20 பேரை சுட்டுத் தள்ளுங்க.. நபிகள் குறித்து பேசியதால் வெடித்த போராட்டத்தை ஒடுக்க பாஜக எம்எல்ஏ ஐடியா

கோவில் தலைமை பூசாரி நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார்.கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்.
20 பேரை சுட்டுத் தள்ளுங்க.. நபிகள் குறித்து பேசியதால் வெடித்த போராட்டத்தை ஒடுக்க பாஜக எம்எல்ஏ ஐடியா
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் கசியபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோவில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் [Narsinghanand] நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஆன பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாஸ்னா தேவி கோவில் முன் ஏராளமானோர் திரண்டு நேற்று இரவு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் 10 முதல் 20 பேரை சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காசியாபாத்தில் லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ நாணந்த் கிசோர் குர்ஜார் பேசுகையில்,அவர்கள் கோவில் மீது கல்லெறிந்துள்ளனர். கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல். இது மொத்த இந்துத்துவா மீதுமான தாக்குதல். போராட்டத்தில் லத்தி சார்க் செய்து போலீஸ் நாடகமாடியுள்ளது.

10 முதல் 20 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருந்தால் அதன்பின் அவர்களுக்கு போராடும் துணிச்சல் வந்திருக்காது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கண்டனங்களை குவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com