என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • முதலில் ஆடிய மும்பை அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் அபிமன்யு சதமடித்தார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    சாய் சுதர்சன் 32 ரன்னும், தேவ்தத் படிக்கல் 16 ரன்னும், இஷான் கிஷன் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 4 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்னும், துருவ் ஜுரல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், 161அடி உயர ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது. இது, 4 மாதங்களில் நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன், இங்குள்ள வளாகத்தில் ஏழு முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இந்த ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமர் கோயில் கட்டும் பணியை விரைவுபடுத்தவும், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் பணியாளர்களை அதிகரிப்பது குறித்தும், தேவைப்பட்டால் தொழில்நுட்பக் குழுவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்க இன்று முதல் மூன்று நாள் ஆய்வுக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மிஸ்ரா இன்று அயோத்தி சென்றடைந்தார்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
    • குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு மாயாவதி கடும் கண்டனம்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உடைபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் தொடர்பாக 3200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சாமியார் போலே பாபா பெயர் இதில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரானி கோப்பை தொடரில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
    • மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    போட்டி தொடங்கிய முதல் நாளில் மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மும்பை அணி பேட்டிங் செய்து வந்ததால் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

    இந்நிலையில், 2-ம் நாள் ஆட்டத்தில் 102 டிகிரி காய்ச்சலுடன் 9 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் அடித்து அவுட்டானர்.

    பேட்டிங் செய்து முடித்ததும் ஷர்துல் தாக்கூரின் உடல்நிலை மேலும் மோசமானதால் அருகில் இருந்த மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீரானதால் இன்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுகிறது. 

    • சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.
    • முறையான சடங்குகளுடன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.

    உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து சிலையைத் திருடிய திருடன் செவ்வாயன்று (அக்டோபர் 1, 2024) அதை அவனிடம் திருப்பிக் கொடுத்தான். திருடன் சிலையுடன் மன்னிப்புக் கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். இதில் கோவிலில் நடந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து தனக்கு நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பேசியுள்ளார். முறையான சடங்குகளுடன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது. ஒப்இந்தியாவிடம் பேசிய மஹந்த் ஜெய்ராம் தாஸ், திருடன் சிலையை ஆசிரமத்தின் வாயில் அருகே சணல் சாக்கில் வைத்து விட்டு சென்றதாக கூறினார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் பிரயாக்ராஜ் பகுதியில் புகழ்பெற்ற கவுகாட் கஸ்லா ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் கட்டப்பட்ட கோவிலின் கருவறையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ராதா-கிருஷ்ணரின் அஷ்டதாது சிலை நிறுவப்பட்டுள்ளது.

    நேற்று முந்தினம் இந்த சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இது குறித்து கோவில் நிர்வாகி மஹந்த் ஜெய்ராம் தாஸ் நவாப்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

    சிலை திருட்டு போனதால் கோவில் நிர்வாகி மஹந்த் ஜெய்ராம் தாஸ் சாப்பிடாமல் கவலையில் மூழ்கினார். ஆசிரமத்தில் இருந்த மற்ற சீடர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சூழலில் திருட்டு நடைபெற்ற மறுநாளான நேற்று கோவிலுக்கு அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அப்பகுதியினர் அது என்னவாக இருக்கும் என்று அதை பிரித்து பார்த்தனர்.

    அந்த மூட்டைக்குள் கோவிலில் திருடப்பட்ட ராதை-கிருஷ்ணரின் அஷ்ட தாது சிலைகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். மேலும் அந்த மூட்டையில் இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் எழுதப்பட்ட வாசங்களை அங்கிருந்தவர்கள் வாசித்தபோது மேலும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகிக்கு எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், "நான் பாவம் செய்து விட்டேன். எனது அறியாமையால் கிருஷ்ணர், ராதை சிலைகளை திருடினேன். சிலை திருடிய நாளில் தொடங்கி கெட்ட கெட்ட கனவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.

    மேலும் என்னால் தூங்கவோ சாப்பிடவோ நிம்மதியாக வாழவும் முடியவில்லை.

