ததாக குல்தீப் போலீசிடம் தெரிவித்துள்ளான்.

திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே குல்தீப்பின் மனைவி அவனை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்களின்மீது குல்தீப்புக்கு வெறுப்பு உருவாகி அதுவே கொலை செய்யத் தூண்டியுள்ளது. தனியாகச் சிக்கிய அந்த பெண்கள் உடலுறவுக்கு மறுக்கவே அவர்களை குல்தீப் கொலை செய்துள்ளான். குல்தீப்பிடம் மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
- கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட அந்த 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 1 கொலையும், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் அடுத்தடுத்த கொலைகளும், நவம்பரில் 2 கொலைகளும் அரங்கேறியுள்ளது. 8 வது கொலைக்கு பின்னர் , 300 போலீசை கொண்ட சிறப்பு படை 14 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மஃப்டியில் ரோந்து பணிவுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கடுத்து, கொலைகள் நடிப்பது நின்றுள்ளது. ஆனால் இந்த கொலைகளை செய்த நபரை [அல்லது நபர்களை] இன்னும் பிடிக்க முடியவில்லை.

அநேகமாகக் கொலையாளி உள்ளூர் வாசியாக இருக்க வாய்ப்புள்ளது என போலீசார் கருதுகின்றனர். காவல்துறை ரோந்தின் காரணமாக இந்த கொலைகள் தற்காலிகமாக நின்றிருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சேலையில் நெரித்துக் கொல்லப்பட்ட அனிதா என்ற 45 வயது பெண்ணின் உடல் கரும்புத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செர்கா பகுதியில் உள்ள பூஜ்யயா ஜாகிர் [Bhujiya Jagir] கிராமத்தில் கணவனுடன் வாழ்ந்து வந்த அனிதா கடந்த ஜூலை 2 ஆம் தேதி தனது பிறந்த ஊரான பதேகஞ்ச் கிர்கா [Fatehganj's Khirka] கிராமத்துக்கு வந்துள்ளார். அங்கு, ஏடிஎம் -இல் பணம் எடுக்க சென்ற அனிதா அதன்பிறகு கரும்புத்தோட்டத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக உயர்மட்ட காவல் அதிகாரிகள் குழு விவாதித்து கொலையாளியைப் பிடிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வருகிறது. உள்ளூர் மக்கள் சொன்ன அங்க அடையாளங்களின்படி மூன்று பேரின் உருவப்படத்தை வரைந்து அதன்மூலம் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது போலீஸ்.







