என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கானது.
    • அது ஏழை மக்கள், தொழிலாளர்களால் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்.

    இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர்.

    அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.

    90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை.

    இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி.

    அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது.

    அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு சார்பில் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டவுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
    • போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய இருவரும் போலீசில் சரண் அடைந்தனர்.

    லக்னோ:

    1978-ம் ஆண்டு மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. உத்தரபிரதேசத்தில் முதல்- மந்திரியாக ராம்நரேஷ் யாதவ் இருந்தார்.

    அந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 152 பயணிகளுடன் கொல்கத்தாவில் இருந்து புதுடெல்லி புறப்பட்டது. அந்த விமானம் லக்னோ வந்த போது விமானத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களான போலா நாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய 2 பேர் நேராக விமானியின் அறைக்குள் நுழைந்து கையில் துப்பாக்கியை வைத்து கொண்டு விமானத்தை கடத்துவதாக அறிவித்தனர்.

    மேலும் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய இருவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ஜெயிலில் உள்ள இந்திரா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.

    இதைத்தொடர்ந்து அரசு சார்பில் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டவுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து விமானம் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகிய இருவரும் போலீசில் சரண் அடைந்தனர்.

    பின்னர் 1980-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆனவுடன் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே ஆகியோர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டது.

    பின்னர் போலாநாத் பாண்டே உத்தரபிர தேசத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். தற்போது 71 வயதான அவர் பதவி எதிலும் இல்லாத நிலையில் சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் அவர் காலமானார். அவரது உடல் லக்னோவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
    • தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த நபர், அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாலியா தாலுகாவின் சம்பூர்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் ராம்சந்திரா என்பவரின் மகன் ஹரி ஸ்வரூப் (40) என்பவரின் கை விரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    டப்பாவில் பாம்பை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் கூட பயந்து போனார்கள். ஹரி தன்னை கடித்த பாம்பு இதுதான் என காட்டி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க சொன்னார்.

    அவரது தைரியத்தை கண்டு டாக்டர்கள் வியந்தனர். பாம்பு கடித்த பின்னும் ஹரி நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்.

    தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.
    • ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். அவருக்கும், அயோத்தியை சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.

    அயோத்தி நகர சாலைகள், அங்குள்ள வளர்ச்சி, அழகு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் கணவர் முன்னிலையில் புகழ்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பெரியவர்கள் சமாதானத்துக்கு பிறகு, மரியம் மீண்டும் அயோத்தியில் கணவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கோபத்தில் இருந்த அர்ஷத், மரியமை அடித்து உதைத்தார். பிரதமர் மோடியையும் ஆதித்யநாத்தையும் வசைபாடிய அவர், தன் மனைவியை பார்த்து 'தலாக், தலாக், தலாக்' என்று மூன்று முறை கூறினார்.

    மேலும், அர்ஷத்தின் குடும்பத்தினர் மரியமின் கழுத்தை நெரிக்க முயன்றனர். மேற்கண்ட தகவல்களை பரைச் நகர போலீசில் மரியம் புகார் மூலம் தெரிவித்தார். அதன்பேரில், கணவர் அர்ஷத் உள்பட அவருடைய குடும்பத்தினர் 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை இந்த உத்தரவை நிறைவேற்றியுள்ளனர்
    • உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர்.

    உத்தரப் பிரதேச யோகி ஆதித்தநாத் அரசின் உத்தரவால் அம்மாநிலத்தில் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அரசின் மாநவ் சம்பதா [Manav Sampada] இணையத்தில் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி தேதியாகக் கடந்த வருட டிசம்பர் 31 ஆம் தேதியை நிர்ணயித்திருந்தது அரசு. பின் அதை ஜூன் 30 வரையும், அதன்பின் ஜூலை 31 வரையும் நீட்டித்திருந்து. ஆனால் வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை தங்களின் சொத்து விவரங்களை அரசின் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

    எனவே ஆகஸ்ட் 31 வரை கடைசி தேதியை மீண்டும் அரசு நீட்டித்திருந்தது. இந்நிலையில் இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சுமார் 17 லட்சத்து 88 ஆயிரத்து 429 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 26 சதவீதம் பேர உத்தரவை நிறைவேற்றியுள்ள நிலையில், மீதம் இருக்கும் 13 லட்சம் பேர் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தங்களின் சம்பளத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    • நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு.
    • ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இது தொடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், ஒருகட்டத்தில் விரக்தியாகி தனது ஆட்டோவை தீ வைத்து எரித்தார்.

    ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோவிற்கு தீ வைத்ததற்காக ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதே சமயம், தன்னை பழிவாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

    • ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.
    • ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவில் பூர்வா [Baniyaani Purwa] பகுதியில் வசித்து வரும் ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.

    நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதே இந்த சண்டைக்குக் காரணம். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, தனது கணவனின் கொடூரமான செயல் குறித்து பேசினார். கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    • அவர்கள் இருவரும் தங்களது கைகளைத் துணியால் ஒன்றாக கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துள்ளனர்.
    • தனது மகள்கள் தற்கொலை செய்து கொள்ள மூத்த மகள் அனிதாவின் கணவனே காரணம் என்று தந்தை அசோக் குமார் போலீசில் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் சகோதரிகள் இருவரும் கைகளைக் கட்டி ஒன்றாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் அசோக் குமார். இவருக்கு அனிதா, சுனிதா [19], புனிதா [17] என மூன்று மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் திருமணமாகிச் சென்றுவிட்டார். சுனிதா 12 வகுப்பில் தேரியுள்ள நிலையில் புனிதா 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை வெளியில் சென்ற சுனிதாவும், புனிதாவும் மீண்டும் வீடு திரும்பாததால் ஊர் மக்களுடன் மகள்களைத் தந்தை அசோக் குமார் தேடியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் இருவரின் உடல்களும் பிசுஷி ஆற்றில் Bisuhi river கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கிராமவாசிகள் உதவியுடன் அவர்கள் இருவரின் உடல்களும் ஆற்றில் இருந்து பின்னர் மீட்கப்பட்டது. அவர்கள் இருவரும் தங்களது கைகளைத் துணியால் ஒன்றாக கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துள்ளனர். தனது மகள்கள் தற்கொலை செய்து கொள்ள மூத்த மகள் அனிதாவின் கணவனே காரணம் என்று தந்தை அசோக் குமார் போலீசில் தெரிவித்துள்ளார். அனிதாவின் கணவன் அவர்கள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

    தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளுக்கு 044 2464 0050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

    • சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார்.

    நாடு முழுவதும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேலையிலும் பாலியல் பலாத்கார கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் பள்ளியில் பி.டி. ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.

    கடந்த வருடம் டிசம்பர் மாதம், சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கபட்டதைத் தொடர்ந்து சிறுமியை அத்தை ஊருக்கு அனுப்பி பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தனக்கு நடந்ததைச் சிறுமி அத்தையிடம் கூறவே, பெற்றோர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. ஆனால் ஊரார் முன் அவமானப்படக் கூடுமோ என்று பயந்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர்.

    இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார். கடந்த மாதங்களில் சிறுமியின் மிகவும் மோசமாகிக்கொண்டே வந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த அந்த பி.டி. ஆசிரியர் தப்பியோடிய நிலையில் அவரை இன்னும் போலீசார் தேடி வருகிறனர். இந்த நிலையில்தான் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். 

    • வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டது.
    • தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று[ஆகஸ்ட் 17] [சனிக்கிழமை] அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரணாசியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயில் உ.பியின் கான்பூர் மற்றும் பீம்சென் நிலையத்துக்கு இடையில் தண்டவாளத்தில் இருந்த தடையில் இடித்துள்ளது.

     

    இதில் ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்ததை அறிந்து தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிறப்பு ரெயிலில் அதிகாரிகள் அகமதாபாத் அனுப்பிவைத்தனர். 

     

    • மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிலாஸ்பூர்:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய நர்சு ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தை சேர்ந்த 30 வயதான நர்சு ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 30-ந் தேதி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட நர்ஸ் மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நர்சை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் ருத்ராப்பூரின் இந்திராசவுக் பகுதியில் இ-ரிக்சாவில் ஏறும் காட்சி கடைசியாக சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அந்த நர்சின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிமனைப்பகுதியில் நர்ஸ் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    அவரது செல்போன் மற்றும் மணிபர்ஸ் ஆகியவை திருட்டு போய் இருந்தது. நர்சின் செல்போன் எண் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் பரேலியை சேர்ந்த தர்மேந்திரகுமார் என்ற தொழிலாளி அந்த நர்சை கற்பழித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்ட்டது.

    கடந்த 30-ந் தேதி நர்சு ஆஸ்பத்திரியில் பணி முடிந்து தனியாக வீட்டிற்கு சென்ற போது தர்மேந்திரகுமார் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் நர்சை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று கற்பழித்த அவர் நர்சின் கைக்குட்டையாலேயே மூச்சு திணற செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் பதுங்கி இருந்த தர்மேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் நர்சிடம் இருந்து அவர் திருடி இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான தர்மேந்திரகுமார் போதைக்கு அடிமையானவர் என்றும் அவர் நர்சை கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான்
    • மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக வார்டு பாய் தெரிவித்துள்ளான்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண்ணுக்கு வார்டு பாய் [மருத்துவமனை ஊழியர்] அறுவை சிகிச்சை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் ஹர்தயா பகுதியில் இயங்கி வரும் பஸ்தி மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஆபரேஷன் தேட்டரில் நிர்வாணமாக மயக்க நிலையில் நிலையில் இருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    அந்த மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக அந்த வார்டு பாய் தெரிவித்துள்ளான். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசும் விசாரணை நடத்தி வருகிறது. பாஜக அரசின் கீழ் மருத்துவ மற்றும் சுகாதார சூழலின் கொடுமையான நிலையை இது காட்டுவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    ×