என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • இலங்கையின் முத்தையா முரளிதரன் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
    • இந்தியாவின் அஸ்வின் தற்போது முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    கான்பூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 18-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    2012-ம் ஆண்டில் இந்தியா 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது. அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது.

    இரு டெஸ்டிலும் சேர்த்து 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற முத்தையா முரளிதரனின் சாதனை அஸ்வின் சமன் செய்துள்ளார். இருவரும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2வது டெஸ்டின் முதல், இரண்டாம் இன்னிங்சில் அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.
    • இரு டெஸ்டிலும் சேர்த்து மொத்தம் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.

    கான்பூர்:

    வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 18-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    2012-ம் ஆண்டில் இந்தியா 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது. அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. இந்த 12 ஆண்டு காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தடவை தொடரை வசப்படுத்தியதும் அடங்கும்.

    இந்த தொடரில் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் அரை சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    இரு டெஸ்டிலும் சேர்த்து 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.

    • இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இந்தியா 17.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து வென்றது.

    கான்பூர்:

    இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது.

    முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன் எடுத்து இருந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வங்கதேசம் 233 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் சதம் (107)அடித்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இந்தியா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

    இறுதியில், இந்திய் அணி முதல் இன்னிங்சில் 34.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இது வங்காளதேச அணியின் ஸ்கோரைவிட 52 ரன் கூடுதலாகும்.

    தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் அணி அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2 விக்கெட்டுக்கு 26 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய ஷத்மான் அரை சதமடித்து ஆட்டம் இழந்தார். தனி ஆளாகப் போராடிய ரஹிம் 37 ரன்னில் வெளியேறினார். இதனால் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 8 ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

    மழை காரணமாக டிராவில் முடியும் என நினைத்த இந்தப் போட்டியை இந்தியா வெற்றியுடன் முடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • டார்கெட்டை நான் முடிக்கவில்லை என்றால் என்னை பணிநீக்கம் செய்துவிடுவதாக உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்
    • மனைவி மற்றும் 2 குழந்தைகளை மற்றொரு அறையில் பூட்டி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்

    பைனான்ஸ் நிறுவனம் 

    உத்தரப் பிரதேசத்தில் பைனான்ஸ் நிறுவன ஊழியர் பணிச்சுமையினால் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பணிச்சூழல் மீதான கேள்விகளை அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில்  தனியார் பைனான்ஸ் கடன் நிறுவனத்தில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்த 42 வயது ஊழியர் தருண் சக்சேனா நேற்று அதிகாலை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

    தற்கொலை கடிதம் 

    மனைவி மற்றும் 2 குழந்தைகளை மற்றொரு அறையில் பூட்டி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அவரது தற்கொலை கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 45 நாட்களாக நான் தூங்கவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். வேலையில் கொடுக்கப்பட்ட டார்கெட்டை நான் முடிக்கவில்லை என்றால் என்னை பணிநீக்கம் செய்துவிடுவதாக உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர் என்று எழுதிவைத்துள்ளார்.

    டார்கெட் மீட்டிங் 

    உயிரிழந்தவரின் உறவினரும் அவருடன் வேலை செய்பவருமான தருண் இதுகுறித்து பேசுகையில், அவர் மேல் அதிகாரிகள் அவருக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுத்துவந்தனர். நேற்று காலை கூட அவர் இறப்பதற்கு முன்பு அதிகாலை 6 மணிக்கு நடந்த வீடியோ மீட்டிங்கில், சரியான ஃபெர்பார்மன்ஸ் காட்டவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என்று மிரட்டினர். இதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் பேசுகையில், அவரின்  குடும்பத்தினர் நிறுவனத்தில் மீது புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

    அதிகரிக்கும் பணிச்சுமை மரணங்கள் 

    இந்தியாவில் இதுபோன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணிச்சுமை மரணங்கள் கவலையளிப்பதாக மாறி வருகிறது. சமீபத்தில் புனேவில் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் பணிச்சுமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். உத்தரப் பிரதேசத்தில் தனியார் வங்கி பெண் ஊழியர் பணியில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். நிர்வாகம் அளித்த அதிக பணிச்சுமையினால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக சக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

    • டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.
    • அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டெலிவரி மேன் (35) ஒருவர் ஐபோனை டெலிவரி செய்யச் சென்றபோது இருவரால் கொல்லப்பட்டார். ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக அவரை கொலை செய்த அவர்கள், இந்திரா கால்வாயில் அவரது உடலை வீசி உள்ளனர்.

    இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில்,

    சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு செய்துள்ளார்.

    பாரத் சாஹு என்ற அந்த டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார்.

    அப்போது சாஹுவை கஜனனும் அவரது நண்பரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர்.

    சாஹு இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செப். 25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சாஹுவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவனது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில், போலீசார் கஜனனின் எண்ணை கண்டுபிடித்து, அவரது நண்பர் ஆகாஷை தொடர்பு கொண்டனர்.

    போலீஸ் விசாரணையில், ஆகாஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மழையால் முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் விளாசினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்து சாதனை படைத்தனர். அப்போது, ரோகித் சர்மா 23 ரன்களில் அவுட்டானார்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் அவுட்டானார்.

    இந்நிலையில், அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    • சிறுவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்
    • இருவரின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்ட சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்

    உத்தரப் பிரதேசத்தில் 5 வயது சிறுவனை பண்ணையில் வைத்து இரண்டு நபர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட, சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டபோது அவ்வழியே சென்றோர் காப்பாற்றாமல் நின்று வீடியோ எடுத்தது மனிதாபிமானத்தைக் கேள்விக்குள்ளாகியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் [Hapur] மாவட்டத்தில் சிறுவன் வசித்து வந்த வீட்டின் வருகே உள்ள பண்ணையில் வைத்து கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அவ்வூரை சேர்ந்த இருவர் சிறுவனை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஆடு மேய்ப்பர்கள் இருவர் சிறுவனை காப்பாற்றாமல் நின்று மனசாட்சியில்லாமல் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தின் பின்னர் சிறுவனின் உடல் நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக தவறு செய்த இருவரின் வீட்டுக்கு சென்று பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர்.அதற்கு சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்மூலமே இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் தப்பியோடிய நிலையில் அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.

    • 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்
    • இந்த வைரல் வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது.

    இந்த வைரல் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமேதி போலீசார் தெரிவித்தனர்.

    • சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களா கனமழை பெய்து வருகிறது. இதனால் கோண்டா, லக்கிம்பூர் கெரி, சீதாபூர், பரூகாபாத், பஹ்ரைச், பாரபங்கி, புடான், பல்லியா, அசம்கர், கோரக்பூர், அயோத்தி, வாரணாசி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகர சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    இந்நிலையில் கோண்டா மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அவரது கணவர் முயற்சி செய்தார்.

    ஆனால் இதற்காக கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அவர் நாடிய போது, அவரது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது மனைவியை வெள்ளம் சூழ்ந்த சாலையில் கையில் ஏந்தியவாறு தூக்கி சென்றுள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் ஆஸ்பத்திரிக்கு கையில் தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    • இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
    • வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் பணியின்போது டிராலி அறுந்து இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. தலைநகர் நொய்டாவில் செக்டார் 62 பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வானுயர காட்டம் ஒன்றில் உயரத்தில் வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது டிராலியின் கயிறு அறுந்துவிழுந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு ரோப் மூலம் அவர்கள் கீழே விழாமல் உயிர்தப்பியுள்ளனர். அவர்களின் இடுப்புப் பகுதியில் பாதுகாப்பு ரோப் கட்டப்பட்ருந்த நிலையில் அதன் பேலன்சில் இருவரும் அந்தரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் உதவி கேட்டு கத்தும் சத்தம் கேட்டு சக பயணிகள் அவர்களை மேலே இழுத்து காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இரானி கோப்பைக்கான மும்பை அணியில் இடம் பிடித்திருந்தார்.
    • கான்பூரில் இருந்து லக்னோவிற்கு காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் சர்பராஸ் கான். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இவரது சகோதரர் முஷீர் கான். 19 வயதேயான இவர் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபியில இந்தியா "சி" அணிக்காக விளையாடி 181 ரன்கள் விளாசினார். சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், கலீல் அகமது ஆகியோர் இடம் பிடித்திருந்த இந்தியா "ஏ" அணிக்கெதிராக சதம் விளாசினார்.

