என் மலர்
உத்தரப் பிரதேசம்
- தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.
- ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது
கல்யாணத்தில் டி.ஜே பாடல் போடும் தகராறில் மாப்பிள்ளை பக்க விருந்தினர் பெண் வீடு சார்பாக வந்த விருந்தினரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளில் டி.ஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒலிபரப்பும் டிரண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தில், தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.
ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதானமாகி நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் மாப்பிள்ளை வீடு சார்பில் திருமணத்துக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஆத்திரம் அடங்காமல் பெண் வீடு சார்பில் வந்த விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும்போது வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை பக்க உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
- தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சிம்ரன் குப்தா. மாநில அளவிலான அழகி போட்டிகளில் பட்டம் வென்ற அவர் டெல்லியில் தங்கியிருந்து மாடலிங் துறையில் கொஞ்சம் காலம் ஈடுபட்டு வந்தார்.
கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் அழகை மட்டும் நம்பினால் சம்பாதிக்க முடியாது என முடிவு செய்தார். இதனால் தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.
தற்போது இவரின் இந்த டீக்கடை யூடியூபர்களால் பிரபலமாகி வர ஏராளமானோர் அவருடைய கடைகளில் குவிந்து வருகிறார்கள். டீக்கடையில் நின்றபடி சிம்ரன் குப்தா டீ தயாரிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் மணல் கொட்டப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.
- போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் மண்ணை கொட்டிய லாரி டிரைவர் தப்பி ஓடிய நிலையில், லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ் சிங் ரெயில் நிலையே அருகே ரெயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்ததும், அவர் ரேபரேலியில் இருந்து ரகுராஜ் சிங் நிலையம் வரவிருந்த ரெயில்லை தகவல் கொடுத்து நிறுத்தினார்.
இதனால் பயணிகள் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது. பின்னர் தண்டவாளத்தில் கொட்டிய மணலை அகற்றியபின் ரெயில் சேவை தொடங்கியது.
அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், அதற்கு மணல் கொண்டு வந்த லாரி டிரைவர் தண்டவாளத்தில் மணலை கொட்டிவிட்டு சென்றிக்கலாம் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
மணலை கொட்டிச் சென்ற டிரைவர் போலீசார் தேடிவருகின்றன. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் தலைமை பூசாரி நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார்.
- கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்.
உத்தரப் பிரதேச மாநிலம் கசியபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோவில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் [Narsinghanand] நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஆன பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாஸ்னா தேவி கோவில் முன் ஏராளமானோர் திரண்டு நேற்று இரவு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் 10 முதல் 20 பேரை சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காசியாபாத்தில் லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ நாணந்த் கிசோர் குர்ஜார் பேசுகையில்,அவர்கள் கோவில் மீது கல்லெறிந்துள்ளனர். கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல். இது மொத்த இந்துத்துவா மீதுமான தாக்குதல். போராட்டத்தில் லத்தி சார்க் செய்து போலீஸ் நாடகமாடியுள்ளது.
10 முதல் 20 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருந்தால் அதன்பின் அவர்களுக்கு போராடும் துணிச்சல் வந்திருக்காது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கண்டனங்களை குவித்து வருகிறது.
- அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்துள்ளார்.
- மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை அந்தரங்கமாக வீடியோ எடுத்து 10 வகுப்பு மாணவர்கள் நால்வர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மதுரா பகுதியில் இயங்கி வரும் பள்ளியொன்றில் வேலை பெண் ஒருவர் ஆசிரியையாக வேலை செய்துவந்த்துள்ளார்.
பள்ளி முடிந்ததும் வீட்டில் 10 ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துவந்துள்ளார். அதில் ஒரு மாணவன் ஆசிரியை பாத்ரூமில் குளிக்கும்போது வீடியோ எடுத்து தன்னுடனும் தனது நண்பர்களுடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளான். அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மாணவன் சக மாணவர்கள் மூன்று பேருக்கு ஆசிரியையின் அந்தரங்க வீடியோவை அனுப்பிவைத்துள்ளான். அந்த மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த ஆசிரியை தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார்.