    பணத்துக்காக திருடியதால் என் மகனும் மனைவியும் கடுமையாக நோய்வாய் பட்டுள்ளனர். நான் சிலையை விற்கும் நோக்கத்தில் அதை கொள்ளையடித்தேன். என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு சிலையை விட்டு செல்கிறேன். என் தவறை மன்னித்து, சிலைகளை மீண்டும் கோவிலில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழந்தைகளை மன்னித்து சாமி சிலைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து அந்த பகுதியினர் நவாப்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிலையையும், கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் அந்த சிலைகள் கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை திரும்ப வந்ததால் ஆசிரமத்தில் இருந்தனா இவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து சிலைகளுக்கு ஜலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

    • டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை அணியின் சர்பராஸ் இரட்டை சதமடித்தார்.

    லக்னோ:

    இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 86 ரன்னும், சர்பராஸ் கான் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 97 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனுஷ் கோட்யான் சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த நிலையில் தனுஷ் கோட்யான் 64 ரன்னில் அவுட் ஆனார். ஷர்துல் தாக்கூர் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி 138 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 221 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

    ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்.
    • இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் உள்ள தனியார் வங்கியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி ரூ. 40 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சம்பவம் குறித்து கொள்ளையடிக்கப்பட்ட தனியார் வங்கி மேலாளர் காவல் அதிகாரிகளிடம் கூறும் போது, "முகமூடி அணிந்த மர்ம நபர் எனது அறைக்கு வந்து துப்பாக்கியை என் கழுத்தில் வைத்து, ரூ. 40 லட்சத்தை கொடுக்குமாறு மிரட்டல் விடுத்தார். பணத்தை கொடுக்காத பட்சத்தில் அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்."

    "நான் காசாளர் ரோகித்-ஐ அழைத்து ரூ. 40 லட்சத்தை கொண்டுவரச் சொன்னேன். பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்," என கூறினார்.

     


    இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை பெற்று இருப்பதாகவும், அதில் உள்ள வீடியோக்களை கொண்டு குற்றவாளியை விரிவில் பிடிப்போம் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் ராம்சேவாக் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    பட்டப் பகலில் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.

    அதில், "உ.பி. குற்ற செய்தி: வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி கொள்ளையரின் துப்பாக்கியை கண்டு அஞ்சியது. ரூ. 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோவும் உண்மை, பாஜக ஆளும் உ.பி.-யில் சட்டம் ஒழுங்கு நிலைமையின் உண்மையும் இதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • உள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன்
    • லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத்தை சுட்டிக்காட்டி பெண்ணின் சாட்சியையும் மீறி இளைஞருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரைலியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 வயது இந்து பெண்ணை காதலித்த திருணம் செய்த நபர் முஸ்லீம் என்று பின்னரே தெரியவந்தது என்றும் அவர் ஏமாற்றப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் தோன்றிய அந்த பெண் புகாரில் கூறப்பட்டது உண்மைதான் என்று கடந்த ஜூலை 31 ஆம் தேதி சாட்சி சொல்லியிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையிலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றிய அந்த பெண், தஉள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன் பிறழ் சாட்சியம் வழங்கியுள்ளார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ரவிக்குமார் திவாகர் லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவிக்குமார் கடந்த 2022 இல் ஞானவாபி மசூதியில் இந்து கோவில் இருபதுகுறித்து ஆய்வு நடந்த தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி முகத்தை மூடி அமர்ந்துள்ளனர்
    • பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    உ.பியில் ஸ்கூல் ஃபீஸ் கட்டாத 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொளுத்தும் வெயிலில் அமர வைத்து பிரின்சிபல் வீடியோ எடுத்துள்ளார். ஃபீஸ் கட்டவில்லை என்றால் இதுதான் நிலைமை என்று உணர்த்தும் வகையில் அந்த வீடியோவை அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாரத்நகரில் இயங்கி வரும் சியாம்ராஜி தனியார் பள்ளியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி தங்களது முகத்தை மூடி அமர்ந்திருக்கும்போது பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

    மேலும் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்களை இந்த முறை மன்னிப்பேன் என்றும் ஆனால் இனிமேலும் கட்டவில்லை என்றால் அவர்கள் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் வீடியோ மூலம் பெற்றோர்களுக்கு அந்த பிரின்சிபல் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
    • ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கான்பூர்:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடந்தன. சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி கடந்த 27-ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்குத் தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 179 வெற்றியுடன் 5வது இடத்தில் உள்ளது.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.
    • வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார்.

    கான்பூர்:

    வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    வங்கதேச அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசனைச் சந்தித்து, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.

    ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×