என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது
    • திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,357 பேர் தங்களது குடும்பங்களுடன் மீண்டு இணைந்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    கும்பமேளாவில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்துடன் சேர்க்க சிறப்பு நடவடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தார்.
    • கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்.

    லக்னோ:

    மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி அதிரடியாக நீக்கி உள்ளார்.

    அவருக்கு பதில் அவரது தந்தை ஆனந்த் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜி கவுதம் ஆகியோரை அந்தப் பொறுப்பில் நியமித்துள்ளார்.

    தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கணவரின் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • கழுத்து பகுதியில் ரசாயனத்தை ஊசி மூலம் செலுத்தி குப்பைத் தொட்டி பகுதியில் தூக்கி வீசினர் என புகார்.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் விகாஸ் தியாகி என்பவர் திருமணம் ஆகாமல் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். விகாஸ் தியாகியுடன் வாழ்ந்த அந்த பெண் கற்பழிப்பு, கொலை முயற்சி என அடுக்கடுக்கான புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மூன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    இறுதியாக கணவரின் நண்பர்கள் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பிறப்புறுப்பில் பாட்டிலை திணித்ததாகவும் பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோதுதான், புகார் பொய் எனத் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை போலீசார் கைது சிறையில் அடைத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூன மாதம் அந்த பெண் விகாஸ் தியாகியுடன் லிவ்-இன் தொடர்பில் இருந்துள்ளார். விகாஸ் தியாகியின் வீடு காசியாபாத்தில் உள்ள கவி நகரில் உள்ளது. தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாக விகாஸ் தியாகி மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், பாலியல் கொடுமை செய்ததுடன், வயிற்றில் எட்டி உதைத்ததால் கருவில் குழந்தை இறந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    தன்னுடைய புகாரில் இதை தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால், நீதிபதி முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்த போது தன்னுடைய புகாரில் கூறியதில் இருந்து மாற்றி தெரிவித்துள்ளார். எங்களுடைய உறவு சம்மதத்துடன்தான் நடைபெற்றது. தியாகி என்னை அடிக்க மட்டுமே செய்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளை கடைபிடிக்காததால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஆகஸ்ட் மாதம் ஜூன் மாதம் கொடுத்த வழக்கில் தனது வாக்குமூலத்தை மாற்றுமாறு போலீஸ் நிலையத்தை அணுகியுள்ளார். அப்போது தியாகி, அவரது மைத்துனர் மற்றும் ஒரு நண்பர்களில் ஒருவர் தன்னை மிரட்டி, அவர்களுக்கு சாதமாக வாக்குமூலம் அளிக்க வைத்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

    பின்னர் அதேமாதம் போலீசாரை அணுகி, தான் தியாகியை திருமணம் செய்து கொண்டதாகவும், முன்னதாக தான் அளித்த புகார அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே விசயத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

    4 மாதம் கழித்து கடந்த ஜனவரி மாதம், அங்கீகாரம் இல்லாத திருமணம் தியாகி மற்றும் அந்த பெண்ணுடைய தாயார் நடத்தி வைத்ததாகவும், திருமணம் ஆசைவார்த்தி கூறி தன்னை கற்பழித்ததாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், தியாகி தன்னை அடித்து உதைத்ததுடன், மதுபானத்தை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். அத்துடன் தியாகி மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் 2-ஆவது முறையாக போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் விசாரணை நடத்தியபோது கூட்டு பாலியல் வன்கொடுமை அந்த பெண்ணின் குற்றச்சாட்டு பொய் எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் தீக்காயத்திற்கான ஆதாரம் இருந்துள்ளது. இதனால் கடந்த 17-ந்தேதி தியாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, தியாகியின் நண்பர்கள் தன்னை கடத்தி சென்றதாகவும், தான் சுயநினைவு இழக்கும் வகையில் மர்ம் பொருள் அடங்கிய ஊசி செலுத்தியதாகவும், பின்னர் அவர்கள் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் தன்னுடைய கழுத்துப் பகுதியில் ஏதோ ரசாயன பொருளை செலுத்தியதாகவும், அத்துடன் தன்னுடைய பிறப்புறுப்பில் பாட்டிலை செலுத்தியதாகவும், அதன்பின்னர் தன்னை அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை நடைபெற்றது தெரிவித்துள்ளார்.

    போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்றதாக கூறிய இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்து இரவு 8.30 மணிக்கு வெளியேறியதும், பின்னர் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு 10.19 மணிக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. அவருடயை வீட்டிற்கு சாதாரணமாக செல்வதுபோல் சென்றது தெரியவந்தது.

    தியாகி நண்பர்கள் அந்த நேரத்தில் எங்கிருந்தார்கள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது அவர்கள் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடங்களில் இல்லை எனத் தெரிய வந்தது. இதற்கிடையே மருத்துவ பரிசோதனையில், ரசாயன பொருளை அவரே அவர் மீது ஊற்றியது தெரியவந்தது.

    பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் ஏதோ திட்டத்துடன் தியாகி நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    • மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.
    • பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.

    இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய அமித் குமார் ஜா (27) என்பவரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்தனர்.

    அமித் குமார் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

    • மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
    • 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்நாடு, வெளிநாடு மதுபானங்கள் சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகை சில்லறைகள் கடைகள் திறப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உ.பி. மாநில அரசின் கலால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கட்டணமாக 1987.19 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 6-ந்தேதி குலுக்கல் மூலம் விண்ணப்பிதவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் எனத் கலால்துறை ஆணையர் ஆதர்ஷ் சிங் தெரிவித்துள்ளார். மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

    • 2023-ல் சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
    • 8 மாதம் சிறையில் இருந்து நிலையில் ஜாமினில் விடுதலை ஆன பின், மீண்டும் சிறுமியை கடத்தியுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறைக்கு சென்ற வாலிபர், ஜாமினில் வெளியில் வந்து அதே சிறுமியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் படோஹி என்ற இடத்தை சேர்ந்தவர் ஆசிஃப் கான் என்ற சோட்டே பாபு (22), இவர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கற்பழித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளிக்க, சோட்டே பாபு கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது போலீசார போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட சோட்டோ பாபு சிறையில் அடைக்கப்பட்டார். 8 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், ஜாமின் பெற்று விடுதலை ஆனார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அதே சிறுமியை (17) தற்போது கடத்திச் சென்றுள்ளார்.

    அவரது தந்தை மகளை தேடி வந்த நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 137(2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.

    ஏற்கனவே சிறுமியை கடத்தி சென்று கற்பழித்த வழக்கில கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பிய வாலிபர், அதே சிறுமியை மீண்டும் கடத்திச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியுடன் நிறைவு பெற்றது.
    • 66 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    மகா கும்பமேளா விழா கடந்த மாதம் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட குவிந்தனர்.

    45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியான நேற்று இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இந்த 45 நாட்களும் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பக்தர்களின் அலைமோதிய கூட்டத்தால் பிரயாக்ராஜ் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்த நிலையில் மகா கும்பமேளா விழா முடிவடைந்ததையொட்டி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து பிரயாக்ராஜ் சென்றார். அங்கு கங்கை நிதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

    பின்னர் அவர் பேசும்போது பிரயாக்ராஜ் மக்களை பெரிதும் பாராட்டினார். மகா கும்பமேளா குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

    எந்தவொரு தயக்கம், சிரமமின்றி கும்பமேளா விழாவை தங்கள் வீட்டி விழாவாக கருதிய பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய உபசரிப்பு பாராட்டுக்குரியது.

    மகா கும்பமேளா விழா சுமூகமாக நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் சிறப்பான முறையில் மகா குமப்மேளா நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. சாதுக்கள் உள்பட 66 கோடி பக்தர்கள் புனித சங்கமத்தில் நீராடினர்.

    பிரயாக்ராஜ் மேளா ஆணையம், நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சரியான ஆதரவும் இருந்தால், எந்த முடிவையும் அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அதன் விளைவு இன்று இந்த வடிவத்தில் நம் முன் வந்துள்ளது.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    • மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.
    • குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

    உத்தரப் பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் தோழிக்கு மாலை சூடுய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பரேலியில் நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி மேடைக்கு வந்தார். குடிபோதையில் இருந்த ரவீந்தனர்குமார் மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.