ஆனால் மிஷன் சக்தி எனப்படும் தற்கொலைக்கெதிராக கவுன்சிலிங் வழங்கும் அமைப்பு அவருக்கு உதவியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் வீடியோ எடுத்த 10 வகுப்பு மாணவனும் அவனக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
- மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக BILSERI பாட்டிலை வழங்கிய உதவியாளர்
- போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அழிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக போலியான BILSERI பாட்டிலை அவரது உதவியாளர் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது..
இதனையடுத்து, போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
- முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லக்னோ:
இரானி கோப்பை தொடருக்கான இறுதி போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்191 ரன்னில் ஆட்டமிழந்தார். துருவ் ஜுரல் 93 ரன்னும், சாய் சுதர்சன், இஷான் கிஷன் தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான் தலா 3 விக்கெட்டும், மோகித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 5 நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக தனுஷ் கோட்யான் 114 ரன்களும் பிரித்வி ஷா 76 ரன்களும் அடித்தனர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த முன்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
- முதலில் ஆடிய மும்பை அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லக்னோ:
இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்191 ரன்னில் ஆட்டமிழந்தார். துருவ் ஜுரல் 93 ரன்னும், சாய் சுதர்சன், இஷான் கிஷன் தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான் தலா 3 விக்கெட்டும், மோகித் அவஸ்தி 2விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி நான்காம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 76 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் சரன்ஷ் ஜெயின் 4 விக்கெட்டும், மனவ் சுதார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
- 60 வயது முதியவரையும் 25 வயது இளைஞராக மாற்றும் அதிநவீன டைம் மெஷின் உள்ளது
- இவர்களிடன் ரூ. 10.75 லட்சம் ஏமாந்த பெண்மணி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்
இளமையை மீட்டுத் தருகிறோம் எனக்கூறி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதி நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. உ.பி கான்பூரில் உள்ள கிட்வாய் நகர் பகுதியில் தெரபி சென்டர் நடத்தி வரும் ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தூபே வயதான மற்றும் நடுத்தர வயத்துடயவர்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
60 வயது முதியவரையும் 25 வயது இளைஞராக மாற்றும் அதிநவீன டைம் மெஷினை தாங்கள் இஸ்ரேலில் இருந்து வாங்கி வந்துள்ளோம் என்று விளம்பரப்படுத்தி பலரை இவர்கள் தங்கள் தெரபி சென்டருக்கு ஈர்த்துள்ளனர். அந்த டைம் மெஷின் மூலம் ஆக்சிஜன் தெரபி செய்து இளமையை மீட்டுத்தருகிறோம் என்று கூறி ரூ.90,000 கட்டணமாக வசூலித்துள்ளனர்.
இவர்களிடன் ரூ. 10.75 லட்சம் ஏமாந்த பெண்மணி ஒருவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவரை சுமார் ரூ.35 கோடி வரை அவர்கள் மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் வருவதை அறிந்து கம்பி நீட்டிய தம்பதியை உ.பி காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.
- இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- விபத்தில் 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி டிராக்டர் டிராலி மீது மோதி தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வாரணாசியை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பதோஹியில் கூரை அமைக்கும் பணிக்காக சென்றனர். அங்கு பணியை முடித்து விட்டு நள்ளிரவில் 13 தொழிலாளர்களும் டிராக்டரில் வாரணாசிக்கு திரும்பினர்.
தொழிலாளர்கள் 13 பேரும் டிராக்டரின் பின்பக்கம் டிராலியில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் மிர்சாபூர் மாவட்டம் கச்சுவா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி டிராக்டர் டிராலியில் பயங்கரமாக மோதியது.
