என் மலர்
இந்தியா

டீ வியாபாரத்தில் அசத்தும் அழகி- வீடியோ வைரல்
- கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
- தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சிம்ரன் குப்தா. மாநில அளவிலான அழகி போட்டிகளில் பட்டம் வென்ற அவர் டெல்லியில் தங்கியிருந்து மாடலிங் துறையில் கொஞ்சம் காலம் ஈடுபட்டு வந்தார்.
கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் அழகை மட்டும் நம்பினால் சம்பாதிக்க முடியாது என முடிவு செய்தார். இதனால் தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.
தற்போது இவரின் இந்த டீக்கடை யூடியூபர்களால் பிரபலமாகி வர ஏராளமானோர் அவருடைய கடைகளில் குவிந்து வருகிறார்கள். டீக்கடையில் நின்றபடி சிம்ரன் குப்தா டீ தயாரிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story






