தொடரும் பணிச்சுமை மரணங்கள்.. வேலை செய்யும்போதே நாற்காலியில் இருந்து சரிந்து பெண் ஊழியர் பலி

வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் பணிச்சுமை மரணங்கள்.. வேலை செய்யும்போதே நாற்காலியில் இருந்து சரிந்து பெண் ஊழியர் பலி
Published on

பணியிடத்தில் சூழலால் ஏற்படும் அழுத்தங்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அளவுக்கு அதிகமான பணிச்சுமையால் கேரளாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டின் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த பெண் பணிச்சுமையால் உயிரிழந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கிய தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சதப் பாத்திமா என்ற 45 வயது பெண்மணி நேற்றைய தினம் வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அதிக பணிச்சுமையினால் பாத்திமா மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பாத்திமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல் உதவி ஆணையர் ரதராமன் சிங் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com