    இதனால் திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரவீந்தரகுமாரின் செயலால் கோபமடைந்த ராதா, அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று கத்திக் கூச்சலிட்டார். சமதானப்படுத்த முயன்றும் குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

    இதன் பின்னர் தகராறு அதிகரித்து இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை தொடங்கியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவரை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். அதன் பிறகு போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

    மணமகன் மீது ராதா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் மணமகளின் தந்தை திருமணத்திற்கு முன்பு ரூ.2.5 லட்சமும், திருமண நாளில் ரூ.2 லட்சமும் வரதட்சணை கொடுத்துள்ளார். எனவே மணமகன் ரவீந்திரகுமார் உட்படகுடிபோதையில் மணப் பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது

     குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சணை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

    • மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
    • அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

    உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்தது. பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இதற்காக ஒர் இடைக்கால நகரமே உருவாக்கப்பட்டது.

    கடந்த 45 நாட்களாக எந்தவித பெரிய அசம்பாவிதம் இன்றி மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்களும், பல்தர்களும் அலை அலையாக வந்தனர்.

    இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

    இதுதொடர்பாக உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், கும்பமேளாவில் புனித நீராடுவோர் எண்ணிக்கை 45 கோடி எட்டும் என எண்ணியிருந்த நிலையில், 66 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.

    மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    • திரிவேணி சங்கமத்தில் கோடிக் கணக்கானோர் புனித நீராடியுள்ளனர்.
    • பிரயாக்ராஜில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. இதையடுத்து கும்ப மேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஏராளமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வருகை தந்த நிலையில், அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

    இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர உத்தரபிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாள் மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுபெறுகிறது. மகா கும்பமேளா நிறைவு பெறுவதையொட்டி, நிறை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முதலே லட்சக் கணக்கானோர் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுக்க தொடங்கினர். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜிக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்- யோகி ஆதித்யநாத்
    • துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா?- அகிலேஷ் யாதவ்

    மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றன. நாளையுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

    கடந்த மாதம் மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக உத்தர பிரதேச அரசு தெரிவித்தது. ஆனால் உயிரிழந்தவர்கள் அதிகம். உண்மையான எண்ணிக்கைகை மாநில அரசு வெளியிட மறுக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பின.

    இதற்கிடையே உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் "கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் யோகி ஆதித்ய நாத் கழுகுகள் எனக் கூறியதற்கு அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களுடைய அன்பானவர்களை தேடிக்கொண்டிருக்கும் நபர்களை அவமதித்துள்ளார் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தற்போது கூட, ஏராளமான மக்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் இழந்த தங்களுடைய சகோதரர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என அன்பானவர்களை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில மாயமாகியுள்ளனர்.

    துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருக்கும் ஒருவரின் உணர்வின்மையின் உச்சக்கட்டம் இது.

    மிகப்பெரிய அளவிலான துயர சம்பவம் நடைபெற்ற போது, முதலமைச்சர் நடத்திய ஆய்வு என்ன?. மகா கும்பமேளாவில் நடைபெற்ற உயிரிழப்புகள் மற்றும் குழப்பங்கள் யோகி ஆதித்யநாத் அரசின் தோல்விக்கு ஆதாரம்.

    லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள பாஜக அரசாங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இப்போது பிரயாக்ராஜில் கங்கை நீரின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள் மோதிக் கொள்வதைக் காண்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.
    • போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளையுடன் இந்நிகழ்வு நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே  போட்டி நிலவுகிறது.

    இதுபோன்ற சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்தால் சங்கமத்திற்குச் சென்று குளிக்க முடியாதவர்கள், அங்கிருந்து கொண்டு வரும் தண்ணீரைத் தெளித்து அல்லது வீட்டில் உள்ள தண்ணீரில் கலந்து குளிப்பதன் மூலம் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.

    இந்நிலையில் கும்பமேளாவில் புனித நீராட பிரயாக்ராஜ் சென்ற இடத்தில் தன் கணவருக்கு வீடியோ-கால் செய்து, போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

    கணவனால் கும்பமேளாவிற்கு வரமுடியாத காரணத்தால், அப்பெண் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.

    இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே வைரலானது. இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். கமன்ட் செக்ஷனில் பலர் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். 

    ×