இதில் டிராக்டர் டிராலி நொறுங்கி அதில் இருந்த தொழிலாளர்கள் 13 பேரும் இடிபாடுகளில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு பணி தாமதமானது.
மிர்சாபூர் போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் பானு பிரதாப் (வயது25), விகாஸ்குமார் (20), அனில் குமார் (35), சூரஜ்குமார் (22), சனோகர் (25), ராகேஷ்குமார் (25), பிரேம்குமார் (40), ராகுல்குமார் (26), நிதின் குமார் (22), ரோஷன் (27) என தெரியவந்தது.
மேலும் தொழிலாளர்கள் ஆகாஷ் (18), ஜமுனி (26) அஜய்சரோஜ் (50), ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் பனராஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த தொழிலாளர்கள் வாரணாசியை அடுத்த மிர்சா முராத் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
விபத்தில் 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்
- அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.
செல்போனில் போலி அழைப்புகளால் நடக்கும் ஏமாற்று வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக போலி அழைப்பினால் அரசப் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் பணியாற்றி வந்தவர் 58 வயதான மால்தி வர்மா[Malti Verma]. இவருக்கு காலேஜ் செல்லும் வயதில் மகள் ஒருவரும் மற்றொரு மகளும் உள்ளனர் .
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்த மால்தியின் மொபைல் எண்ணுக்கு வாட்சப் கால் ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை செய்தவரின் ப்ரொபைல் டிஸ்பிலேவில் போலீஸ் உடையணிந்த ஒருவரின் படம் இருந்துள்ளது.
போனை எடுத்து மால்தி பேசிய நிலையில் மறுபுறம் இருந்து பேசிய நபர், 'உங்களின் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டுள்ளார். நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். பணம் அனுப்பிய பின்னர் அவர் பத்திரமாக வீடு வந்து சேர்வார்' என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு பதற்றமடைந்த மால்தி தனது மற்றொரு மகளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி வாட்சப் கால் வந்த நம்பரை மகளிடம் சொல்லியுள்ளார். அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.
மேலும் காலேஜில் இருந்த சகோதரிக்கும் போன் செய்து அவர் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தி தாய்க்கு ஆறுதல் அளித்துள்ளார். ஆனாலும் பதற்றத்துடனேயே இருந்த மால்தி வீடு திரும்பியதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.போலி அழைப்பு தொடர்பாக மால்தி யின் குடும்பம் புகார் அளித்த நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்தார்
- சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் கன்னத்தில் அறைந்து சாதி பெயரை சொல்லி திட்டினான்.
உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் குடும்பத்தோடு வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி மாநிலம் அமேதியில் பவானி நகர் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சுனில் குமார் [35 வயது], அவரது மனைவி பூனம் பாரதி மற்றும் இரு மகள்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தனது குடும்பத்துக்கு சந்தன் வர்மா என்ற நபரால் அச்சுறுத்தல் இருப்பதாக மனைவி பாரதி ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், உடல் நிலை சரியில்லாத தனது மகளுக்கு மருந்து வாங்குவதற்காக ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு பாரதியும் அவரது கணவர் சுனில் குமாரும் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சந்தன் வர்மா என்ற நபர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் என்னைக் கன்னத்தில் அறைந்தான், அப்போது அங்கு வந்த கணவரையும் என்னையும் சாதி பெயரை சொல்லி திட்டினான்.
நடந்ததைப் போலீசில் சொன்னால் குடும்பத்தே கொன்று விடுவதாக மிரட்டினான். எனவே எங்களது உயிருக்கு சந்தன் வர்மாவால் அச்சுறுத்தல் உள்ளது என்று SC/ST பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாரதி கடந்த மாதம் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸ் அதை அலட்சியம் செய்ததாலேயே தற்போது இந்த கொலைகள் நடத்தக்கதாக கண்டனம் எழுந்துள்ளது. குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் கொலைகளுக்கு விரைந்து நீதி வழங்கப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.