    இரானி கோப்பையில் மும்பை- ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. மும்பை அணிக்காக முஷீர் கான் விளையாட இருக்கிறார்.

    இவர் இரானி கோப்பையில் விளையாடுவதற்கான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து லக்னோ செல்லும்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

    இந்த விபத்தில் அவரது கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரானி கோப்பையில் மும்பை அணிக்கெதிராக அவர் விளையாட முடியாது. மேலும், அக்டோபர் 11-ந்தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பையின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சுமார் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இரானி கோப்பைக்கான மும்பை அணியுடன் முஷீர் கான் லக்னோ செல்லவில்லை. அவரது தந்தையுடன் அசாம்காரில் இருந்து லக்னோவிற்கு தனியாக பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    • 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாபி சிங் (வயது 39). என்பவர் தனது தாய், சகோரர்கள் 2 பேர் சேர்ந்து 30 வருடங்களுக்கு பிறகு தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாபி சிங்கிற்கு பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற சகோரர்கள் உள்ளனர். கடந்த ஜூலை 1-ந் தேதி சகோதரர்களிடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகிய இருவரும் பஞ்சாபி சிங்கை மிரட்டியுள்ளனர். அப்போது 1994-ம் ஆண்டு தந்தையை கொலை செய்தது போலேவே உன்னையும் கொன்று தந்தையிடம் அனுப்புவோம் என மிரட்டியுள்ளனர்.

    இதைக்கேட்டதும் பஞ்சாபி சிங்கிற்கு தான் சிறுவனாக இருந்த போது தன் கண் முன்பு தனது தந்தை புத்தசிங்கை தனது தாய் ஊர்மிளாதேவி, சகோரர்கள் பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் கொலை செய்தது ஞாபகத்திற்கு வந்துள்ளது. அதாவது 1994-ம் ஆண்டு ஊர்மிளாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி ஊர்மிளாதேவியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதுதொடர்பாக புத்தசிங் தனது மனைவியை கண்டித்த போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு பஞ்சாபிசிங்கையும், அவரது இளையசகோதரரையும் ஊர்மிளாதேவி பக்கத்து வீட்டிற்கு சென்று தூங்குமாறு அனுப்பி உள்ளார். நள்ளிரவில் தூக்கம் வராமல் பஞ்சாபிசிங் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது ஊர்மிளாதேவியும், அவரது மகன்களான பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் சேர்ந்து புத்தசிங்கை கொலை செய்து வீட்டு முற்றத்தில் புதைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதைக்கண்ட ஊர்மிளா தேவி, முகேஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோர் இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என பஞ்சாபிசிங்கை மிரட்டி உள்ளனர்.

    இதனால் பஞ்சாபிசிங் அமைதியாக இருந்து விட்டார். காலங்கள் கடந்த நிலையில் தற்போது சகோதரர்களுக்கிடையே பணத்தகராறு ஏற்பட்ட நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு தாயும், 2 சகோதரர்களும் சேர்ந்து தனது தந்தையை கொலை செய்ததை பஞ்சாபிசிங் போலீசில் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஹத்ராசில் உள்ள வீட்டிற்கு சென்று புத்தசிங் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 8 அடி ஆழம் தோண்டினர். அப்போது அங்கிருந்து ஒரு மனித எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×