search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puppy"

    • 1 மணி நேரம் போராடி மீட்ட போலீசார்
    • பாலத்தின் இடையே ,தலையை மாட்டிக் கொண்டு கால்கள் கீழே தொங்கியவாறு நாய்குட்டி இருந்தது.

    புதுச்சேரி, நவ.13-

    புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் முழபிலாங்காடு பைபாஸ் சாலை உள்ளது.

    இந்த சாலையில் உள்ள பாலத்தின் இடுக்கு சந்தில் நாய்க்குட்டி ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் ஒலமிட்டபடி இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் நாய்குட்டியை மீட்க முயன்றனர்.

    ஆனால், பாலத்தின் இடையே ,தலையை மாட்டிக் கொண்டு கால்கள் கீழே தொங்கியவாறு நாய்குட்டி இருந்தது. இதனால் எத்தனை முயற்சி செய்தும் அவர்களால் நாய்க்குட்டியை மீட்க முடியவில்லை இதனையடுத்து பள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அப்பகுதியினர் உதவியுடன் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமன், காவலர் ஜீஜேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி கடும் முயற்சிக்குப் பிறகு சிறு கீறல் கூட இல்லாமல் நாய்க்குட்டியை மீட்டனர்.

    வெளியே வந்தவுடன் மகிழ்ச்சியில் நாய்க்குட்டி துள்ளி குதித்து ஓடியது.

    நாய்க்குட்டிக்காக அதிக அக்கறை எடுத்து மீட்ட பள்ளூர் போலீசாருக்கு புதுவை மற்றும் கேரள மாநிலத்தில் பாராட்டுக்கள் குவிகிறது.

    • சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.
    • நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார்.

    கரூர்:

    கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் வகையை சேர்ந்த இரண்டு ஜோடி நாய்க்குட்டிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தார். தற்போது அவை ஈன்று வரும் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.

    இந்த அரிய வகை நாய்கள் குறித்த தகவல்களை அவர் வலைதளங்களில் வெளியிடுவார். அதைப் பார்த்த கேரளா போலீசார் கடந்த ஆண்டு கரூர் வந்து 4 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.

    இதற்கிடையே சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.

    பின்னர் கடந்த மாதம் கரூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு ராகுலின் உதவியாளர்கள் வந்தனர். பின்னர் நாய் குட்டியின் வளர்ப்பு முறை குறித்து கேட்டு அறிந்தனர். அதன் பின்னர் கேரளா வந்த ராகுல் காந்தியை சரவணன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதை தொடர்ந்து தொழிலதிபர் சரவணன் 3 ஜாக் ரசல் டெரியர் வகை நாய் குட்டிகளுடன் அவரை சந்தித்தார்.

    அப்போது மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார். அந்த நாய்க்குட்டி பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அதனால் மீண்டும் கரூருக்கு கொண்டு வரப்பட்டு 60 நாட்கள் ஆன பின்னர் அதனை டெல்லி க்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தி வீட்டில் அவரிடம் சரவணன் நேரில் வழங்கினார். இது தொட ர்பாக சரவணன் கூறும்போது,இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார். அந்த தருணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்றார்.

    • குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது.
    • கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று 3 குட்டிகளை போட்டிருந்தது.

    அதில் ஒரு குட்டி வீட்டு கழிவறை குழாய் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. கழிவறை குழாயின் ஒரு பகுதி உடைந்திருந்தது குழாயின் மேல் பகுதி வழியாக சென்ற நாய்க்குட்டி கால் வழுக்கி ஓட்டைக்குள் விழுந்தது.

    குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது. அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.

    குழாய்க்குள் இருந்து வந்த நாய்க்குட்டியின் முனகல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் விலங்கு நல ஆர்வலரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரது உதவியை நாடினார்.

    அங்கு சென்றார் விலங்கு நல ஆர்வலர் செல்லா. குழாயில் சிக்கிய நாய்க்குட்டியை கழிப்பறை ஓட்டை வழியாக வெளியே எடுக்க முயற்சித்தார். அது பலன் அளிக்கவில்லை. கழிப்பறையை உடைத்தால் தான் குட்டியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் முருகன் கழிப்பறையை முழுமையாக உடைக்க முடிவு செய்தார். இதையடுத்து கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

    சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அந்த நாய்க்குட்டியை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். 6 மணி நேரத்திற்கு மேலாக குழாயில் சிக்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி வெளியே வந்ததும் தனது தாயின் அரவணைப்பை தேடி அழுதுகொண்டே வேகமாக ஓடி தனது தாயுடன் சேர்ந்து பால் குடித்தது.

    இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலர் செல்லா மற்றும் வீட்டு உரிமையாளர் முருகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா, பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. #MaheshSharma #PriyankaGandhi #Puppy
    நொய்டா:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜனதா கட்சியினர் ‘பப்பு’ என்று கேலியாக கூறுவது வழக்கம். இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா உத்தரபிரதேச மாநிலத்தில் தனது தொகுதியில் உள்ள சிகந்தராபாத் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “தான் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்று பப்பு கூறுகிறார்.



    மாயாவதி, அகிலேஷ் யாதவ், பப்பு.... இப்போது பப்புவின் பப்பியும் (பிரியங்கா) வந்திருக்கிறார். பிரியங்கா தேசத்தின் மகள் அல்ல, காங்கிரசின் மகள். அவர் என்ன புதிதாக கொண்டுவரப்போகிறார்? எதிர்காலத்தில் அவர் அரசியலில் நீடிக்கமாட்டார்” என்று கூறினார். அதோடு மம்தா பானர்ஜி, குமாரசாமி ஆகியோரையும் அவர் கேலி செய்தார்.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேற்கு உத்தரபிரதேச காங்கிரஸ் இணை பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார், “இதெல்லாம் அவரது எண்ணத்தில் இருப்பதால் தான் வார்த்தைகளாக வந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் ஒரு பெண் மீது இப்படிப்பட்ட வார்த்தையை கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.  #MaheshSharma #PriyankaGandhi #Puppy
    ×